Thursday, July 19, 2018

ST THIYAGARAJA




' எங்கே நீ மறைந்தாயோ...?''
J K. SIVAN

காவேரியில் கரைபுரண்டு நீர் ஓடுகிறது. அதன் கரையில் திருவையாற்றில் ஒரு பழைய வீடு. ராஜ மான்யம்.
அதில் வசிப்பவர் இப்போது தொண்டு கிழவர். ஸ்ரீ ராம ராம ராமா என்று மூசசுக்கு முன்னொரு தடவை அவர் முனுமுனுக்கிறார். அதுவே சுஸ்வரமாக கீர்த்தனமாக வருகிறது. ராமனோடு பேசுவது நினைப்பது அவனை பாடுவது ஒன்றே அவருக்கு தெரிந்ததெல்லாம்.

கம்மென்று மலர்கள் வாசம் வீசின, எங்கும் அந்த அறையில் கமகமவென்று சாம்பிராணி, அகில்புகை மனம் வீசியது. தம்புராவில் ஓங்கார சுருதி கேட்டுக்கொண்டே இருக்கும் அறை, தியாகப்ரம்மம் இருந்த அறையா அது, இல்லை இல்லை, ஸ்ரீ ராமன் சீதா லக்ஷ்மண ஆஞ்சநேய சகிதம் சந்தோஷமாக தியாக ராஜ சங்கீத கானத்தில் திளைத்து மகிழ்ந்த அறை அல்லவா?

தியாகராஜஸ்வாமி ரொம்ப பெரிய செல்வந்தர். நம்மைப்போல் காசு பணத்தில் அல்ல. மகரிஷி நாரதரே வந்து ''இந்தா உனக்கு பாடு '' என்று சங்கீத ஞானத்தை அருளிய செல்வத்தில். ஸ்ரீ ராமனே கதவை தட்டி நான் உள்ளே வருகிறேன் என்று வந்து நின்ற அறை அது.

கல்விச்சாலையில் கலாசாலையில் காகிதத்தில் எவனோ கையெழுத்து போட்டு கொடுத்த அங்கீகாரமா அந்த ஞானம். பொழுது விடியும்போது ராமனோடு, நாள் முழுதும் ராமனோடு, இரவு முடியும் வரை ராமனோடு, கனவிலும் நனவிலும் ராமனோடு வாழ்ந்து பெற்ற ஞானம் அல்லவா? வாழ்வில் எத்தனை மூச்சு உண்டோ அத்தனையும் ராமனாச்சே.

இன்றோ அந்த நினைவு மீண்டும் ராமனுக்கு அபிஷேகம் பண்ணும்போது அவருக்கு வந்தது. ''எத்தனை நாள் என்னை விட்டு பிரிந்திருந்த வாட வைத்தாய்? '' எந்த நினைவு ..? எப்போது?
அவரது அருமை ராமரை இழந்தபோது? கிட்டத்தட்ட மூன்று மாதம் அவனைக்காணாமல் துடித்தது. ஏன் திடீரென்று இன்று அது நினைவுக்கு வருகிறது?

சிரிக்கிறார் தியாக ப்ரம்மம்.

''ராமா நீ என்னோடு விளையாடி இருக்கிறாய்? எனக்கு தான் புரியவில்லை? ஆனால் நான் எவ்வளவு துடித்தேன் என்பது உனக்கு தெரியுமல்லவா?

''இல்லை பக்தா. உன் துயரத்தில், இழப்பில், நீ என்னை எப்படி தேடுகிறாய், உருகிப் பாடுகிறாய் என்று கேட்க எனக்கு விருப்பமாக இருந்தது ''நெனெந்து வெத குதுரா '', ''கனு கொண்டினி' பாடினாயே ஞாபகமிருக்கிறதா?

