Saturday, July 7, 2018

LALITHA SAHASRANAMAM

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்   4      J.K. SIVAN             

ॐ श्रीमाता श्रीमहाराज्ञी श्रीमत्-सिंहासनेश्वरी ।
चिदग्नि-कुण्ड-सम्भूता देवकार्य-समुद्यता ॥ १॥

Srimatha Sri Maharajni Sri Math Simasaneshwari
Chidagni Kunda Sambootha Deva Karya Samudhyatha

ஓம் ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராஜ்ஞீ
ஸ்ரீமத்ஸிம்ஹா ஸநேச்வரி |
சிதக்நிகுண்ட ஸம்பூதா
தேவகார்யஸமுத்யதா || 1

उद्यद्भानु-सहस्राभा चतुर्बाहु-समन्विता ।
रागस्वरूप-पाशाढ्या क्रोधाकाराङ्कुशोज्ज्वला ॥ २॥

உத்யத்பாநு ஸஹஸ்ராபா
சதுர்பாஹு ஸமந்விதா |
ராகஸ்வரூப பாசாட்யா
க்ரோதாகாராங்குசோஜ்ஜ்வலா || 2

Udyath Bhanu Sahasrabha Chadur Bahu Samanvidha
Ragha Swaroopa Pasadya Krodhakarankusojwala

मनोरूपेक्षु-कोदण्डा पञ्चतन्मात्र-सायका ।
निजारुण-प्रभापूर-मज्जद्ब्रह्माण्ड-मण्डला ॥ ३॥

Mano Rupeshu Kodanda Pancha than mathra sayaka
Nijaruna prabha poora majjath brahmanda mandala

மநோரூபேக்ஷு கோதண்டா
பஞ்சதந்மாத்ரஸாயகா |
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத்
ப்ரஹ்மாண்ட மண்டலா || 3

चम्पकाशोक-पुन्नाग-सौगन्धिक-लसत्कचा ।
कुरुविन्दमणि-श्रेणी-कनत्कोटीर-मण्डिता ॥ ४॥

Champakasoka – punnaga-sowgandhika-lasath kacha
Kuru vinda mani – sreni-kanath kotira manditha

சம்பகாசோகபுந்நாக
ஸௌகந்திகலஸத்கசா |
குருவிந்தமணி ச்ரேணீகநத்
கோடீரமண்டிதா || 4

अष्टमीचन्द्र-विभ्राज-दलिकस्थल-शोभिता ।
मुखचन्द्र-कलङ्काभ-मृगनाभि-विशेषका ॥ ५॥

Ashtami Chandra vibhraja – dhalika sthala shobhitha
Muka Chandra kalankabha mriganabhi viseshaka

அஷ்டமீசந்த்ர விப்ராஜ
தளிகஸ்தல சோபிதா |
முகசந்த்ர களங்காப
ம்ருக நாபி விசேஷகா || 5 


वदनस्मर-माङ्गल्य-गृहतोरण-चिल्लिका ।
वक्त्रलक्ष्मी-परीवाह-चलन्मीनाभ-लोचना ॥ ६॥

Vadana smara mangalya griha thorana chillaka
Vakthra lakshmi –parivaha-chalan meenabha lochana

வதநஸ்மரமாங்கல்ய
க்ருஹதோரணசில்லிகா |
வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ
சலந்மீநாப லோசநா || 6
 


नवचम्पक-पुष्पाभ-नासादण्ड-विराजिता ।
ताराकान्ति-तिरस्कारि-नासाभरण-भासुरा ॥ ७॥

Nava champaka –pushpabha-nasa dhanda virajitha
Thara kanthi thiraskari nasabharana bhasura

நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா |
தாராகாந்திதிரஸ்காரி
நாஸாபரண பாஸுரா || 7



மேலே  சொன்ன ஏழு ஸ்லோகங்களில்  லலிதாம்பிகையின்   ஆயிர  நாமங்களில்  என்னென்ன  வருகின்றன என்று   முதல் இருபது நாமங்களின் அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.  நமக்கு எந்த அவசரமும் இல்லை,நிதானமாக ரசித்து ருசிப்போமே.

* 1 * ஸ்ரீமாதா -- நமக்கு அளவற்ற செல்வங்களை அளித்து, துன்பங்களிலிருந்து மீட்டு, சதா  ஆனந்தத்தை வாரி வழங்கும் தாய். 


 2 *  ஸ்ரீ  மஹாராஞி  - அகில புவன சக்ரவர்த்தினியாக ரக்ஷிப்பவள்.

* 3 * ஸ்ரீ மத்  ஸிம்ஹாஸனேஸ்வரி  -  சக்ரவர்த்தி,   மகாராஜாக்கள்  போல் சிம்ஹாசனத்தில்  வீற்றிருப்பவள்.

* 4 * சிதாக்னி குண்ட ஸம்பூதா -  ஞான அக்னியிலிருந்து அவதரித்த மஹா சத்யஸ்வரூபி.

* 5 * தேவ கார்ய சமுத்தியதா - தேவர்களின்  சகல காரியங்களிலும்  உதவுபவள் 

* 6 * உத்யத்பாநு ஸஹஸ்ராபா  -  ஆயிரம்  உதய சூரியன்களைப்  போல்  சொக்கத்தங்கமாக ஜொலிப்பவள். 

