Monday, June 1, 2020

BOATMAN


                                                    ஓடக்காரன்   J K  SIVAN 


கிருஷ்ணனே கட்டுண்ட மந்திர சக்தியுடைய  தூய பக்தி ராதையிடம் மட்டுமே இருந்தது.
ராதையின்  உயிர் மூச்சு  கிருஷ்ணன்.   கிருஷ்ணனின்  ஜீவ சக்தி ராதை.   இரண்டையும் எப்படி  தனித்  தனியாக பிரிக்க முடியும், பார்க்க முடியும்?.  கிஷ்ணனின் குழலோசையில் லில்  தனை மறந்து, உலகை  மறந்து  ஏதோ  ஒரு  நாக  பாசத்தில்  கட்டுண்ட எத்தனையோ  ஜீவன்களில், கோபியரில்,  ராதை முதன்மை யானவள்.   தன்னை காட்டிலும்  கிருஷ்ணன் குழலை அதிகம் விரும்புகிறானோ என்று எண்ணி   கிருஷ்ணனின்  மூங்கில் புல்லாங் குழல் மீதே  பொறாமை கொண்டு அதை ஒளித்து வைத்தவள் ராதா..

ராதா லக்ஷ்மியின்  அவதாரம் என்று சொல்வது உண்டு.  ஒருதரம் கிருஷ்ணன் ராதா இருவரும் பிருந்தாவனத்தில் சந்தோஷமாக யமுனை நதிக்கரையில் மலர்க்கொடிகள் நடுவே  அவர்களின் ஏகபோக  சாம்ராஜ்யமான  மது வனத்தில்  மரத்தடியில் அமர்ந்து இருந்தனர். சுற்றிலும்  மான்களும் , மயில்களும் புடை சூழ்ந்து இருந்தன. தலைக்கு மேலே  பறவைகள் ஆனந்தமாக  வட்டமிட்டுக்கொண்டு  இருந்தன.

"உன் புல்லாங்குழல்  வாசிப்பை  சீக்கிரம் நிறுத்தமாட்டாயா கிருஷ்ணா? "  என்றாள்  ராதா
"ஏன்  ராதா  என்  பாட்டு  பிடிக்கவில்லையா"
''பிடித்ததால் தான் நிறுத்த சொன்னேன்!.
"பிடித்தால் ஏன்  நிறுத்தவேண்டும்?
"உனக்கென்ன வீட்டுக்கு போய் விளையாடுவாய், தூங்குவாய்,  நான்  எவ்வளவு வேலை செய்ய வேண்டும் தெரியுமா?  உன்  பாட்டில் மயங்கிவிட்டால்  என்னால்  ஒன்றுமே செய்ய முடியவில்லையே" என்றாள் ராதா
"அப்படி என்ன பெரிய வேலை  உனக்கு?
"உன்னை மாதிரி  சுதந்திரமாக   விளையாடிக்கொண்டு   ஓடித்  திரிபவளா  நான்?, எனக்கு  வீடு  வாசல் குடும்பம்  எல்லாம்  இருக்கிறதே''
அப்போ என்னையும்  கல்யாணம் பண்ணிக்கோ?"
ராதை வாய் கொள்ளாமல் உரக்க  சிரித்தாள்
ஏன் சிரிக்கிறாய் ராதா ?
"கிருஷ்ணா, ஒரே ஜீவன்  தன்னைத் தானே  கல்யாணம்  பண்ணிக்க முடியுமா?   கல்யாணம் செயது கொள்ள  இன்னொருத்தர் வேண்டாமா?   நாம்  ரெண்டு பேருமே  ஒண்ணு என்கிறபோது  ரெண்டாவது  ஆளு யாரு?  கல்யாணம்  என்பதற்கு  இரண்டு  மனித  ஜீவன்கள் அல்லவோ தேவை.   நீ இல்லாமல்  நான் இல்லை, நான் இல்லாமல் நீ  இல்லை.  இந்த உலகத்தில்  இரு  உடல்களுக்கு  தான்  கல்யாணம்  பண்ணுகிறார்கள்,  உள்ளத்துக்கு  கல்யாணம் எதற்கு?   அது  சரி  கிருஷ்ணா, நீ இன்னும்  கொ ஞ்ச நாளில்  ப்ருந்தாவனத்தை விட்டு போகப் போகிறாயாமே   ஊரில்  பேசிக்கொள்கிறார்களே .   ம்ம்   உனக்கென்ன?  மதுராவிற்கு  போய்   அங்கே  ராஜாவாகி விடுவாய்.  நிறைய  பேரை  கல்யாணம்  பண்ணிக்கொள்ள போகிறாயே  நான்  எதற்கு?

