Wednesday, March 11, 2020

GITANJALI




கீதாஞ்சலி J K SIVAN
ரவீந்த்ரநாத் தாகூர்

34 இணைபிரியாத பிணைப்பு

34. Let only that little be left of me whereby I may name thee my all.
Let only that little be left of my will whereby I may feel thee on every side, and come to thee in everything, and offer to thee my love every moment.
Let only that little be left of me whereby I may never hide thee.
Let only that little of my fetters be leftwhereby I am bound with thy will, and thy purpose is carried out in my life---and that is the fetter of thy love

சிலர் எதையுமே சுருங்கச் சொல்லி புரிய வைப்பார்கள். பெரிய பெரிய விஷயங்களை கூட சுருக்கமாக தெளிவாக புரியும்படியாக சொல்வார்கள். சிலர் சாதாரணமாக ராமன் தென்னை மரத்தில் ஏறினான் என்பதை கூட ராமன் என்ன செய்தான் என்பதே கொஞ்சமும் புரியாமல் சொல்ல கூடிய வித்தகர்கள். நான் ரெண்டாவது ரகமாக இருப்பின் கிருஷ்ணன் என்னை மன்னிக்கட்டும். நான் எடுத்துக்
கொண்டவிஷயம் அப்படி.

ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி கொஞ்சம் மண்டையை கசக்கிக் கொண்டால் மட்டுமே புரியக்கூடியது. புரிய வைக்க என் சாமர்த்தியம் பயனளிக்கிறதா என்று படிப்பவர்கள் நீங்கள் தான் சொல்லவேண்டும்.

கிருஷ்ணா, என்னை முழுதுமாக கரைத்து விடு துளியூண்டு விட்டு வை. அந்த துளியூண்டு நீயாகவே இரு. அப்புறம் பார் நான் அந்த துளியை விஸ்வரூபம்
எடுக்க வைத்து நீதான் அந்த முழுமை என்று மார் தட்டி சொல்கிறேன்.

''என் எண்ணங்கள் , தீர்மானங்கள், முடிவுகள், மனோ திடம் எல்லாவற்றையுமே குறைத்துவிட்டு துளியூண்டு மட்டுமே வை. அது உன் பற்றிய ஒரே சிந்தனையாகவே இருக்கட்டும். அப்புறம் பார் அந்த துளியூண்டை வைத்துக்கொண்டே நான் உன்னை எங்கும் எதிலும் காண்பவனாகி விடுவேன். என் செயல் எல்லாவற்றிலும் நீயாகவே இருப்பதை உணர்வேன் உன்னையே எதிலும் நாடுபவனாக அறிபவனாகி விடுவேன். ஒவ்வொரு கணமும் என் அன்பை உன்மேல் கொட்டி தீர்ப்பேன்.

என்னை துளியூண்டு மட்டுமாக்கி விட்டு மீதி எல்லாவற்றையும் எடுத்து விடு. அப்போது தான் . உன்னை நான் என்னில் மறைக்க முடியாது. என்னிடம் எது மிஞ்சி இருக்கிறதோ அது நீ மட்டும் தான் எனத் தெரியவரும்.

என்னைப்பார்த்தாயா, எத்தனை சங்கிலிகள் என்னை பிணைத்திருக்கின்றன. நான் ஓடாமல் இருக்க ஒரே ஒரு சங்கிலி போதுமே. மற்றவை களை எல்லாம் விலக்கிவிடு. நான் எங்கும் ஓடப்போவதில்லை... ஒரே ஒரு சங்கிலி என்னை உன் சங்கல்பத்தோடு பிணைக்கட் டும். அதன் மூலம் நான் உன் கட்டுப்பாட்டில் கொஞ்சம் உலவுகிறேன். நீ ஆட்டி வைத்தபடி . ஆடுகிறேன்.என் வாழ்வின் காரணம் வெளிப் படும். அந்த ஒரு சின்ன சங்கிலி என்னையும் உன்னையும் இணைக்கும், பிணைப் பாக இருக்கட்டும். அதுவே நான் உன்மேல் வைத்த பாசம், அன்பு நீ என்மேல் வைத்துள்ள பேரருள், பெருங்கருணை. உன் பேரன்பு.

கிருஷ்ணா செய்வாயா?



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...