Friday, February 26, 2021

chanakyan

 

சாணக்யன்   ---   நங்கநல்லூர்   J  K  SIVAN 



 ''கௌடில்யன் சொன்ன அப்பாக்கள்''

உடம்பு பூரா மூளை கொண்ட  ஒரு மனிதன்  சாணக்கியர் என்றும் கௌடில்யர் என்றும்  அறியப்படும்  ஒரு  பிராம்மணர்.  ஆயிரம் வருஷங்களுக்கு மேலாகவும்  சாணக்யனை  அதி புத்திசாலி என அனைவருக்கும் மதிக்கிறோம்.   அவரது அர்த்த சாஸ்திரம் புஸ்தகம் படித்திருக்கிறேன். இவ்வளவு சிந்தனையா? இத்தனை ராஜ தந்திரமா? சாஸ்த்ர ஞானமா? என்று மூக்கின் மேல் விரல் வைக்க பண்ணுபவர். எத்தனை எதிர்ப்புகள் அவருக்கு. கடைசியில் எதிரிகள் சூழ்ச்சியால் உயிர் துறந்தவர். ஞானி. நமது ராஜாஜியை சாணக்கியர் என்பார்கள். அடுத்தது துக்ளக் சோ வும் கூட ஒரு ராஜதந்திரி, சாணக்ய மூளை உள்ளவர், என அழைக்கப் பட்டவர்.

இப்படிப்பட்ட சாணக்கியரிடம்  ஒருவர்  ஒருநாளைக்கு வந்தார்.

''யார்  நீங்கள்  என்ன விஷயம்  சொல்லுங்கள்?

நீங்கள்  ''அப்பா என்பது யார்?'' என்று பேசினீர்களாமே அதை கேட்க வந்தேன். எனக்கும் கொஞ்சம்  விளக்கமாக சொல்லுங்கள் ''

''அப்பா என்றால்  ஒவ்வொரு  மனிதனுக்கும் ஒருவர்  உண்டு.  தியாகி.  அவரைத்தவிர மற்ற சில அப்பாக்களும் நமக்கு இருக்கிறார்கள் என்று தான் சொன்னேன்.?

ஆமாம்  அந்த அப்பாக்கள் யார் என்று தான் கேட்க வந்தேன். 

''மொத்தம்  ஐந்து அப்பாக்கள் நமக்கு '' என்றார்  சாணக்கியர்.

'' யார் அந்த ஐந்து அப்பாக்கள்?''

கர்ம பலனாக ஒவ்வொரு ஜீவனும் இந்த உலகத்தில்  பிறக்கிறது.   அது இன்னொன்றுக்கு அப்பா,  அதற்கு வேறு ஒன்று அப்பா ஸ்தானத்தில்  யாருக்கோ அப்பாவாகவும்  அது ஆகிறது. அப்பா என்கிற அந்த ஜீவனின் கடமை என்ன என்று முதலில் நாம்  சரியாக புரிந்து கொள்ளவேண்டும்.

ப்ரம்ம வைவர்த்த புராணம் ஏழு அப்பாக்களை சொல்கிறது. இந்த ஏழு வித அப்பாக்கள்  வெவ்வேறு வகை.  வித்யாசமாணவர்கள். 

1. உணவை அளிப்பவன் அப்பா. அம்மா அதை ஊட்டுபவள் . ஆனால் அப்பா  தான் எங்கோ சென்று யாருக்கோ ஸலாம் போட்டு உழைத்து சம்பாதித்து அரிசி ,உப்பு , புளி,  பருப்பு  எல்லாம்  வாங்கி வருபவன். அன்னதாதா. உணவின்றி ஒரு நாள் இருக்க முடியுமா?. ''என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது'' என்று  ஒளவையார் பாடி யிருக்கிறாளே. அப்பா இல்லை என்றால் சித்தப்பா, பெரியப்பா,  என்று யாராவது இவ்வாறு அம்மாவையும் பிள்ளையையும் காப்பாற்றினால் அவன் தான் கடவுள். பூஜிக்கத் தக்கவன்.

2. 'பயத்ராதா''  : பயத்தை  போக்குபவன்    Remover of fear (Bhaya-trata , भयत्राता)   ஒரு  அப்பா. பயம் என்பது மரணத் தின் நிழல். புலியைக் காட்டிலும் கிலி கொல்கிறதே. பயம் உண்மையானால் மரணமும் உண்மையானது.
''நீ கவலைப்படாதே, என்னிடம் விட்டுவிடு. நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்று நமது கவலைகளை, பயத்தை போக்குபவன் யாரா இருந்தாலும் அவன் அப்பா ஸ்தானத்தில்  வைத்து வணங்கப் படுபவன் .  பகவானை
 ''என் அப்பனே''  என்று அதால் தான் வேண்டுகிறோம்.

3. ஒரு மனிதனுக்கு தனது மகளை கன்யாதானம் செய்து வைப்பவன் அப்பா.  மாமனாரை இகழ்வோர்கள் இதை ரெண்டு மூன்று தரம் படிக்கலாம். தப்பில்லை. கன்யாதாதா. '' எவன் டீ உன்னை பெத்தான். கையிலே கிடைச்சா செத்தான்'' என்று ஒரு உபநிஷதப் பாடல் தமிழ் சினிமாவில் நிறைய டி. வி.யில் கேட்ட பாபத்தை எங்கே சென்று தொலைக்கப்போகிறேனோ? இதை கேட்ட காது ஒரு காதா?சீ.