“யார் சொன்னது அப்படி.   ராதா நீ எனக்கு எப்போதும் வேண்டும் “

நான்  மட்டும்  வேண்டாமென்றா  சொன்னேன்?  என் மனத்தில்,  உன் உடலில் உயிர் உள்ளவரை  நீ இருப்பாய்,  நானும்  அவ்வாறே  உன் மனத்தில்,  உன்  உயிரோடு கலந்தவள்  என்று நீ சொல்லவே வேண்டாம்.  எனக்கே  அது தெரியும். நம்  தூய நட்பை, பாசத்தை, நேசத்தை,  அன்பை வெளிப்படுத்தும்.  இந்த புல்லாங்குழலை கேட்டுப்பார்.  அதற்கும்  நன்றாகவே  தெரியும்.


கிருஷ்ணா, மதுராவிற்கு போனதும்  .உனது  ராஜ்ய பரிபாலனத்தில், உனது  லோக க்ஷேம  காரியங்களில்,  பிரபஞ்ச சம்ரக்ஷண த்தில் என் அடையாளமான இந்த  புல்லாங்குழலை தொடவே  தொடாதே.  கையில் எடுக்காதே. அதைப்  பிரியாதே,  இடுப்பிலேயே   இருக்கட்டும். அது  நான்.!!  உன் சங்கு சக்கரம் மட்டுமே    உன் கையில் இருக்கட்டும் 

நீ  சந்தோஷமாக  இருக்கும்  நேரத்தில் மட்டும் , நீ  தனியாக உனக்கென்று  நேரம் கிடைக்கும் போது  மட்டும் இந்த குழலை எடு.  வாசி,  அதன்  ஒலி  நாம்  எங்கிருந்தாலும் என்னை உன்னிடம்  சேர்க்கும்.  நான் எங்கிருந்தாலும் அது  என் காதில் தேன் மாரியாக  பொழிந்து  என்  மனத்திலேயே  அடைக்கலமாகும்.  செயகிறாயா?

"நீ  என்னை  தேடி  வரவேண்டாம்.  நான்  உன்னை நாடி வரவேண்டாம்.  அது  பிரிந்து இருப்பவர்கள் செய்யவேண்டிய வேலை,  நமக்கு  ஏன்? நாம்  தான்   பிரிக்கவே  முடியாதவர்கள்  ஆயிற்றே.

ஒருநாள்  கம்சன் அனுப்பிய  அக்ரூரர் வந்தார்.  பிருந்தாவனத்தை பிரிந்து  கிருஷ்ணன்  மதுரா சென்றான்  கம்சனை  வதைத்தான்.  எண்ணற்ற அசுரர்களும் அரக்கர்களும்  அவன் நேரத்தை  எடுத்துகொண்டனர். சாந்தீப முனியிடம்  சென்று  பயின்றான்.  பின்னர் துவாரகை சென்றான் அரசனானான். அநேக   மனைவியரை மணந்தான். பாரதப்போரில்  ஈடு பட்டான். ஒருதரம்  கூட ராதையை நாடி செல்லவில்லை. அவளும் அவனைத்தேட வில்லை.

அவசியம்  என்ன  இருந்தது????

