Wednesday, June 17, 2020

SUR SAGAR



சூர் சாகரம்         J K   SIVAN 
                                                 
               நின் தாமரைப்பாதங்களே கதி 


எங்கு போனாலும் நமது சௌகர்யம், சுகம் , இதிலே தான் நம்  கவனம்.  கோவிலுக்கு சென்றால்  கண் பிரசாதத்தை தேடுகிறது. எங்காவது விநியோகம் நடக்கிறதா என்று கைகூப்பிக்கொண்டே  இறைவனை வணங்குகிறவர்கள்.

பக்தி பரவசத்தால் தன்னை இழந்து இறைவனோடு ஒன்றி அவனது ப்ரபாவத்தில் மூழ்கி ஆனந்தமான நிலையிலிருக்கும் மஹான்கள் இந்த உலக சிந்தனை துளியும் இல்லாதிருப்பவர்கள்.    அவர்களது வாக்கில் சத்யம் எதிரொலிக்கும். அவர்கள் எழுத்தில் கற்பனையில் உண்மை பிரதிபலிக்கும். நம்மால் காண முடியாததை ஆனந்தமாக கண்டு விமர்சிப்பார்கள்.

அப்படி ஒருவர் கண்ணற்ற சூர் தாசர். கண்ணன் அவர் மூச்சில் இருந்து வெளிப்பட்டு பாடலாக வெளிவந்து எவராலோ எழுத்திலோ இன்று நம் முன்னே புத்தகமாக நிற்கிறான். அவனை ரசிக்கவேண்டாமா? அதன் மூலம் சூர்தாஸின் இன்பத்தில் கடுகளவாவது அனுபவிக்க வேண்டாமா?

''ஹே மனமே வா உனக்கு ஒரு நல்ல வழி சொல்லித்தருகிறேன். அங்கே இங்கே ஓடாதே. அதோ பார் ஒளிவீசும் சிவப்பு நிறத்தில் தெரிகிறதா என்னவென்று? செந்தாமரைக் கண்ணனின் தாமரை மலர்ப் பாதங்கள்.

யாருடைய  பாதம் இது  என்றா  யோசனை?  அது தான் நமது நந்தகோபன் மகன் கிருஷ்ணன்  திருவடி. . எவன் திருவடி துணை இருந்தால் பயங்கள் நீங்குமோ அவன் திருவடி. .

அரிது அரிது மானுடராகப் பிறத்தல் அரிது. அப்படிப் பிறந்து, இந்த வாழ்க்கையாகிய  சம்சார கடலை தாண்டவேண்டாமா? அதற்கு சாதுக்களின் சத் சங்கம் தேவை இல்லையா?

இதோ என்னை பார். இரவு எது பகல் எது எனக்கு? எல்லாமே இருட்டு. தூக்கம் ஏது? உடலில் உஷ்ணம் குளிர்ச்சி, மழை வெயில் படுவது தெரிகிறது. அனுபவிக்கிறேன். -- என்கிறார்  சூர் தாஸர். 

என் வாழ்வில் நானும் எத்தனையோ வருஷங்கள்  இந்த நாட்டிலும் வெளி நாட்டிலும். அற்ப சுகம் தரும் பணத்தை  நாடி கொடிய, கருமிகளுக்கு உழைத்தேன். என்ன பிரயோஜனம்?

சூர் தாசர்  சொல்வது காதில் விழுகிறதா?
நான் யார்? அந்த கோவிந்தனின் தாசானு தாசன். நவ வித பக்தி என்பார்களே அதில் விருப்பம். அது என்னவா? சொல்கிறேன். என் ஹரியின் பெருமைகளை கேட்பது, 
அவன் பெருமைகளை நாவினிக்க சொல்வது, பேசுவது, ஸ்மரிப்பது, 
கணநேரமும் விடாமல் அவனை நினைவினில் நிறுத்திக் கொள்வது, பிரார்த்திப்பது, 
அவன் செந்தாமரை திருவடிகளில் சரணடைவது, 
நறுமண வாசமிகு மலர்களால் அவனை அர்ச்சிப்பது,
 வாசனாதி திரவியங்களால் அவனை மகிழ்விப்பது, 
அவனுக்கு உற்ற நண்பனாக சேவை புரிவது, 

இதையெல்லாம் விடு....
 என்னையே அவனுக்காக மறந்து இழந்து அவனுக்கு என் உயிர் உடல் பொருள் ஆவி அனைத்தும் அர்ப்பணிப்பது.... 
போதுமா ??

போதும் போதும் போதும்..... என்கிறார் சூர்தாஸ் இந்த அருமையான பாடலில்:

Bhajahoon re man sri nand nandan abhaya charan arvind hey
Durlabh manav janam satsange tar jaave bhav sindh re
Sheet Aatap Vatavariyat , ae din aavanijaani re
Biphale sevenu kripan durjan chapal sab sukh lagi re…
Sravan Kirtan Smaran Vandan Paadsevan Dasya re
Poojan Sakhijan Atmanivedan , Govind Das abhilashi re…
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare .

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...