Thursday, February 25, 2021

SURDAS

 

 ஸூர்தாஸ்  ---        நங்கநல்லூர்  J K  SIVAN 


19.  உன்னை நான் அறிவேன்

 


கிருஷ்ண பக்தி எவ்வளவு சுகமானது என்று கண்ணதாசனைக் கேட்டுப்பாருங்கள், அவர் கிடைக்க வில்லையானால்  எப்போதும் நமக்கு பிடித்த  தலைப்பா கட்டிய (ஏதோ சாப்பாட்டு விஷயமல்ல)  பாரதியைப் படியுங்கள் புரியும்.  

ஸூர்தாஸ்  நம் போல்  கண்ணிருந்தும் கண்ணனைக் காணாதவர் அல்லர். பிறவியிலேயே  உழகைப் பார்க்காத  பாக்கியசாலி. வெளியே பார்க்காமல்  மனதிலே ஒவ்வொரு கணமும் கண்ணனின் அழகைத்
துய்த்தவர்.  அவனது ஒவ்வொரு அங்க அசைவும் அவருக்கு தெரியும். அவனது  பார்வையின் ஆயிர அர்த்தங்கள் புரிந்தவர். அவன் நடை  அவருக்கு  லக்ஷம் கதை சொல்லியது. அவன் மனமும் அவர் மனமும் ஒன்றே  என்றபோது அவனைப்பற்றி எல்லாமும் தெரிந்திருக்கவேண்டும்.

ஸூர்தாஸ் மனதில் ஒரு கேள்வி திடீர் என்று எழும்பியது. விடுவாரா கிருஷ்ணனை? கேட்கிறார்.

''கிருஷ்ணா, துன்பமும் துயரமும் கொண்டவர்களின்  துக்கத்தை, சோகத்தை,  வலியை,  யார் துடைப்பது? சாதுக்கள், துறவிகளின் நலனுக்கு பாடுபடுபவர் யார்? 
ஆஹா எனக்கே புரிந்துவிட்டது. கேள்வியிலேயே பதில் இருப்பதை கவனிக்கவில்லை நான். 

''யார் தீன ரக்ஷகனோ, அவனே சாதுக்களின் நலன் பேணுபவன். அஜாமிளனுக்கும், ஜடாயுவுக்கும், ஜரா எனும் வேடனுக்கும் யார் மோக்ஷம் அளித்தானோ அவனே. அஜாமிளன் ஒரு கீழ்த்தர வாழ்வு வாழ்ந்தவன் என்றாலும் ஒரு முறையேனும் நாராயணனை நினைத்து அழைத்தாலும் போதுமே , என்பதற்கு எடுத்துக்காட்டு.

சிறுவன் துருவனுக்குக்  காட்சி கொடுத்து அவனை உயர்த்தியவன் யாரோ,  அவன் தான் பிரஹலாதன் உயிரைப் பலமுறை காப்பாற்றி அவனை மோக்ஷம் அடையச் செய்தவன். இந்த ரெண்டு சிறுவர்கள் பிரஹலாதன், துருவன்  ஆகியோர்  நம்மால்  இன்றும்  என்றும் நினைக்கப்படுகிறார்களே.

லங்காபுரிக்கு சமுத்திரத்தில் பாலம் கட்டிய  வானரர்களுக்கு உதவியவன் யாரோ அவனே கஜேந்திரனை முதலையிடம் இருந்து உயிரைக் காப்பாற்றியவன்.

துச்சாதனன் திரௌபதியை மான பங்கப்படுத்த முயற்சித்தபோது அவனை மயங்கி விழச் செய்யும் அளவுக்கு அவள் மானம் காத்து உடை அளித்தவன். அவள் என்ன தவம் செய்திருக்கவேண்டும் ?

'' ஹரே கிருஷ்ணா'' ஆபத் பாந்தவா'' என்ற ஒரே குரல் கொடுத்தாலே போதுமே'' காத்திருப்பான் கமலக்கண்ணன்.

 இதை எல்லாம் நினைத்து பார்க்கும் ஸுர்தாசுக்கு கண் தெரியாவிட்டால் என்ன? இதோ உன் வாசலில் நிற்கிறேனே  கண்ணா.   இவன்  மீதும் கருணை கொண்டு மேலே சொன்ன அத்தனை பேர் போல இவனையும் காத்து ரக்ஷிக்க மாட்டாயா என்ன?

எப்படி ஸுர்தாஸ் கவிதை நயம்? என்ன சரணாகதி! என்ன எளிமை, தன்னையே பக்தியில் அர்ப்பணிக்கும் பரிசுத்தம்.    இதோ இந்த கவிதையில் தான் மேலே சொன்ன சாராம்சங்கள் பாடலாக இருக்கிறது.

''deenan dukh haran dev santan hitkari
ajamil geedh byadh inme kah kaun saadh
panchhi ko pad padhaat ganika si taari
deenan dukh haran dev ...
dhruva ke sar chhatra det
prahalad ko ubari det
bhakta hetu bandhyo setu
lankpuri jaayi
deenan dukh haran dev .....
gaj ko jab grah grasyo
duhshashan cheer khasyo
sabha beech krishna krishna draupati pukari
deenan dukh haran dev .....
itne hari aaye gaye
basnan aaroorh bhaye
surdas dware khado aanadhro bhikhari
deenan dukh haran dev santan hitkari
deenan dukh haran dev ....''.

 

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...