Friday, February 26, 2021

geethanjali

 


கீதாஞ்சலி    ---      நங்கநல்லூர்  J K SIVAN 


                

27.  வழிமேல்  விழி வைத்தேன் கண்ணா

27  Light, oh where is the light? 

Kindle it with the burning fire of desire!

There is the lamp but never a flicker of a flame---is such thy fate, my heart? 

Ah, death were better by far for thee!
Misery knocks at thy door, and her message is that thy lord is wakeful, 

And he calls thee to the love-tryst through the darkness of night.
The sky is overcast with clouds and the rain is ceaseless.

I know not what this is that stirs in me---I know not its meaning.

A moment's flash of lightning drags down a deeper gloom on my sight

And my heart gropes for the path to where the music of the night calls me.

Light, oh where is the light! Kindle it with the burning fire of desire! 

It thunders and the wind rushes screaming through the void. 

The night is black as a black stone. 

Let not the hours pass by in the dark. Kindle the lamp of love with thy life.

 ஓ,  எங்கே அந்த தீபத்தைக்  காணோம்?   தேடிப்  பிடித்து அதில் என் எண்ணங்களில்  பெருகி சுட்டெரிக்கும்  ஆசை பாசங்களை  இட்டு,  அதை எரித்து  தீபம் சுடர் விட்டு  ஒளிரட்டும் .எரியாத விளக்கு இருந்தென்ன லாபம்?  இறந்த மனிதனுக்கு சமானம்.    என்  இதயமே,   இது தானா உன் கதி,   இந்த எரியாத விளக்கா  உன் நிலை ? நீயும் ஒரு உதவாக்கரையா?  ஓஹோ,   ஒளியில்லா விளக்கே, தீபமே,  அப்படியானால் மரணம் உன்னைவிட பலமடங்கு  சிறந்தது.

துன்பங்கள் ஒன்று  மாற்றி  ஒன்றாக என் மன வாசல் கதவை பட பட  என்று இடிக்கிறது. ஓஹோ  துன்பம் துயரம் இருந்தால் தான் என் கிருஷ்ணன்  இருப்பது  எனக்குத் தெரிய வருமோ?  துன்பமும் துயரமும் தான் அவனை  எழுப்பி அழைக்க நாம்  பாடும்  சுப்ரபாதமா, அழைப்பிதழா


ஓஹோ  அதனால்   தான் கிருஷ்ணனின் அத்தை குந்தி    ''கிருஷ்ணா, எனக்கு மேலும் மேலும் துன்பத்தையே  கொடு, அப்போது தான் நான் உன்னை நினைப்பேன்'' என்றாளோ?   அவன் அழைப்போரைக்  காக்க விழிப்

போடு காத்துக் கொண்டிருக்கிறானா?


''நீ ஏன் கலங்குகிறாய்,   வா என்னிடம் என்கிறானா? அதோ அங்கிருக்கிறான் வா,  என்று  துன்பமே,  துயரமே,  நீ தான் என்னை அழைக்கிறாயா? உன் மூலம் தான் நான் அவனைப்  பெறுவேனா?  இரவே, இருளே,   நீ  இனி நீண்டு கொண்டே இரு.  அவனுடன் நான் களிக்கும்,  கழிக்கும் நேரம் எல்லை இல்லாமல்  இருளாகவே  இருந்தாலும் பரவாயில்லை, அப்படியே  இருக்கட்டுமே.

வானம் எப்போதும்போல் இருண்டு , கறுத்து, மேகத்தைக்  கரியாக பூசிக்கொண்டிருக்கிறது  ஒரு கரிய பெரிய  ராக்ஷஸன் தான் சந்தேகமே இல்லை.  கையைத்  தலைக்கு மேல் நீட்டினால் மேகத்தை தொடலாம் போல் இருக்கிறதே.   விடாது பெய்த மழை போதாது என்று இன்னும்  சூல் கொண்ட மேகக்  கூட்டமா?  அடாது பெய்யும் மழை விடாதோ ? என்னை ஏதோ வேகமாக அவனிடம் காந்தம் போல்  கவர்ந்து செல்கிறதே என்னை அவன் பால்
 நாட  செலுத்துகிறதே அது என்ன? அதன் பெயர், அர்த்தம் என்ன? ஒன்றும் தெரியாத போதே  இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறதே.! 


காரிருளில்  நான்  செல்கிறேன்.  இருட்டில்  தட்டுத் தடுமாறிச்  செல்லக்கூடாது என்பதற்காக ஒரு ''டார்ச்'' அடித்திருக்கிறான் கிருஷ்ணன். பளிச் என்று கண்ணைப் பறிக்கும் மின்னல், அந்த இருட்டில் அவனை நோக்கி செல்லும் பாதையை  வெள்ளிக் கம்பியாக  காட்டி விட்டது வெளிச்சம் ஒரு கணம் தான்  அந்த கும்பிருட்டை  நீக்கி மீண்டும்  சூழ்ச்சி செய்து விட்டதே.   அவன் குழல் ஓசை  வந்த திக்கை நோக்கி  செல்கிறேன்.   குழலா யாழா, அது  எதுவாயினும்  அந்த சுநாத  இனிமை காற்றில்   இருள்   தந்த ஒலியாக  என்னைத் தாக்க,  அதை நோக்கி  என் கால்கள்  நகர்கிறது.  என் கால்களை விட என் இதயம் அவனை அடைய வேகமாக துடிக்கிறதே.


  மீண்டும் கேட்கிறேன்.....  அந்த  தீபத்தை  எங்கே காணோம்?  அதை தேடி பிடித்து அதில் என் எண்ணங்களில்  பெருகி  சுட்டெரிக்கும்  ஆசை பாசங்களால்   அந்த எரியாத விளக்கு  சுடர் விட்டு    எரியட்டும்  அந்த எரியாத விளக்கை  என் ஆசைகளால், அவன் பால்  உள்ள  ஆர்வத்தால்  அதை ஒளிபெற செய்கிறேன்


காது செவிடுபட   டமால்  டுபீல் டபீல்  என   ஒரு பெரிய இடி சப்தம்.  இடிக்கட்டும் இடிக்கட்டும் நன்றாக இடிக்கட்டும். அதை இன்னும்  அதிகமாக ஒலிக்கச்  செய்ய  இந்த பலமான  காற்றும் ஒத்துழைக் கட்டும்கும்மிருட்டில்  இரண்டும்  நல்ல ஜோடி..  இரவு ஏற்கனே இருட்டு.... தொட்டால் ஒட்டிக் கொள்ளும்  அளவு  அட்டை கருப்பான இருட்டு.  கரும் பாறை சூழ்ந்தது போல்   எங்கும் இருள்.  

 

போதும் கிருஷ்ணா, இந்த இரவின் இருள். இப்படி நேரம்  இருண்டு  நீண்டு போக வேண்டாம். வாழ்வில் உன் அருளால் என் அன்பு தீபம் எரிந்து வழி காட்டட்டும். உன்னை அடைய அது உதவட்டும். ஆம் கிருஷ்ணா. உன்னை அடைய இருளும், இடியும், துன்பமும் துயரமுமாகி என்னை தாக்கட்டுமே. உன் அருள் பெற இந்த இருள்  தான்  வழி என்றால் அது கண்டிப்பாக வேண்டும் எனக்கு.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...