Wednesday, February 24, 2021

SHAKESPEARE


 

ஷேக்ஸ்பியர்    -      நங்கநல்லூர்   J K  SIVAN                    

ஏழு கட்டாய வேஷங்கள் 

அது ராயப்பேட்டையில் ஒரு சிறிய  வீடு. அதில் பல குடித்தனங்கள். அப்போதெல்லாம் ஒரு வீட்டில் பல பேர் குடி இருப்பார்கள், சண்டைகளும் உண்டு,  சௌகர்யங்களும் உண்டு.  

என் மனைவி சகோதரி வீட்டில் அவள் முதல் குழந்தை  8-9  வயது  கெட்டிக்கார பையன் சுந்தரராமன்.  ராயப்பேட்டை வெங்கடேஸ்வரா ஹைஸ்கூல் மாணவன்.  இன்று அவனும்  என்னைப்போல்  ஒரு தாத்தா.  
1965ல் முதன் முதலாக  அவர்கள் வீட்டுக்கு சென்றபோது  என் தந்தையும்  வந்திருந்தார்.   என் அப்பா  ஜே..கிருஷ்ணய்யர்,  ஆங்கில,  ஸம்ஸ்க்ரிதம்,  தமிழ், மும்மொழிகளிலும் வல்லுனர்.  அந்தச் சிறுவன் சுந்தர், தன்னுடைய பள்ளியில் சொல்லி க் கொடுத்த ஒரு ஷேக்ஸ்பியர்  ஆங்கில  கவிதையை  என் அப்பாவிடம்ஒப்பித்து   நடித்துக்  காட்டியதில் அவருக்குப் பரம சந்தோஷம். அதே பாடலை எத்தனை  வருஷங்கள்,  எத்தனை  மணி நேரங்கள்  ரசித்து  உயர் நிலை வகுப்பு  மாணவர் களுக்கு  அவர்  ஆங்கிலத்தில் போதித்திருக்கி றார். ஷேக்ஸ்பியர் பிடிக்காத  ஆங்கிலம் அறிந்த வர் யாராவது உண்டா?    
அந்த பாடலின் சாராம்சம்: 
ஒவ்வொரு மனிதனும் 7 நிலைகளை வாழ்வில்  தாண்டியாக வேண்டும்.    STAGE  எனும் நிலையை விட  AGE  எனும் வயதை குறிப்பாக ஷேக்ஸ்பியர் சொல்வது  அவரது  சாதுர்யம்.  இன்றும்  அர்த்தம் தெரியாத வயதில் சுந்தர்  பாடி  நடித்தது  என் கண் முன் நிற்கிறது.  அந்த பாடல்  ஷேக்ஸ்பி யரின்   AS YOU LIKE IT  எனும்  காவியத்தில் ஒரு காட்சி.  JACQUES ஜேக்ஸ் எனும்  ஒரு  பாத்திரம் சொல்வதாக வரும்: 

All the world's a stage,
And all the men and women merely players,
They have their exits and entrances,
And one man in his time plays many parts,
His acts being seven ages. At first the infant,
Mewling and puking in the nurse's arms.
Then, the whining schoolboy with his satchel
And shining morning face, creeping like snail
Unwillingly to school. And then the lover,
Sighing like furnace, with a woeful ballad
Made to his mistress' eyebrow. Then a soldier,
Full of strange oaths, and bearded like the pard,
Jealous in honour, sudden, and quick in quarrel,
Seeking the bubble reputation
Even in the cannon's mouth. And then the justice
In fair round belly, with good capon lin'd,
With eyes severe, and beard of formal cut,
Full of wise saws, and modern instances,
And so he plays his part. The sixth age shifts
Into the lean and slipper'd pantaloon,
With spectacles on nose, and pouch on side,
His youthful hose well sav'd, a world too wide,
For his shrunk shank, and his big manly voice,
Turning again towards childish treble, pipes
And whistles in his sound. Last scene of all,
That ends this strange eventful history,
Is second childishness and mere oblivion,
Sans teeth, sans eyes, sans taste, sans everything.

