Monday, March 9, 2020

NARAYANEEYAM



ஸ்ரீ நாராயணீயம் -    J  K  SIVAN 
முதல் தசகம் -

                                                    தசகம் 1 

நாராயணீயம்  ஒரு தெய்வீக நூல்.  கிருஷ்ணனோடு நேரில் பேசுவது மாதிரியே  எழுதி இருக்கிறார்  நாராயண பட்டத்ரி.   ''மாதிரி'' என்று சொல்வது தப்பு தப்பு.. நேரிலேயே கண்டு பேசியவர். நாராயணீய ஸ்லோகங்கள், கிருஷ்ணன் அருள் பெற்றவை, அதனால் தான் அவை  கைமேல் பலன் தரும் மந்திரங்கள்.

ஆங்கரை ஸ்வாமிகள் (கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்)  நாராயணீயத்தை  முழுவதும் விடாமல் சொல்லி பாராயணம் பண்ணுபவர்.  மகா பெரியவா எதிரில் 19 வருஷங்கள் ஸ்ரீ மத் பாகவத, சப்தாஹ மூல பாராயணம் உபன்யாசம் பண்ணி ஆசி பெற்றவர்.  அதுவும்  கோகுலாஷ்டமி சமயத்தில்.  ஒரு அதிசயம் நடந்ததை சொல்கிறேன். 1956ல்  ஸ்வாமிகளுக்கு  தீராத தாங்க முடியாத வயிற்றுவலி.   டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.  அன்று இரவு ஸ்வாமிகள் அஸ்மின் பராத்மன்  என்று ஆரம்பிக்

கும்  8 வது தசக  கடைசி ஸ்லோகத்தை விடாமல் சொல்லிக்கொண்டிருந்தார்.

மறுநாள் காலை டாக்டர்கள்  ஆஸ்பத்திரியில் அவரை ஆபரேஷனுக்கு  தயார் பண்ண தியேட்டருக்குள் அழைத்து போகிறார்கள். பரிசோதித்த பெரிய டாக்டர் மற்ற டாக்டர்களை  கேட்கிறார்:  ''என்ன மருந்து கொடுத் தீர்கள் என்ன ஆயிற்று இவருக்கு?    ஆபரேஷன் பண்ண வேண்டிய  அவசியமே இல்லையே..எதற்கு ஆபரேஷ னுக்கு தயார் செயதீர்கள்?''   கிருஷ்ணன் அல்லவோ மஹா பெரிய டாக்டர் என்று அவருக்கு எப்படி தெரியும்?

ஆங்கரை ஸ்வாமிகள் மட்டுமல்ல. அற்பமான  நமக்கும்  அந்த  குருவாயூரப்பன் அருள் புரிய காத்திருக்கிறான். நமக்கு அவன் மீது நம்பிக்கை வேண்டும். அவனை மனதில் நிறுத்தி நாராயணீயம் சொல்லி பட்டத்ரி நூறு  தசகங்களையும் அவன் சந்நிதிக்கு எதிரே உட்கார்ந்து பாராயணம் செய்தார்.  வாதபுரீஸ்வரன் அவர்  வேத

னையை உடனே தீர்த்தான்.  குருவாயூரப்பன் சந்நிதியின் உள் செல்லும் வழியில் குருவாயூரப்பனுக்கு வலது புறத்தில் (உள்ளே செல்லும் பக்தர்களுக்கு இடது புறத்தில்)  மேல்புத்தூர் நாராயணபட்டதிரி அமர்ந்து ஸ்ரீமந்நாராயணீயம் ஸ்லோகங்களை எழுதிய இடம்  இது என்று  பித்தளை  தகட்டில்  சுவற்றில்   குறிப்பிட்டு அடையாளம் காட்டி இருக்கிறார்கள். குருவாயூர் செல்ல முடியாதவர்கள் இருக்கும் இடத்தையே  குருவாயூராக பாவித்துக்  கொள்வோம். கிருஷ்ணன் எங்கும் இருப்பவன், நாம்  எங்கே சொன்னாலும் நாராயணீயம் அவன் காதுக்கு கேட்கும்.  இனி  முதல் தசகம் சொல்வோம்:

सान्द्रानन्दावबोधात्मकमनुपमितं कालदेशावधिभ्यां
निर्मुक्तं नित्यमुक्तं निगमशतसहस्रेण निर्भास्यमानम् ।
अस्पष्टं दृष्टमात्रे पुनरुरुपुरुषार्थात्मकं ब्रह्म तत्वं
तत्तावद्भाति साक्षाद् गुरुपवनपुरे हन्त भाग्यं जनानाम् ॥ १ ॥

ஸாந்த்₃ராநந்தா₃வபோ₃தா₄த்மகமநுபமிதம் காலதே₃ஶாவதி₄ப்₄யாம்
நிர்முக்தம் நித்யமுக்தம் நிக₃மஶதஸஹஸ்ரேண நிர்பா₄ஸ்யமாநம் |
அஸ்பஷ்டம் த்₃ருஷ்டமாத்ரே புநருருபுருஷார்தா₂த்மகம் ப்₃ரஹ்ம தத்வம்
தத்தாவத்₃பா₄தி ஸாக்ஷாத்₃ கு₃ருபவநபுரே ஹந்த பா₄க்₃யம் ஜநாநாம் ||1||

