Sunday, February 14, 2021

GEETHANJALI

 

கீதாஞ்சலி     --   J K  SIVAN  

தாகூர் 


         21  ''சப்த'' ஸ்வரம்

 21  I must launch out my boat. The languid hours pass by on the shore---Alas for me!
The spring has done its flowering and taken leave.
And now with the burden of faded futile flowers I wait and linger.
The waves have become clamorous, and upon the bank
in the shady lane the yellow leaves flutter and fall.
What emptiness do you gaze upon!
Do you not feel a thrill passing through the air
with the notes of the far-away song floating from the other shore?

கிருஷ்ணா, உனக்கு தெரியுமே,  அரை நூற்றாண்டுகளுக்கு மேல் எனக்கு கப்பல்களோடு இணைந்த  வாழ்க்கை. ஆமாம்  என்  எண்பத்தி இரண்டு  வருஷத்தில் அது  பெரும் பகுதி.  கடலும்  அதன் மேல் மிதக்கும் கப்பலும் எனக்கும் என் குடும்பத்துக்கும்  சோறு போட்டது.  நிச்சயம் நெருங்கிய உறவு.  உப்புக்கரிக்காத இந்த  உறவில்  நீயும்  இனிப்பவன்   அப்போதெல்லாம்,    கிருஷ்ணா,   என் மனதில்  நீ  அப்பப்போ  வந்து போன காலம் அது.   இப்போது  என்  முழு நேர  சிந்தனை நீ,  நீயே.
++ 
'உஸ்,  அப்பாடா.... வசந்தகால தென்றலே வா  வா... ஜிலு ஜிலுவென்று  குளிர்ச்சியாக என் மேல்  படு .
''வசந்தமே   உன் காலம்  முடிந்துவிட்டதா.?  எங்கும்   தாவரங்களைப் பூத்துக் குலுங்கச் செய்துவிட்டு  மரங்களை செடிகளை உலுக்கி  காய்ந்த மலர்களை  என்னருகே  உதிர்த்துவிட்டு போய்விட்டாயா?.  
நான் இனி  மலை போல் சேர்ந்துவிட்ட  இந்த   உலர்ந்த, வாடிய,   மலர்களை,  வாடிய இதழ்களை  பெருக்கி  அள்ளி  தூர வீச  வேண்டிய வேலையை வைத்தாயா?

''ஆஹா  வாடி வதங்கிய  என்  அருமை  மலர்களே,  மலர்ந்து  சில மணிகள் தான் உங்கள்  குறுகிய வாழ்க்கையின்   சரித்திரமா?

''கிருஷ்ணா  எனக்கு  நேரமாகிவிட்டதடா.  வெகுநேரம் வெயிலில்  சுடு மணலில்  படகை சுத்தம் செய்து சோர்வாகிவிட்டது.  கரையில்  படுத்துக் கிடப்பது சோம்பேறியாக்கி விட்டதடா.  மீண்டும்  படகை இழுத்து  கடலுக்குள் தள்ளி  ரொம்ப  தூரம் செல்லவேண்டும்  

படகை  இழுத்து நீரில் இறக்குவது  சுலபமல்ல. மணலில் சிக்கும்.   இன்று காற்று  பலமாக  வீசுகிறது.  கன மழை வரப் போகிறது.  வரட்டுமே. இது என்ன புதிய அனுபவமா? கரையில் துவண்டதெல்லாம் அங்கேயே இருக்கட்டும்.

ஒய்வு ஒழிவு இல்லாத நிம்மதியற்ற, அமைதி அறியாத அலைகள்  ஓவென்று கூச்சலிட்டு எதிரே  கொந்தளிக் கிறது.  கொப்புளிக்கிறது   இனம் புரியாத ஒரு இரைச்சல். நான்  கடலில்,  காற்றின் உதவியால்  நீண்ட தூரம் சென்று விட்டாலும்  கரையைத் திரும்பிப்  பார்க்கிறேன்.   தூரத்தில்  இருந்து பார்க்கும்போது எல்லாம் எப்படி சின்ன சின்னதாக  தெரிகிறது.   உருவமே  மாறிவிட்டது.   எங்கோ வெகுதூரத்தில் நிற்கும் அந்த வயதான பூவரச பூமரம் காற்றில் கிளைகளை தலை   விரித்தாடுவது போல்  ஆட்டி  காய்ந்துபோன மஞ்சளாக மாறிய இலைகளையும்  வாடிய பூக்களையும் பாவாடை விரித்திருப்பது  கண்ணில் படுகிறது.  

என்னைச்  சுற்றி  அலையின் சப்தமும் இல்லை, எல்லையற்ற  நீர்.  எல்லையில்லாத அமானுஷ்யம்.  எதை நான் வெறித்துப்  பார்க்கிறேன்? நடு முதுகெலும்பு தண்டுக்குள்  ஊசி ஏற்றுவது போல் சில்லென்ற  குளிர் பாய்கிறது

கிருஷ்ணா,  உனக்கில்லாத  அனுபவமா.  அகண்ட கடல் போல் யமுனையில் பிறந்து வளர்ந்து ஆடியவனா
யிற்றே.   உன் படுக்கையும்  பால் கடலில்  தானே.   காற்றில் இப்படி அலைகளின்  ஓயாத   சப்தத்தை  சப்தஸ்வரமாக்கி  காற்றின் ஒலியை  தாளமாக வைத்து  உன் குழலோசை  இசைக்கும்  சுநாதம் எங்கோ  எதிர்க்கரையில்  மரங்களிடமிருந்து மிதந்து  வந்து மெல்லிதாக என் காதில் விழுகிறது.  ஓஹோ  நீ  அங்கே இருக்கிறாயா? ''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...