கண்களில் நீர் மல்க தியாகராயரின் தலை அசைந்தது. அந்த சம்பவம் நினைவுத் திரையில் மீண்டும் ஓடியது.
+++
'ஜப்பேசன் அண்ணா. மூத்த சகோதரன். உலகத்தில் எல்லோரையும் போல் அவனும். வீடு குடும்பம் பணத்தை தேடுகிறது. சுகம் கேட்கிறது. சம்பாத்தியம் போதவில்லை. தம்பி நன்றாக பாடுகிறான், தானாகவே க்ஷண கால நேரத்தில் பாடல்கள் இயற்றுகிறானே. ஊரும் உலகமும் அவனை புகழ்கிறதே. ராஜா வரை விஷயம் போய் யானை குதிரை பல்லக்கு சகிதம் பணமூட்டையோடு, தங்க நாணயங்களோடு வந்து கூப்பிடிக்கறான், இந்த பயல் போகமாட்டேன் என்று அடம் பிடித்து வந்த லக்ஷ்மியை காலால் உதைக்கிறானே. எவ்வளவோ சொல்லியும் அவன் காதில் ஏதும் நுழையவில்லை. சதா சர்வ காலமும் இதோ இந்த ராம விகிரஹம் முன்னால் அமர்ந்து காலத்தை வீணடிக்கிறானே. இந்த ராமனை முதலில் இந்த வீட்டில் இருந்து அகற்றினால் தான் தப்பி தியாகு வழிக்கு வருவான்'' ஜெப்பேசன் மனதில் இந்த தீர்மானம் உறுதியாகிவிட்டது.

தியாகராஜர் வெளியே உஞ்ச வ்ருத்திக்கு சென்றிருந்த சமயத்தில் ராம விக்ரஹத்தை துணியில் சுற்றி கையில் எடுத்துக்கொண்டு பிசுபிசுவென்ற தூற்றலை பொருட்படுத்தாமல் ஓ வென்று சப்தத்துடன் ஓடும் காவேரியை நோக்கி சென்றான் ஜப்பேசன்.

கரையில் நின்றவன் மனதில் ஒரு கனம் . கையிலும் விக்ரஹமாக ராமன் கனத்தான் .

''ராமா, நான் நிரீஸ்வர வாதி அல்ல. நானும் உன் பக்தன். ஆனால் நான் ஏன் இப்படி செய்ய துணிந்தேன்? என் தம்பி சதா சர்வ காலமும் குடும்ப பொறுப்பு, பற்றுதல், ஈடுபாடு ஒன்றுமில்லாமல் உன்னையே சுற்றிக்கொண்டிருக்கிறான். நான் உன் மேல் பக்தி கொண்டவனாக இருந்தாலும் என் தம்பி தியாகு கொஞ்சம் உன்னை பிரிந்து இருந்தால் திருந்துவான் என்ற ஒரு நப்பாசை. என்னை மன்னித்து விடு. எனக்கு வேறு வழி தோன்றவில்லை. நீ காவேரியில் பள்ளிகொள். உனக்கு தான் பழக்கமாயிற்றே.''

ஜப்பேசன் கண்களில் ஒற்றிக்கொண்டு ராமனை காவேரியில் கைக்கெட்டியவரை தூரத்தில் வீசி எறிந்தான்.
வீடு திரும்பினான். அலறி அழுதுகொண்டு தியாகராஜன் அவனை வரவேற்றார்.

''அண்ணா எங்கே என் ராமன்?'' ஜப்பேசன் மௌனத்திலிருந்து அவன் அடிக்கடி சொல்வானே........ ''இந்த ராமனை ஒருநாள் காவேரியில் எறிந்தால் தான் நீ குடும்பத்தில் கவனம் செலுத்துவாய்?''.....ஓஹோ அது நடந்துவிட்டதா.

வீடே வெறிச்சிட்டுவிட்டதே? உயிரற்ற உடலாகிவிட்டேனே? அண்ணா என்ன செய்துவிட்டாய் நீ? பதிலுக்கு காலத்திராமல் காவேரிக்கரைக்கு ஓடினார். பித்து பிடித்தவன் போல் மூன்று மாத காலம் ராமனை ராமஸ்வாமறையோடு காவிரிக்கரையில் காத்திருந்தார் தியாகராஜர் என்கிறார்கள். எப்படி இருந்தாலும் வெள்ளம் கொஞ்சம் வற்றிய பிறகு காவேரியில் திபுதிபு வென்று இறங்கி தூறு வாருவது போல் வெகு ஆர்வமாக ராமனை தேடினார். ''எண்டு டாகி நாடோ?'' எங்கே அப்பா நீ போய் மறைந்திருக்கிறாய், ராமா?'' என்று கதறுகிறார்.

கனவில் ராமன் நான் இங்கே இருக்கிறேன் என்று சொன்ன இடம் தேடினார். தெரிந்தது. துழாவின கைகளில் கனமாக ராமன் மீண்டும் கிடைத்தான். குழந்தையை பெற்ற தாய் ........ தியாகராஜர் புத்துணர்ச்சியோடு வீடு திரும்பினார்....



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...