Tuesday, February 2, 2021

geethanjali

 

கீதாஞ்சலி   -       J  K  SIVAN 

தாகூர்   


13  எப்போ வருவாயோ எந்தன் கலிதீர

''The song that I came to sing remains unsung to this day.
I have spent my days in stringing and in unstringing my instrument.
The time has not come true, the words have not been rightly set;

only there is the agony of wishing in my heart.
The blossom has not opened; only the wind is sighing by.
I have not seen his face, nor have I listened to his voice;

only I have heard his gentle footsteps from the road before my house.
The livelong day has passed in spreading his seat on the floor; 
but the lamp has not been lit and I cannot ask him into my house.
I live in the hope of meeting with him; but this meeting is not yet.''

 
''கிருஷ்ணா...  சொல்.....நான் ஒரு விசித்திர பிறவியோ?   என்னை மாதிரி யாரையாவது எங்கேயாவது  பார்க்க முடியுமா?
 எனக்கு  நெஞ்சிலே ஒரு ராகம்.  அதில்  ஒரு பாட்டு பாட  வேண்டும் என்ற ஒரு தாகம்.  ஆம்.  வெகுகாலமாக.ஆசை.  அதைப்பாட வில்லை நான்  இதுவரை.    ஏன்?  எனக்கு வீணை மீட்டவும்  தெரியும். வீணை  மீட்டி  பாடவேண்டும்  என்று தீராத ஆசை....  ஏன் அதை என்னால் இன்னும்  வெளியே கொண்டு வந்து நீ  கேட்கும்படியாக  பாட முடியவில்லை.  எனக்கு நல்ல  குரல் வளம் உண்டு. இருந்தும் பாட்டு வெளியே வர வில்லை. நெஞ்சிலே உறைந்து கிடக்கிறது.  வீணையை மீட்டுகிறேன்.  பாடவேண்டும் என்று முயல்கிறேன். எத்தனை நேரம் மீட்டினேன் எப்போது நிறுத்தினேன் என்றே புரியவில்லை. தெரியவும் இல்லை..   ஹுஹும் பாட்டை மட்டும்  இன்னும்  வெளியே  கொண்டு  வரமுடியவில்லை.

ஓஹோ,  என்னுள்  உறைந்த பாடல் இன்னும் சரியான வார்த்தை உருவம் பெறவில்லையோ?  வார்த்தைகள் இன்னும் அழகாக பொருத்தமாக அமைய வில்லையோ ? ஏன் இன்னும் பாடவில்லை?  உடனே பாடவேண்டும் என்ற ஆர்வம்,  தாகம், வேகம், தவிப்பு இது மட்டும் தான் மிச்சம். ஆத்ம ராகம் பாடத்   தணியாத தாகம். ஆமாம் ஆமாம்.    இன்னும் மலர் மொட்டுஅவிழவில்லை என்று புரிகிறது.  என் ராகத்தை  எங்கும் தூக்கிச் செல்ல,  மொட்டவிழ்ந்து மலரின் நறுமணத்தை பரப்ப  காத்திருந்து பெருமூச்சு விடும் காற்று  காத்திருப்பது  தெரிகிறது.  காத்திருந்து பொருமும் காற்றின் உஷ்ண ஸ்வாசம் என் மேல் அனலாக சுடுகிறது.  என் தாபம் உள்ளும் வெளியும்  ரெண்டிலுமா ?

கிருஷ்ணா ,  ஏன் உன்  முகம் இன்னும் கண்ணில் தெரியவில்லை?  
அற்புத சங்கீத ஞானி அவன்.  நான்  காதை மடக்கி கழுத்தை சாய்த்து   உன்னிப்பாகக்  கேட்கிறேன்.  ஆனால்  என்னால்  அவன் குரல், குழல்  ஒலியை  இசையை நேரடியாக  இதுவரை கேட்க இயல வில்லையே.   வேறு யார் குரலோ, பாட்டெல்லாம்  தான்  கேட்கிறது. அவன் எங்குமிருப்பவன் என்பது இருக்கட்டும். இதோ என் வீட்டு வாசல் வரை அவன் நடக்கும் காலடி சப்தம் மட்டுமே ''சலங் சலங்''   என்று அவன் கால் தண்டை ஒலியோடு  நன்றாக என் காதில் கேட்கிறது.   ஆனால்  அவன் கண்ணில்  தென் படவில்லையே.  

 'வாடா கண்ணா வா, வந்து உட்கார்' என்று அவனுக்கு அருமையான ஆசனம் இட்டு நாள் முழுக்க தினந் தோறும் காத்திருக்கிறேன்.  நாளெல்லாம் , ஆமாம் நாளெல்லாம்,  காலமெல்லாம்,   காத்திருக்கிறேன்.

விளக்கு தயாராக  இருக்கிறது.  தீபத்தை  இன்னும் ஏற்றவில்லை.அதன் சுடர் ஒளிவிடவில்லை.  அவனைக்  
கண்டவுடன்,   அவன் வந்தவுடன் தீபம் ஏற்றி  ஹாரத்தி  இட  வேண்டாமா?.  

''வா  கண்ணா, என் இல்லத்தில்,  வா  என் உள்ளத்தில்''  என்று  கூப்பிட நான் இன்னும்  தயாராகவில்லையோ? அது   எப்போது?   ''கண்ணா  எப்போ வருவாயோ,  எந்தன் கலிதீர?   

 நிச்சயம் அவனை  நான் சந்திப்பேன்,  அது எப்போது?  , எப்போது கண்ணா நாம் சந்திக்கப்போகிறோம். நான் காத்திருக்கிறேன்.. பாடலோடு. தீபத்தோடு.....!

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...