* 7 * சதுரபாஹு சமன்விதா  - நான்கு கரங்களை  கொண்டருள்பவள். 

* 8 * ராகஸ்வரூப பாசாட்யா -   பாசம் என்றால் கயிறு.  கயிறு என்ன செய்யும்? பிணைக்கும். நம்மை ஒருவர் விடாமல்  உன்னிடம் அன்பு உண்டு,  அன்பினால் இணைப்பேன், பிணைப்பேன் என்று உணர்த்த  ' இடது'' கையில்  ஒரு பாசம் வைத்திருப்பவள் .

* 9 * க்ரோதாகாராங்குசோஜ்வலா  -   தவறு செய்தால்  தொலைத்து விடுவேன், என்று  தீயவர்களை கண்டிக்க ஒரு வலது கையில் அங்குசம் கொண்ட  நிற்பதாக்ஷண்ய கோபமுடையவள். 

* 10 * மநோரூபேக்ஷு கோதண்டா  - அவள் கையில் இருக்கும்  கரும்பு வில் என்ன உணர்த்துகிறது. அவள் இனிய மனத்தை. பக்தர்களை அன்போடு ரட்சிக்கும் தாயல்லவா?   அதனால் ஒரு இடது கையில் கரும்பு வில். நல்லவர்க்கு கரும்பு அதுவே  தீயோர்க்கு  இரும்பு !

* 11 * பஞ்சதந்மாத்ரஸாயகா - தன்மாத்திரைகள் ஐந்து என்ன தெரியுமா?  தொடுவது, நுகர்வது, கேட்பது, ருசிப்பது,  காண்பது. இவற்றை அவள் அளித்த, மெய், வாய் கண் மூக்கு செவி எனும் இந்திரியங்களால் உணர்கிறோம். இவை ஐந்தும் ஐந்து வில்லாக  ஏந்தியவள் . அவளின்றி நாம் ஏதும் செய்ய இயலாதவர்கள் என்று பொருள். 

12 * நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத்  ப்ரஹ்மாண்ட மண்டலா -   உதய சூரியனை கண்டு ஆனந்தித்ததுண்டா? செக்கச்செவேலென கிழக்கே, பெரிய  உருண்டையாக, இன்னொரு  உலகமோ என்று வியக்க வைக்கும் செந்நிறம் அம்பாளுடையது. அதில் இந்த புவனமே அடக்கம்.  எல்லா மண்டலங்களும் என்கிறார் ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு.

* 13 * சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா   -  அம்பாள் தனது சிரசில் என்னென்ன மலர்களை சூடிக்கொண்டிருக்கிறாள் என்று ஹயக்ரீவர் அறிவார் அல்லவா.  சொல்கிறார் அகஸ்தியருக்கும்  நமக்கும். "செண்பகம், புன்னாகம், சௌகந்திகா, (இந்த நறுமண மலரைத் தேடிக்கொண்டு தான் பீமன் விண்ணுலகு சென்று வழியில் ஹனுமான் வாலை நகர்த்தமுடியாமல் தவித்தான்)

* 14 * குருவிந்தமணி  ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -  ஆஹா  வரிசை வரிசையாக பல வித வர்ணங்களில் கண்ணைப்பறிக்கும் நவரத்ன ஈடற்ற மணிகள் பதித்த பத்ம ராக, வைர வைடூர்ய, கோமேதக, மாணிக்கம் , முத்து, பவழ  மணி மகுடம் தரித்திருக்கிறாள் அன்னை.

* 15 * அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -   அஷ்டமி அன்று ராத்திரி  சந்திரன் கண்டு களித்ததுண்டா?ஒருநாள்  மொட்டைமாடியில் நின்று ரசித்தால்  தெரியும்.  அந்தமாதிரி  ஒளியுள்ள, பூரண காந்தியான நெற்றிஅவள் முக லாவண்யத்திற்கு எடுப்பாக, பொருத்தமாக இருப்பவள். 

16 முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா -- 

17 வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா

18 வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ  சலந்மீநாப லோசநா --  அழகிய  தடாகத்தில் கண்ணைப் பறிக்கும் வண்ண மீன்கள் துறுதுறுவென்று அசையும்  அது போன்ற  அழகிய  கயல் விழிகள் கொண்டவள் அம்பாள். 

19 நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா -- கொஞ்சம் இருங்கள் யோசிக்கிறார் ஹயக்ரீவர். ஆம். கிடைத்தது சரியான உதாரணம். லலிதாம்பிகையின் நாசி எது போல தெரியுமா இருக்குமாம், சண்பக மலர் மொட்டவிழ்ந்து புதிதாக உலகை பார்க்கும்போது எப்படி இருக்குமோ  அப்படியாம். 

20 தாராகாந்திதிரஸ்காரி  நாஸாபரண பாஸுரா
அம்பாளின் திவ்ய சௌந்தர்ய ரூபத்தை, சக்தியை  மேலும் அவளது ஆயிர நாமங்களில் மீதியின் மூலம் அறிவோமா?


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...