வெளிநாடுகளிலிருந்தேல்லாம் கூட நிறைய பேர்  இப்போதெல்லாம்  கோவர்தன  பரிக்ரமா  வுக்கு செல்கிறார்கள். மறக்கமுடியாத  அனுபவம் அது.   அங்கு  முதலில்  குசும் சரோவர் என்று ஒரு  ஏரி  இன்னும்  இருக்கிறது. இங்கு 5000 வருஷங்களுக்கு முன்பு  கிருஷ்ணன் கோபியர்களோடு களித்து  விளையாடி யிருக்கிறான்.  ஏரி இருக்கிறது.  கிருஷ்ணனை  நினைவு படுத்தும்  ஐடா. அவன்  இன்னும்  அங்கே   நினைவில் தான்   இருக்கிறான்.  சைதன்ய மகாபிரபு  500  வருஷங்களுக்கு முன்னர் ஆவலோடு  இங்கு வந்து பார்த்து  அதில் ஸ்நானம்  செய்திருக்கிறார்.  அங்கிருந்து  ஒரு  சில  மீட்டர்   தூரத்தில் கோவர்தன  கிரி பூமியிலிருந்து  வெளிப்பட்ட இடம்  உள்ளது. கர்க  சம்ஹிதை  சொல்லும்   கோவர்தன மலையின்  பிறப்பிடம்  இங்கு தான்.  தொடர்ந்து  சென்றால் வருவது  மானஸி கங்கா.   இதுவும் ஓர்  அற்புத  ஏரி.   இதுவுமே  கிருஷ்ணன் கோபியரோடு  கூடிக் களித்து   விளையாடிய இடம்.   இந்த ஏரி  யைப்பற்றி ஒரு ருசிகர கதை சொல்கிறேன்.

இந்த ஏரி  ஒரு  பெரிய பிரவாஹமாக  இருந்த  காலம்.  ராதையும்  மற்ற  சில  கோபியரும்  தங்களது வெண்ணை, பால்  சட்டிகளோடு   அக்கறை செல்லவேண்டும். படகுக்காக  காத்திருந்தபோது  ஒரு  படகு  வந்தது.  ஒடக்காரனோடு பேரம்  பேசி  கொஞ்சம் பால்  வெண்ணையை ஒடக்கூலியாக  தர அவனும் இருவரும்  ஒப்புக்கொண்டு  ஓடத்தில் அமர்ந்தார்கள்.  சற்று தூரம்  போனதும்  ஓடக்காரன் 'தகராறு பண்ணினான் 

' நீங்கள் இன்னும்  சற்று  அதிகமாக பால், வெண்ணை  பொருள்  கொடுத்தால் தான்   ஓடம் மேற்கொண்டு செல்லும்''  என்றான்.

ஓடம்   நின்றது. வேறு வழியின்றி  ராதையும் மற்றவர்களும்   அவன் கேட்ட அளவு தர  சம்மதித்தபின்  ஓடம்  நகர்ந்தது. இன்னும் சற்று தூரத்தில் நின்றது.

''ஏ  ஓடக்காரா,  இப்போது  எதற்கு ஓடத்தை   நிறுத்தினாய்?''  என்றாள் ராதா''

''நீங்க  இவ்வளவோ  பேர்  இந்த ஓடத்தில் ஏறி  ஜம்மென்று   உக்கார்ந்திட்டீங்க,  எனக்கல்லவோ தோள்  பட்டை  கை  விட்டுப்போவுது.  கொஞ்சம்   ரெஸ்ட்  எடுத்தா  தான்   துடுப்பு வலிக்க முடியும்.  உடல் வலியோடு பசியும்  சேர்ந்துடுச்சு.  முடிஞ்சா  கொஞ்சம்  கையை,  தோளை எல்லாம் அமுக்கி  விடுங்களேன்'' என்று  ஓடத்தில்  சாய்ந்து கொண்டான்.  ராதை மற்றவர்களோடு சேர்ந்து அவனுக்கு  கொஞ்சம்  பால், வெண்ணை  இனிப்பு  பலகாரங்களை கொடுத்தாள்.