மனிதன் உலக வாழ்க்கையில் அவனது  ஏழு  பருவங்களை  அற்புதமாக காட்டுகிறார் ஷேக்ஸ்பியர். அவர்பிரித்து காட்டிய  ஏழு நிலைகள்,   குழந்தை,   பள்ளிமாணவன் , காளை , வாலிபன், நடுத்தரன் , ,முதியவன், குடுகுடு கிழவன் உலகமே ஒரு நாடகமேடை,  நாம் எல்லோரும் அதில் கட்டாயமாக  வந்து போகும்  நடிகர்கள். இதில் என்ன விசேஷம் என்றால் ஒரே ஆளுக்கு பல  வேஷங்கள். குறிப்பாக  ஏழு. 

முதல் வேஷம்  குழந்தை.  தூக்கி வைத்துக் கொள், பால் கொடு என்று டிமாண்ட் பண்ணி  அழுது,கேட்டு வாங்கி  குடித்து மடியில் தூங்கி, வளர்கிறான்.  

ரெண்டாவது:  தோளில் , முதுகில் புத்தகச்சுமை, பிடிக்காமல் அம்மா அப்பாவுக்காக பள்ளிக்கூடம் போகவேண்டும் என்று அலுத்துக்கொண்டு மெதுவாக ஊர்ந்து போகிறவன்.  

மூன்றாவது:  துணை தேடும்  காளை. தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொண்டு,  அவளுக்காக  கனலாக பெருமூச்சு விடுபவன்.  காதல் கவிதை  எழுத பல காகிதங்களை கிழிப்பவன். முட்டாளா கிறோம் என்று தெரியாதவன். 

நாலு:   பொறுப்புள்ள  உத்யோகஸ்தன்.  வீர சாக சம் புரியும்  பட்டாளத்தான். கையில் கத்தியோடு தான் எப்போதும்.  எளிதில் சண்டை போடுபவன். பயமறியாதவன்.

ஐந்தாவதாக  மத்திய வயதுக்காரனாக வருகி றான்:    சமூகத்தில் அந்தஸ்து தேடுபவன்,  நாலுபேர் மெச்ச கைதட்ட காத்திருப்பவன்.  தன்னுடைய  உபதேசங்களை, அறிவுரைகளைக் கேட்காமல் தருபவன். காசு சேர்ப்பவன், சாப்பாட் டில் ஆர்வம் அதிகம்.

ஆஹா  நெருங்கி விட்டோமே.  ஆறாவது வேஷம்:   முதியவன்.  இவன் முன்பு இருந்தவன் இல்லை இப்போது.  உடல் உள்ளம் ரெண்டிலும் தளர்ச்சி.  குரல்  முன்பு போல் அதிரவில்லை.  எண்ணி பேசுகிறான். உடையிலும்  கவர்ச்சி தேடவில்லை.  அவனை ஒரு பொருட்டாக மதிப்பவர்கள்  ரொம்ப கம்மி.  காற்றுப் போன  கலர் பலூன்.கண்ணாடி, செவிட்டு மெஷின், பொய்ப் பல், க்ஷவரம் காணாத   வெண்  தாடி மீசை,  அவன் உருவத்தை மாற்றிவிட்டது.  முதுகு ஏன் இப்படி வளைந்து விட்டது?

கடைசி  ஏழாவது காட்சியில் அவன் இப்போது எப்படி இருக்கிறான் பாருங்கள்:   

நாம் சொன்னது அவனுக்கு  ஏறவில்லை, அவன் சொல்வது புரியவில்லை.  தன்னையே  அடையா ளம் தெரியவில்லை அவனுக்கு எனும்போது நம்மை எப்படி தெரியும்?  கண்  ஒரு  அடி  தூரத்தில் சுருக்கிக்கொண்டு பார்த்தால் மங்கலாக ஏதோ தெரியும்.  காது டமாரம்.  அவன் மூலையில் படுத்திருக்கும்  முதல் காட்சி குழந்தையாகிவிட்டான். அவனது என்று எதுவுமே இல்லை இப்போது.    அவன்  தேடாவிட்டாலும்,  அவனை எதிர்நோக்கி நகர்ந்து வருவது மரணம் ஒன்றே தான்.   நாடக மேடையில் அடுத்தவன் வருவதற்கு இவன் இடத்தை காலி பண்ண வேண்டுமே . 

படித்துப்பாருங்கள் இப்போது. வாழ்க்கையின் அநித்தியம் இப்போது நன்றாக புரியும். குழந்தை க ளுக்கு கற்பியுங்கள்.  குழந்தைகள்  சுந்தரைப் போல்   மனப்பாடம் பண்ணி  ஒப்பித்தாலும்  பலருக்கு  உபயோகமாக இருக்கும்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...