நாராயணீயம் என்பது  ஸ்ரீ மத் பாகவதத்தின்  சுருக்கம்.  நாராயணனின் அவதாரங்களை, மஹிமையை சொல்லி ஸ்ரீ கிருஷ்ணனை போற்றுவது.   பகவானை அடையாளம் காட்டுவது.  சாஸ்வத நிரந்தர சந்தோஷத்தை, ஞானத்தை, அளிப்பவனின் சரித்திரம்.  நிகரற்றது.  கால தேசம்  எல்லை கடந்தது.  எந்த வித பந்தமுடனும் தொடர்பற்றது.  நிதர்சனமாக  பக்தர்களுக்கு  கைமேல் பலனளிப்பது. எண்ணற்ற பிரார்த்தனை ஸ்லோகங்கள் இருந்தாலும்  புரியாதவனை  போற்றி புரியவைக்கும்  நூல். திரும்ப திரும்ப  தேடவைத்தும், அலுக்காத  ஒரு  மந்திர நூல். அப்படிப்போற்றப்படும்   குருவாயூரப்பன் மெய்ப் பொருளாக, சத்ய ஸ்வரூபமாக நமக்கு குருவாயூரில் கிடைத்தது ஹிந்து  பக்தர்களாகிய  நாம் செய்த பாக்யம். 


एवंदुर्लभ्यवस्तुन्यपि सुलभतया हस्तलब्धे यदन्यत्
तन्वा वाचा धिया वा भजति बत जन: क्षुद्रतैव स्फुटेयम् ।
एते तावद्वयं तु स्थिरतरमनसा विश्वपीड़ापहत्यै
निश्शेषात्मानमेनं गुरुपवनपुराधीशमेवाश्रयाम: ॥ २ ॥

ஏவம் து₃ர்லப்₄யவஸ்துந்யபி ஸுலப₄தயா ஹஸ்தலப்₃தே₄ யத₃ந்யத்
தந்வா வாசா தி₄யா வா ப₄ஜதி ப₃த ஜந: க்ஷுத்₃ரதைவ ஸ்பு₂டேயம் |
ஏதே தாவத்₃வயம் து ஸ்தி₂ரதரமநஸா விஶ்வபீடா₃பஹத்யை
நிஶ்ஶேஷாத்மாநமேநம் கு₃ருபவநபுராதீ₄ஶமேவாஶ்ரயாம: ||2||

2.நம் கையில் கண்ணுக்கெதிரில்  இருக்கும்  மிக  அற்புதமான  சாஸ்வதமான ஒரு வஸ்துவின்  மதிப்பு, மஹிமை, பெருமை நமக்கு தெரிவதில்லை. எங்கேயோ உள்ள ஒரு அநித்யமான,  பயனற்ற பொருள் மீது கவனம் செல்லும், அதை அடைய பிரயாசைப் படுவோம். போட்டி போடுவோம், சண்டையிடுவோம், முடிவில் ஏமாற்றம்.   இவ்வாறு, கிடைப்பதற்கு அரிதான  ஒரு பொருள், எளிதில் கிடைத்திருந்தும், மக்கள் அறியாமையால் உடலாலும், மனத்தாலும், வாக்காலும் வேறொன்றை வழி படுகிறார்கள்.    சகல உயிர்களிடத்தும் வியாபித் திருப்பவரான குருவாயூரப்பனையே, உலகோரின் கஷ்டம் நீங்க, உறுதி பூண்ட உள்ளத்தோடு நம்பிய தரிசிப்போம்.  அவனை உணர  மனம் சுத்தமடைய வேண்டும்.  உடல்  அற்ப சுகந்தத்தை நாடக்கூடாது.  உறுதியான  நம்பிக்கை சேர்ந்த  சரணாகதியை குருவாயூரப்பனின் திருவடிகளில் சமர்ப்பிப்பவன் நிச்சயம் உலக   வாதனைகளிலிருந்து மீண்டு  நிம்மதியுடன் வாழ்வான்.


भूतैर्भूतेन्द्रियैस्ते वपुरिति बहुश: श्रूयते व्यासवाक्यम्।
तत् स्वच्छ्त्वाद्यदाच्छादितपरसुखचिद्गर्भनिर्भासरूपं
तस्मिन् धन्या रमन्ते श्रुतिमतिमधुरे सुग्रहे विग्रहे ते ॥ ३ ॥