'' அப்பாடி களைப்பும்  பசியும்  போச்சு.  கொஞ்சம் காலை  நீட்டி  படுக்கிறேன். ஒரு   குட்டி  தூக்கம் அவசியம்''  இவ்வளவு பேரிலே யாராவது  கொஞ்சம்  தோள் , கை,  காலைப் பிடிச்சு விடக்கூடாதா.''

''ஏ, ஓடக்காரா  பொறுமையை   ரொம்ப சோதிக்கறே நீ.  கோவம்   வந்தா உன்னை  ஓடத்திலேருந்து  தண்ணிலே  உருட்டி  விட்டுடுவோம் ஜாக்ரதை.  மரியாதையா ஓடத்தை  ஒட்டி  தப்பிச்சுக்கோ. ''  என்றாள் ராதை.   
ஓடம்  நகர்ந்தது.  சில கணங்களில்  மீண்டும்  நின்றது.
''இப்போ ஓடத்தை நிறுத்தியதற்கு   என்ன  காரணம்  சொல்லப்போறே?''  கத்தினாள்  ராதை.

''நீ   என்னம்மா  வம்பு பிடிச்ச   பொம்பளையா இருக்கே.   பழைய ஓடம்  இது.  உங்க  வெயிட்டு,  இந்த  சட்டி பானை .வெயிட்டு  வேறே.    ஓடத்துக்குள்ளே தண்ணி  வருது.  சீக்ரம் எல்லா  சட்டி பானைங்களையும்  தண்ணிலே  போடுங்க. ஒரு வழியா உயிர் தப்ப  கரை சேரலாம்.''

பயந்து போய்  எல்லா வெண்ணை, பால்,  நெய்  சட்டிகளையும் பானைகளையும் நகைகளையும் கூட  நீரிலே வீசினார்கள்.  காற்று  பலமாக வீசியது. புயல்  எங்கோ  உருவானது.  ஏரியின்  நீர் கொந்தளித்து   பயங்கரமாக ஓடம்  ஆடியது.  ராதை  ஆடினாள் பயந்தாள், வேறு வழியின்றி அந்த  ஓடக்காரனை  கெட்டியாக தழுவி  பிடித்துக்  கொண்டாள். அவன்  இடுப்பில்  அவள்  கை ஒரு குச்சி இருப்பதை  தொட்டது.   புரிந்து விட்டது அவளுக்கு.  அவன்  வேறு யாருமில்லை  கிருஷ்ணன்  தான்  என்று.  அவள் அவனைத்   தழுவின அடுத்த  கணமே அவனது  புல்லாங்குழல்  அவள்  கையில் பட்டுவிட்டதே.  அதை  உருவி  வெளியே எடுத்தாள் . அவனை  எல்லோருமாக  சிரித்துக்கொண்டே பிய்த்தெடுத்து விட்டார்கள். அவனும்  அவர்களோடு  விளையாடினான். கிருஷ்ணனின்  இந்த   லீலையைத் தான்   ''நவ்கா விஹார்''என்று   ஜீவா கோஸ்வாமி அழகாக சொல்லியிருக்கிறார்.

ஒன்றை  நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்.  பிருந்தாவன  கோபிகள் வேறு யாருமில்லை. முற்பிறவியில்  முனிவர்கள், மகான்கள் ரிஷிகள், தேவர்கள்,வேதங்கள். கிருஷ்ணன் அவர்கள்  மகிமை  தெரிந்து ஒவ்வொருவரையும்  மகிழ்வித்தான்.  இதுவே  ராசக்ரீடை.  ராச  லீலா.  ராதை  மற்றவர்களோடு  அவன்  உறவாடி  விளையாடினால் வெகுண்டாள்.  கோபம் வந்தது.  கிருஷ்ணனுடன்  வாக்கு வாதம்.  இது  கிருஷ்ணனுக்கு  ரொம்ப  பிடித்ததும்  கூட.  ராதையை பல கோணங்களில் ரசித்தான். பக்தர்களின்  வத்சலன் அல்லவா?.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...