Sunday, February 7, 2021

GEETHANJALI

 கீதாஞ்சலி - J K SIVAN


தாகூர்

17 உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்....
17. I am only waiting for love to give myself up at last into his hands.
That is why it is so late and why I have been guilty of such omissions.
They come with their laws and their codes to bind me fast;
but I evade them ever, for I am only waiting for love to give myself up at last into his hands.
People blame me and call me heedless;
I doubt not they are right in their blame.
The market day is over and work is all done for the busy.
Those who came to call me in vain have gone back in anger.
I am only waiting for love to give myself up at last into his hands.

கிருஷ்ணனுக்கு தெரியாதா என்ன நான் என்னையே அவனுக்கு அர்ப்பணிக்க காத்திருக்கிறேன் என்று?.

கண்ணா, கருமை நிற வண்ணா, நின்னையே சரணடைய எவ்வளவு காலம் காத்திருந்தேன் என்பது எனக்கும் உனக்கும் தான் தெரியும் இல்லையா, என் நந்தலாலா?.
என் காதல் பாசம் அனைத்தும் உன்னிடமே அல்லவா? உனக்காக கடைசி வரை காத்திருப் பவர்களில் நான் முதல்வன். அதனால் தான் நான் ரொம்ப லேட் பேர்வழி. நிறைய தவறுகள் செய்தவன் அல்லவா?. என் தவறுகள் என்னைச் சும்மா விடுமா?
ஒவ்வொருவரும் அவரவர்க்கு தெரிந்த நெறி முறைகள், வழிகள், சட்டம் நியாயம், தர்மம் எனக்கூறி என்னென்னவோ தண்டனை கொடுக்க என்னென்ன வழியோ அதெல்லாம் காட்டி என்னைத் தம்மோடு சேர்க்க என்னை அணுக முயலும் போது நான் அகப்படுவேனா? அவர்கள் அத்தனை பேருக்கும் ' டிமிக்கி' கொடுத்துவிட்டு உன்னிடம் அல்லவோ ஓடிவந்து ''கண்ணா, நீ என்னை காத்திடுவாய். என்னை திருத்திடுவாய்'' என்று கெஞ்சுவேன். என் முழு மனம், அன்பு, பாசம், நேசம் உன்னிடம் மட்டும் என்று எனக்கும் உனக்கும் மட்டுமே தெரியும். இது தெரியாத, அறியாத மற்றவர்கள் என்னை கோபிப்பதில், என் மீது ஆத்திரப்படுவதில் என்ன தவறு? அவர்களைப் பொறுத்தவரை அது சரி.
உன்னை அடைந்தவனின் தவறுகள் உனதாகி விடுகிறதே. சேய் செய்த பிழை தாய் பொறுப்ப வள் ஆயிற்றே. ஆகவே என் தவறுகள் பற்றியும் நான் சிந்திக்கவில்லை.
''இவன் மதி கெட்டவன், சொன்னதைக் கேட்க மாட்டான்'' என்று நிறைய பேர் எனக்கு பட்டம் சூட்டுவதும் எனக்கு தெரியும். கேட்டுக் கேட்டு எனக்கு காது புளித்துப்போய் விட்டது
கிருஷ்ணா. அவர்கள் என்னை குறை கூறுவது நியாயம் தானே. என் மனம் உன் மீது தானே முழுதும் இருக்கிறது. ஆகவே அவர்கள்
சரியாகத் தான் சொல்கிறார்கள். எனக்குத் துளியும் சந்தேகம் இல்லை. நான் தான் எப்போதோ என்னை உணர்ந்து உன்னிடம் ஓடி வந்துவிட்டேனே. அவரவர் வழியில் அவரவர்கள் செல்லட்டும்.
கடைத்தெருவில் வியாபாரங்கள் முடிந்து எல்லோரும் கதவை மூடியாகி விட்டது. அவரவர் அன்று சம்பாதித்த காசு எண்ணு கிறார்கள். என்னை தேடி வந்தவர்கள் என்னை அடைய முடியாத கோபத்தோடு திரும்புவது நான் அறிவேன். நான் என்ன செய்வது? நான் தான் என்னை உன்னிடம் தந்து விட்டேனே. அவர்களிடம் எப்படி சிக்குவேன். அவர்கள் வழி நான் எப்படிப் போகமுடியும்?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...