4. ''குழந்தை தான் மனிதனுக்கு தந்தை''   child  is  தி father  என்று ஒரு பொன்மொழி கேட்டிருப்பீர்களே. 'Child is the father of man. '    என்று. இதற்கு  என்ன அர்த்தம்? குழந்தையாக உருவெடுப்பவனே அப்பாவாகிறான் அப்புறம் . குழந்தை தான் அப்பா. ஸ்ரீலங்கா தமிழர்கள், மற்றும் நம்மில் சில தமிழ் குடும்பங்களில் குழந்தைகளைக் கூட ''வாங்க போங்க'' என்று மரியாதை குறையாமல் அழைப்பதைப்  பார்த்திருக்கிறேன். குழந்தை தான் அப்பா. 

ஒவ்வொரு   ஆண்  குழந்தையும்  ஒருநாள்  பெரியவனாகி ஒரு குழந்தைக்கு அப்பாவாகிறது..  யாரோ  சொன்னது போல் கண்களில் கண்ணீர்  வடிக்க புகையில்  எல்லோரையும் கஷ்டப்படுத்தும்  பைத்யக்காரத் தனமில்லை. புரிந்து கொள்ளாமல் பேசுவது தான்  அறியாமை.   நமது  ஹிந்து சனாதன தர்மத்தில்  பல யுகங்களாக பின்  பற்றப்பட்டு வரும்   க
ல்யாண சடங்குகள் அர்த்தமுள்ளவை. ஒரு புது உயிர் உண்டாக காரணம் அப்பா. ஜநிதா, ஜன்மதா என்று சமஸ்க்ரிதம் அவனை போற்றுகிறது. அந்த அப்பனின் குணங்கள் தோற்றம் எல்லாவற்றையும் தான் புதிதாக உருவான உயிர் பெறுகிறது. அவனுக்காக ஒரு குழந்தை பெற்றுத் தந்து அருமையாக வளர்க்கும் பணி அவன் மனைவியை சேர்ந்தது. அவள் அம்மா ஆகிறாள்.   அந்த அப்பாவும்  அம்மாவும்  முன்னறி தெய்வங்கள். அவள்  முதல் தெய்வம்.   அப்பா போற்றத் தக்கவன். அந்த காலத்தில் அப்பா தான் ஒருவனுக்கு முதல் வாத்யார்.

அப்போதெல்லாம் தந்தையின் வார்த்தைக்கு மதிப்பிருந்தது. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை யாரோ எழுதி வைத்திருக்கிறார்களே. இப்போது அதை யார் படிக்கிறார்கள்?. ஒருவனை ஆன்மீகத்தில் தெய்வ வழி பாட்டில் உயர்த்துபவன் அப்பா. அவன் வாக்கு மந்திரம். ''Mananam trayate iti mantram (मननं त्रायते इति मन्त्रम्)- மந்திரம் தான் ஒருவனது உண்மையான ஆயுதம். இதை கற்பிப்பவன் அப்பா.
.
இப்படி ஞானத்தை அளிக்கின்றவனை  ஒருவனுக்கு   அப்பா  எனலாம்.     ஞான தாதா gnana-datha , ज्ञानदाता என்று  போற்றப்படவேண்டியவன். அவனே முதல் குரு. ஆசார்யன். தெய்வத்துக்கு சமமானவன்.

தந்தையைப் போலவே அவனது மகனையும்   கல்வி கேள்விகளில் சிறக்க வைப்பவனும்  ஒரு வகையில் அப்பா. உப நேதா upaneta , उपनेता என்ற பெயர் பெறும் அப்பா. அவன் தான் ஆச்சார்யனாக உபநயனம் பண்ணி வைப்பவன். உபா கர்மம் செய்விப்பவன். ஒருவனின் பிரம்மச்சர்ய வாழ்க்கை இந்த ஆச்சாரியனிடம் தான் கழியும். குருகுல வாச காலம்.

5. அடுத்தது பெரிய அண்ணா. இன்னும் நிறைய குடும்பங்களில் அப்பாவை அண்ணா என்று மரியாதையாக எல்லோரும் அழைக்கும் வழக்கம் இருக்கிறது. அப்பாவுக்கு அடுத்து குடும்பத்தில் மரியாதைக்குரியவர் மூத்த தமையன். அவனே அப்பாவுக்கு சமமானவன். jyeshtha-bhrata , ज्येष्ठ-भ्राता பித்ரு சமஹா: டிவியில் கரை வேட்டி வெள்ளை அரைக்கை சட்டையோடு வரும் அண்ணன் என்று நீங்கள் புரிந்து கொண்டால் ஒருவேளை சாணக்கியன் தற்கொலை செய்து கொள்ளலாம்.

நான் மேலே சொன்னது சாணக்யரின் ஸ்லோகத்தை விளக்க என்னுடைய விமர்சனம் சாணக்யன் சொன்ன அப்பாக்களை கீழே பார்க்கலாம் .

अन्नदाता भयत्राता, यस्य कन्या विवाहिता ।
जनिता चोपनेता च, पञ्चैते पितरः स्मृताः ॥
(Anna-dātā bhaya-trātā, yasya kanyā vivāhitāa ।
janitā chopanetā cha, pañchaite pitaraḥ smṛitāḥ ॥)

कन्यादातान्नदाता च ज्ञानदाताभयप्रदः ।
जन्मदो मन्त्रदो ज्येष्ठभ्राता च पितरः स्मृतः ॥
(Kanyādātānnadātā cha jñānadātābhayapradaḥ ।
janmado mantrado jyeṣṭha-bhrātā cha pitaraḥ smṛitaḥ ॥)

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...