Tuesday, July 31, 2018

LALITHA SAHASRANAMAM

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (238 -248)     J.K. SIVAN

मनुविद्या चन्द्रविद्या
चन्द्रमण्डल-मध्यगा ।
चारुरूपा चारुहासा
चारुचन्द्र-कलाधरा ॥ ५९॥

Manu Vidya Chandra Vidya
 Chandra mandala Madhyaga
Charu Roopa Charu Hasa
 Charu Chandra Kaladhara

மநுவித்யா சந்த்ரவித்யா
சந்த்ரமண்டல மத்யகா |
சாருரூபா சாருஹாஸா
சாருசந்த்ர கலாதரா || 59

चराचर-जगन्नाथा
चक्रराज-निकेतना ।
पार्वती पद्मनयना
पद्मराग-समप्रभा ॥ ६०॥

charaachara jagannadhaa
chakraraja nikethana
parvathi padhmanayana
padmaraaga samapraba

சராசர ஜகந்நாதா
 சக்ரராஜ நிகேதநா |
பார்வதீ பத்மநயநா
பத்மராக ஸமப்ரபா || 60


                           ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (238 - 248)  அர்த்தம்

* 238 *  மநுவித்யா  - மனுவின் வாக்குக்கு  மஹத்வம் அதிகம். அவர்  என்ன சொல்கிறார்  ஸ்ரீ லலிதாம்பிகையை பற்றி  அம்பாள் ஸ்ரீ வித்யா ஸ்வரூபம் என்கிறார்.   

 239 *  சந்த்ர வித்யா
1. விஷ்ணு,  2 சிவன், 3. ப்ரம்மா 4. மனு  5 சந்திரன் 6  குபேரன் 7. லோபாமுத்திரை 8. அகஸ்தியர் 9 நந்திகேஸ்வரன் 10. சூர்யன் 11 ஸ்கந்தன் 12 மன்மதன் 13 சகரன் 14 துர்வாசர்  15 யமன் 

இந்த அகண்ட பிரபஞ்சத்தில்  சந்திரனைச் சுற்றியுள்ள  சந்திர மண்டலத்தில்  நடுநாயகமாக வீற்றிருப்பவள் என்கிறார்.  சந்திரமண்டலம் என்பது   நமது உடலில் சஹஸ்ராரத்தை குறிப்பதாகவும், அதன் நடுவே எனும்போது சக்ரமத்தியில் பிந்து வாக இருப்பதாக ஒரு கருத்து. சந்திரமண்டலம் என்பதே  ஸ்ரீ  சக்ரத்தைத்தான். சந்திரனுக்கு 16 கலைகள். அதனால் தான் பௌர்ணமி அன்று லலிதா சஹஸ்ரநாமம் சொல்வது.  சிவன் அக்னியின் சிரசிலும்  அம்பாள் சந்திரனின் சிரசிலும் இருப்பதாக  ஐதீகம். 
  
* 241 * சாருரூபா -     அம்பாள் அதிரூப சௌந்தர்யம் கொண்டவள்.  விவரிக்கமுடியாதவள். 
* 242 *  சாருஹாஸா -  அவள் அங்க லாவண்யத்தை போலவே அவளது புன்னகையும் அழகுவாய்ந்தது.  சந்திரனின் ஒளியோ என திகைக்க வைக்கும்  புன்னகை. அது அவளது பக்தர்கள் அனுபவிக்கும்  திவ்ய ஆனந்தத்தையும்  குறிக்கும்.


* 243 *  சாருசந்த்ர கலாதரா -  அம்பாள் வேறு  அரன் வேறா. இரண்டும் ஒன்றே. ஒன்றே இரண்டும். எனவே அவளும்  பிறை சூடி.  சாரு  என்ற சந்திர ஒளி.  


* 244 * சராசர ஜகந்நாதா  -- 


  அசையும் அசையா  சகல ஜீவராசிகளுக்கும் எஜமானி. தாவர ஜங்கம வஸ்துக்கள் அனைத்தும் அவள் கட்டுப்பாட்டில் அல்லவா?



* 245 *  சக்ரராஜ நிகேதநா -   ஸ்ரீ சக்ர மத்தியில் காண்பவள் ஸ்ரீ லலிதை.  ஸ்ரீ சக்ர ராஜ  ஸிம்ஹாஸனேஸ்வரி
.  சஹஸ்ராரம் தான் ஸ்ரீ சக்ரம். குண்டலினி சஹஸ்ராரத்தை அடையும் போது



 மனம் வசப்படும். சகலமும்  கட்டுப்பாட்டில் வரும். 



* 246 *  




பார்வதீ --  ஹிமகிரி தனயை.  ஹேமலதை .  ஹிமவான் புத்ரி.  சிவபத்னி.  எவ்வளவு அழகான பெயர் அம்பாளுக்கு!


* 247 * 





பத்மநயநா   - அங்கயற்கண்ணி.  அன்றலர்ந்த தாமரை விழியாள் .



* 248 *






பத்மராக 














ஸமப்ரபா  - நவரத்தினங்களில்  பத்மராகம் என்ற ஒரு மாணிக்கக்  கல்  செக்க செவேல் என்று இருக்கும். செந்தாமரைக்கு சாப்பிடலாமா?  பத்மம் என்றாலே  தாமரை தானே.  பிரபை என்றால் ஒளி வட்டம்.  அம்பாளின் குண்டலினி 











சக்தி  அனலென உஷ்ணத்தோடு சஹஸ்ராரத்தில் பிரவேசிப்பதை குறிக்கிறது. செஞ்சுடர் மேனி சிவனை சேர்கிறாள் அம்பாள்.  தான் அவனாகிறாள்.   ப்ரம்மம்.   ப்ரம்மத்திற்கு ஐந்து கார்யங்கள் உண்டு. சிருஷ்டி,  ஸ்திதி,  லயம், திரோதானம்,  அனுக்கிரஹம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...