Wednesday, February 3, 2021

GEETHANJALI

  

கீதாஞ்சலி   ---     J K  SIVAN 
தாகூர் 


      14. ஆசை அறுமின்கள்....

14   My desires are many and my cry is pitiful,
but ever didst thou save me by hard refusals;
and this strong mercy has been wrought into my life through and through.
Day by day thou art making me worthy of the simple,great gifts that thou gavest to me unasked---
this sky and the light, this body and the life and the mind---
saving me from perils of overmuch desire.
There are times when I languidly linger and times
 when I awaken and hurry in search of my goal;
 but cruelly thou hidest thyself from before me.
Day by day thou art making me worthy of
thy full acceptance by refusing me ever and anon,
saving me from perils of weak, uncertain desire.

இதுவரை ரவீந்திர நாத் தாகூர் எழுதிய  உலகப்புகழ் வாய்ந்த  நோபல் பரிசு பெற்ற  கீதாஞ்சலி  13பாடல்கள் என் வழியில் எழுதி வந்துள்ளேன்.  

நான்  நன்றாக புரிந்து கொள்ளும்படியாக எழுதுகிறேனா என்பது  சந்தேகம்.   நீங்கள் தான் தெரிவிக்க வேண்டும்.  ஏனென்றால் ஏற்கனவே தாகூரை  புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம்.   தாகூரை  அடையாளம் கண்டு கொள்ள ரொம்ப பொறுமை வேண்டும். நெஞ்சில் அமைதி வேண்டும். தாகூர்  எழுத்து வன்மை இணையற்றது., ஆழ்ந்த சிந்தனை கொண்டவர்.  எதையும்  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நம்மைப்போல  நேரடியாக சொல்லமாட்டார். அழகிய  இலை  மறைவு காய் மறைவு  உவமைகளில்  உண்மையை சொல்வதில் மன்னன்.    ஆழ்ந்த சிந்தனையின்அழகிய  அழுத்தமான  பொருத்தமான    எழுத்துகள் .   அதனால்  தான் நோபல்பரிசு! அவரே வங்காள மொழியில் எழுதி  அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து  தந்தது  வங்காள மொழி தெரியாத  நமக்கு  அதை அனுபவிக்க  முடிகிறது.  
  
''ஆசை என்பதே  அலை  போல . நாம்  எல்லோரும் அதன்மேலே  ஓடம் போல  ஆடி அலைக்கழிக்கப் படுபவர்கள்  என்பது  வாஸ்தவம். ஆசை நிறைவேற வேண்டும் என்ற தாகம், வேகம், அது நிறைவேற தாமதமானாலும் நடக்காவிட்டாலும் சோகம்......

எவ்வளவோ அழுதுவிட்டேன்.. கிருஷ்ணா, கண்ணீர் வற்றிப்  போய்விட்டது.   என் ஆசைநிறை வேறவில்லை, நீ தயை  புரிவது தெரியாமல் நீ கல்நெஞ்சக்காரன் என்று ஏங்கி நொந்தேனே.  தேவையற்ற  என் ஆசைகள்  நிறைவேறாமல் நீ காத்து அருளியிருக்கிறாய் என்று அப்புறம் தானே புரிகிறது.  குழந்தையின் நல்வாழ்வுக்கு,  உடல் நன்மைக்கு உதவாது என்றறிந்து  அது  இனிப்பு கேட்டால் மனோ திடத்தோடு  மனஉறுதியோடு   தாய் கண்டிப்பாக  கொடுப்பதில்லையே. என் மீது உன் எல்லையற்ற கருணையை  நீ பொழிவதை  அறியாத  அஞ்ஞானி நான்.
''கிடையாது போ. நடக்காது ''  என்று பலமுறை நீயும்  என் தாயாக  என் ஆசை வெள்ளங்களுக்கு அணை போட்டவன். கடின இதயம் உனக்கு இந்த விஷயத்தில்.     நீ   எனக்கு நல்லது தான் செய்திருக்கிறாய்.   இந்த உறுதியான உன் கருணையை  நான்  என்வாழ்க்கையில் பல முறை அநுபவித்தவன்.

கண்ணம்மா,  என் மனம் நீ அறிவாய்.  மேலே பார்க்கிறேன்  கருப்பாக  யானை யானையாக  மேக கூட்டங்கள் மெதுவாக அசைந்து ஒன்றின்  மேல் ஒன்று ஏறி விளையாடுகிறது.  வானத்தை மறைத்து கருமை படர்கிறது. பெரிய மழை ஒன்று நிச்சயம் காத்திருக்கிறது.  என்னை ஏன்  உன் வாசலிலேயே நிற்க வைத்து காத்திருக்க செயகிறாய்?    என்னை ஏன் உள்ளே சேர்த்துக்கொள்ளவில்லை. கண்ணம்மா, காத்திருக்கிறேனே தெரிய வில்லையா?

