Tuesday, March 31, 2020

SUR SAGARAM




சூர்  சாகரம்   J K SIVAN


        பக்தி பரவசம் வேண்டுமா,  இதோ!

பக்தி பரவசம்  ஒன்றால்  தான்   தன்னை இழந்து இறைவனோடு ஒன்றி அவனது ப்ரபாவத்தில் மூழ்கி ஆனந்த மயமான நிலையிலிருக்க முடியும்.  இப்படி இருக்கும்   மஹான்கள் இந்த உலக சிந்தனை துளியும் இல்லாதிருப்பவர்கள். அவர்களது வாக்கில் சத்யம் எதிரொலிக்கும். அவர்கள் எழுத்தில் கற்பனையில் உண்மை பிரதிபலிக்கும். நம்மால் காண முடியாததை எளிதில் ஆனந்தமாக பேச்சிலும்  எழுத்திலும்  கண்டு ரசிப்பவர்கள், அனுக்ரஹிப்பவர்கள்.

அப்படி ஒருவர் தான் கண்ணற்ற சூர் தாசர். கண்ணன் அவர் மனதில் நிரம்பி, மூச்சாக அவரிடமிருந்து வெளிப்பட்டு பாடலாக வெளிவந்து எவராலோ எழுத்தில் இன்று நம் முன்னே புத்தகமாக நிற்கிறான். அவனை அந்த புத்தகத்தில் ரசிக்கவேண்டாமா? அதன் மூலம் சூர்தாஸின் இன்பத்தில் கடுகளவாவது நாமும் பங்கு கொண்டு அனுபவிக்க வேண்டாமா?

சூர்தாஸ் சொல்கிறார்:

''ஹே மனமே வா உனக்கு ஒரு நல்ல வழி சொல்லித்தருகிறேன். அங்கே இங்கே ஓடாதே. அதோ பார் ஒளிவீசும் சிவப்பு நிறத்தில் ஏதோ தெரிகிறதே என்னவென்று புரிகிறதா?   தெரியவில்லை அல்லவா?   பிறகு  என்ன யோசனை? நானே சொல்கிறேன்.அது  தான்  செந்தாமரைமலர்ப் பாதங்கள்.

ஓ....யாருடைய பாதம் என்று தெரியவில்லையா?அவன் யாரென்று யோசிக்கிறாயா ? அதுதான் அப்பா, நமது நந்தகோபன் மகன் கிருஷ்ணன். எவன் திருவடி துணை இருந்தால் பயங்கள் நீங்குமோ அவன்.

அரிது அரிது மானுடராகப் பிறத்தல் அரிது. அப்படிப் பிறந்து, இந்த வாழ்க்கை சம்சார கடலை தாண்டவேண்டாமா? அதற்கு சாதுக்களின் சத் சங்கம் தேவை இல்லையா?

இதோ என்னை பார். இரவு எது பகல் எது எனக்கு? எல்லாமே இருட்டு. .எல்லாமே வெளிச்சம். தூக்கம் ஏது? உடலில் உஷ்ணம் குளிர்ச்சி, மழை வெயில் படுவது தெரிகிறது. அனுபவிக்கிறேன். அற்ப சுகத்தை, (என் விஷயத்தில் காகித பணத்தை தேடி,) நாடி எத்தனையோ வருஷங்கள் கொடிய, கருமிகளுக்கு உழைத்தேன். என்ன பிரயோஜனம்?

நான் யார்? அந்த கோவிந்தனின் தாசானு தாசன். நவ வித பக்தி என்பார்களே அதில் விருப்பம் வேண்டாமா? அது என்னவா? சொல்கிறேன். என் ஹரியின் பெருமைகளை கேட்பது, அவன் பெருமைகளை நாவினிக்க சொல்வது, பேசுவது, ஸ்மரிப்பது, கணநேரமும் விடாமல் அவனை நினைவினில் நிறுத்திக் கொள்வது, பிரார்த்திப்பது, அவன் செந்தாமரை திருவடிகளில் சரணடைவது, நறுமண வாசமிகு மலர்களால் அவனை அர்ச்சிப்பது, வாசனாதி திரவியங்களால் அவனை மகிழ்விப்பது, அவனுக்கு உற்ற நண்பனாக சேவை புரிவது, இதையெல்லாம் விடு..... என்னையே அவனுக்காக மறந்து இழந்து அவனுக்கு என் உயிர் உடல் பொருள் ஆவி அனைத்தும் அர்ப்பணிப்பது.... போதுமா ??

போதும் போதும் போதும்..... என்கிறார் சூர்தாஸ் இந்த அருமையானபாடலில்:

Bhajahoon re man sri nand nandan abhaya charan arvind hey
Durlabh manav janam satsange tar jaave bhav sindh re
Sheet Aatap Vatavariyat , ae din aavanijaani re
Biphale sevenu kripan durjan chapal sab sukh lagi re…
Sravan Kirtan Smaran Vandan Paadsevan Dasya re
Poojan Sakhijan Atmanivedan , Govind Das abhilashi re…
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...