Friday, February 19, 2021

GEETHANJALI

 



கீதாஞ்சலி    --    J K   SIVAN 
தாகூர் 


23.      நண்பனே  ஆருயிர் நண்பனே !
                                                                                                                                                             
 23 Art thou abroad on this  stormy night on thy journey of love, my friend?
The sky groans like one in despair.
I have no sleep tonight. Ever and again I open my door and look out on the darkness, my friend!
I can see nothing before me. I wonder where lies thy path!
By what dim shore of the ink-black river, by what far edge of the frowning forest,
through what mazy depth of gloom art thou threading thy course to come to me, my friend?                                                        

இது மழை காலத்து  கல்கத்தா  இரவு என்றால்  பிசுபிசுப்புக்கும்  குளிருக்கும்  கேட்கவே வேண்டாம்.   எங்கும் அட்டை கருப்பாக  இருள் சூழ்ந்து இருக்கிறது.   ''ஊ'' வென்று   உடல் நடுங்க வைக்கும்  குளிரை வாரி வீசும்  புயல் காற்று.   உடலை ஊசி துளைப்பது போல்  குளிர் அம்புகள் துளைக்கிறது.  

கிருஷ்ணா,  என்  ஆருயிர் நண்பா,   நான் உன்னை நினைக்கிறேன். நீ  எங்கே இந்த நேரத்தில்  இருக்கிறாய்?எங்கேயாவது  தூர தேசத்திலா? இல்லை  இந்த நாட்டிலேயே  எங்காவதா  மூலை  முடுக்கிலா ?


மேலே பார்த்தால்  வானம்  நிர்க் கதியாக வலி  தாங்கமுடியாத  வியாதியஸ்தன் போல்   உறுமுகிறது. முனகுகிறது.  எப்போது வெடிக்குமோ?   எந்நேரமும்  வானம்  பிளந்து   ஜோ   மழை கொட்டலாம்.

இன்று இரவு எனக்கு தூக்கம் போய்விட்டது.  யாருக்காக ?   நான் ஏன் அடிக்கடி எழுந்து போய் கதவை திறந்து திறந்து பார்க்கிறேன்?  ஒரு வேளை நீ  வாசலில் வந்து நிற்கிறாயோ?  கொஞ்சம்  சத்தம் கேட்டாலும்  ஒருவேளை  நீயாக  அது  இருக்கலாமோ? என்ற நப்பாசை.  இருளில் உற்று உற்று பார்க்கிறேன். காற்று
தான்  கதவை படபடவென்று இடிக்கிறது.   நீயோ  யாரோ  தட்டவில்லை..

இந்த இருளில் யார் உன்னைத் தவிர   என்னைத் தேடி வரப்போகிறார்கள்? என் எதிரே தோன்றுவது எல்லையற்ற  வெறுமை, சூன்யம் தான்.  அது சரி,  உன் பிரயாணத்தில் எந்தப்பக்கம்  நீ நடந்து கொண்டி ருக்கிறாய்?  உன்  பாதை  எந்த பக்கம்?   என் ஆசை தீர  இந்த பக்கம்  உண்டா?

கிருஷ்ணா, என் ஆருயிர் நண்பா,  இந்த இருளில்  கன்னங் கரேல் என்று  கருப்பு மை  பூசியது  போல் அதோ தெரிகிறதே அந்த நதியின்  அக்கரையிலா  நிற்கிறாய் ? நீயே கருப்பு.  அகண்ட   இருள் சூழ்ந்த  காட்டின்  எந்த  மூலையிலிருந்து நீ  தோன்றப்போகிறாய்?     விடாமல் உன்னைத் தேடுகிறேன்.  
 


எண்ணற்ற  சிக்கல்கள் கொண்ட  வலை பின்னி, பிணைத்ததால்  நகர முடியாமல்  இருப்பதுபோல்  என் எண்ணங்கள், மனதில் குழப்பம் தரும் அமைதியின்மை, ஏக்கம், துயரம்  இதிலிருந்து  பளிச்சென்று  சிறிய  ஒளிக்கம்பியாக   ஒரு வழி  உருவாக்கிக்  கொண்டு என்னிடம்  வருவாயா கண்ணா,  உனக்காகத்  தானே  நான் காத்திருக்கிறேன் என் ஆருயிர் நண்பா!  காதில் விழுகிறதா  என் ஓலம்?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...