என்னைப்பற்றி தான் உனக்கு தெரியுமே.  பகலெல்லாம் எங்கெல்லாமோ அலைந்து திரிந்து எவரிடமோ பழகி என் வேலையாக இருந்து விட்டேன். இதோ இரவு நெருங்கும்போது  அவர்கள் யாரும் என் கண்ணுக்கு தெரியவில்லை. எங்கும் இருள் சூழ்கிறது.  நீ மட்டுமே தெரிகிறாய். என் புகலிடம் நீ மட்டும் தானே. என் நம்பிக்கை நக்ஷத்ரம்.

கண்ணம்மா, நீ உன் முகம்காட்டி  தலை அசைத்து புன்னகைக்காவிட்டால் நான் என்ன செய்வேன். பாராமுகம் ஏனம்மா? முழுசாக நான் ஒருவன் நிற்பது கண்ணில் படவில்லையா?  ஜோ வென்று மழை கொட்டும்போதும்  நான் தொப்பலாக உன்னை தேடி எதிர்பார்த்து தான்  நிற்பேன்.எனக்கு வேறு எதுவும் தெரியாதே.  வானத்தை நோக்கி  கண்ணிமைக்காமல் பார்த்து நிற்கும் என் மனம் அலை பாய்கிறதே.  என்  இதயத்திலிருந்து  ''உன்னைக் காணாத நெஞ்சம்..... என்று சோகமாக ஒரு மெல்லிய கீதம் புறப்படுகிறதே உன் காதில் விழுகிறதா?காற்றோடு கலந்து என்னை விட்டு அது  சென்றதே.

 கிருஷ்ணா,  நீ  ஒவ்வொரு நாளும் நான் கேட்காமலேயே எத்தனை அருமையான பரிசுகள் தருகிறாய். இதோ மேலே பார்த்து மயங்குகிறேனே இந்த பரந்த நீல நிற அளவற்ற ஆகாயம், அதில்  சூரிய சந்திர  நக்ஷத்ர ஒளி ஒன்று விட்டு விட்டு  ஜொலிக்கிறது. இந்த அற்புதமான விந்தைகள்  பல கொண்ட உடம்பு, தேகம் தந்தாய்., அதற்குள் உன் அம்சமாக ஒரு உயிர், இதற்காக உன்னை நன்றியுடன் நினைக்க ஒரு மனம்,  எல்லோரிடமும் எதனிடமும்  அன்புசெய்ய  ஒரு  இதயம்.  ஆமாம்...  நீ  தந்தது தான்.  .ஆசைகளில்  இருந்து விலக எத்தனையோ வழிகள்..  நீ இல்லாமல்   நான் எங்கே இதை எல்லாம்  பெறுவேன் ?  எப்படி  உனக்கு  நன்றி செலுத்துவேன்?.
திருமூலர்  பாடியது  நினைவுக்கு வருகிறது. 
 
 ''ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
 ஈசனோடாயினும்  ஆசை அறுமின்கள்  
ஆசை படப்பட ஆய் வரும் துன்பம்
ஆசை விட விட  ஆனந்தமாமே .....''

 நான் அவ்வபபோது  திருமூலர் படிப்பேன். படிப்பதோடு சரி. உள்ளே விஷயம்  போனதில்லை, போனாலும் அதே வேகத்தில் எங்கோ வெளியேறிவிட்டது. மனதில் நின்றால் தானே பலன்?
 
நிறைய  தடவை அப்பப்பா,  உன் மேல் எவ்வளவு கோபப் பட்டிருக்கிறேன். நீ மட்டும் என் கையில் அப்போது  கிடைத்தி ருந்தால்.......அப்போது ,தேடியது எதற்கோ.  இப்போது உன்னை தேடுவது வேறு எதற்கோ....
பாதி தூக்கத்தில் கூட எழுந்து உட்கார்ந்து என் லக்ஷியம் எது என்று புரியாமலேயே அதைத்  தேடுபவன் நான்.   கிருஷ்ணா,   நான் எவ்வளவு குட்டிக்கரணம் போட்டு தேடினாலும் நீ  எட்டாதவன், கிட்டாதவன் என்னிடம் மாட்டாதவன். கடின நெஞ்சம் கொண்டவன்.  நான் முட்டாள் கிருஷ்ணா, அப்புறம் தான் நிதானமாக புரிந்தது. நீ எப்படி கொஞ்சம் கொஞ்சமாக என் உலக ஆசைகளை எப்படியோ நிறைவேறாமல்  தடுத்து, விலக்கி   நிதானமாக, கொஞ்சம் கொஞ்சமாக  என்னை   உன் பால்  இழுத்து என் பலஹீனங்களை புரிந்து கொண்டு, என்  உபயோகமற்ற  எண்ணங்களை  நிறைவேறாமல், அழிய, உதவியவன். 

கிருஷ்ணா, நீ ஆசைகளிலிருந்து  என்னை காப்பாற்றியவன், காப்பாற்றுகிறவன்,  என்றும் காப்பாற்றுபவன்.  உன்னை நன்றியோடு வணங்குகிறேன்.

                                                                                                                                                   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...