ஸத்த்வம் யத்தத் பராப்₄யாமபரிகலநதோ நிர்மலம் தேந தாவத்
பூ₄தைர்பூ₄தேந்த்₃ரியைஸ்தே வபுரிதி ப₃ஹுஶ: ஶ்ரூயதே வ்யாஸவாக்யம்|
தத் ஸ்வச்ச்₂த்வாத்₃யதா₃ச்சா₂தி₃தபரஸுக₂சித்₃க₃ர்ப₄நிர்பா₄ஸரூபம்
தஸ்மிந் த₄ந்யா ரமந்தே ஶ்ருதிமதிமது₄ரே ஸுக்₃ரஹே விக்₃ரஹே தே ||3||
நாராயணா, ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நன்கு அறிந்தவர்  ஸ்ரீ வேத வ்யாஸர் , எத்தனையோ முறை ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்பாரே  உன் திருவுருவத்தின் அழகைப் பற்றி.  ஆஹா  உன்னதமான   பரிசுத்தமான ஸத்வத்துக்கு  ஒரு திருவுருவம்  நீ என்று எப்போதும் சொல்வாரே.  குருவாயூரப்பா, நீ ரஜோ, தமோகுணங்கள் அணுகாத ஸத்வம்.  பஞ்ச பூத, பஞ்சேந்திரியங்கள்  கொண்ட சகல ஜீவன்களின் ஒட்டு மொத்தம். சத்தியத் தின் ஒளி வீசுபவன்.  பரம சந்தோஷம் தருபவன். உன் பக்தர்கள் உன்னை தியானம் பண்ண எவ்வளவு  கொடுத்து வைத்தவர்கள். எவ்வளவு திவ்ய சௌந்தர்ய ரூபமாக, கர்ணாம்ருதமாக நிற்கிறாய் அப்பா.  இதைவிட வேறு புண்யம் பண்ணி இருக்க முடியுமா?

निष्कम्पे नित्यपूर्णे निरवधिपरमानन्दपीयूषरूपे
निर्लीनानेकमुक्तावलिसुभगतमे निर्मलब्रह्मसिन्धौ ।
कल्लोलोल्लासतुल्यं खलु विमलतरं सत्त्वमाहुस्तदात्मा
कस्मान्नो निष्कलस्त्वं सकल इति वचस्त्वत्कलास्वेव भूमन् ॥ ४ ॥

நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி₄பரமாநந்த₃பீயூஷரூபே
நிர்லீநாநேகமுக்தாவலிஸுப₄க₃தமே நிர்மலப்₃ரஹ்மஸிந்தௌ₄ |
கல்லோலோல்லாஸதுல்யம் க₂லு விமலதரம் ஸத்த்வமாஹுஸ்ததா₃த்மா
கஸ்மாந்நோ நிஷ்கலஸ்த்வம் ஸகல இதி வசஸ்த்வத்கலாஸ்வேவ பூ₄மந் ||4||
'' ப்ரம்மம் என்கிற ஓயாது அலைவீசும் சமுத்திரம்  மாதிரி சத்வ குண சாகரம் நீ  என்று  மஹான்கள் சொல்வார்கள்.   ஆனந்தம்  கருணை  எல்லையற்று பொங்கி   நிரம்பி வழிவது . முக்தர்களின் சங்கமத்தால்  பேரின்பம் அளிப்பது.   எங்கும் நிறைந்த பரப்பிரம்மம் 
குருவாயூரப்
பா  உன்   கிருஷ்ண  பூர்ண அவதாரம் ஒன்றே போதுமே, அனைத்து அவதாரங்களின் சாறு போன்று இன்பம் அளிக்க,. பக்தர்கள்  மனம் இனிக்க. 

निर्व्यापारोऽपि निष्कारणमज भजसे यत्क्रियामीक्षणाख्यां
तेनैवोदेति लीना प्रकृतिरसतिकल्पाऽपि कल्पादिकाले।
तस्या: संशुद्धमंशं कमपि तमतिरोधायकं सत्त्वरूपं
स त्वं धृत्वा दधासि स्वमहिमविभवाकुण्ठ वैकुण्ठ रूपं॥५॥

நிர்வ்யாபாரோ(அ)பி நிஷ்காரணமஜ ப₄ஜஸே யத்க்ரியாமீக்ஷணாக்₂யாம்
தேநைவோதே₃தி லீநா ப்ரக்ருதிரஸதிகல்பா(அ)பி கல்பாதி₃காலே|
தஸ்யா: ஸம்ஶுத்₃த₄மம்ஶம் கமபி தமதிரோதா₄யகம் ஸத்த்வரூபம்
ஸ த்வம் த்₄ருத்வா த₃தா₄ஸி ஸ்வமஹிமவிப₄வாகுண்ட₂ வைகுண்ட₂ ரூபம் ||5||
ஹே   குருவாயூரப்பா,   பிறப்பு இறப்பு அற்ற ஸாஸ்வதனே, எனக்கு என்று எந்த ஒரு காரியமும் இல்லை என்று சொல்லிக்கொண்டே  ஒவ்வொரு கணமுமாக உனக்கென்று ஒரு காரணமும் காரியமும் மில்லாமலேயே   பிரபஞ்ச  அசைவுகளை மாயையால், பார்வையாலேயே  செயல்படுத்துபவனே.  ஆதி காரணன் நீ.  உன்னிலிருந்தே சகல புவனமும் செயல்பட்டாலும்  அவை உனதாக தோன்றாத  மாய ஸ்வரூபனே. சத்தியத்தின் தோற்றமே. உன்னை வணங்குகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...