Saturday, January 15, 2022

SUR DAS

 ஸூர் தாஸ் - நங்கநல்லூர்  J K   SIVAN


10.  ஹே கோவிந்தா  ஹே  கோபாலா .
 
ஸூ ர் தாசரை வடக்கத்திய ஊத்துக்காடு  வேங்கட சுப்பையர் என்பதா, குருவாயூரப்பனை நேரில் கண்டு பேசிய மேல்பத்தூர் நாராயண பட்டாத்ரி என்பதா,  அல்லது  அவரும்  ஒரு  பில்வமங்களா, சைதன்யரா? ''
 ''ஆம்/ இல்லை''
 ரெண்டும்  சரி.  ஏனென்றால்,  மேலே சொன்னவர்களை போல இல்லை கண்ணற்ற சூர் தாஸ்.    கண்ணனை மனதால் கண்டவர்.  விழியில்லையே தவிர   சிந்தையிலே அந்த சின்னக்கண்ணனை நிலை நிறுத்திக் கொள்ள  வழி தெரிந்த அற்புத மஹான்.

''அடே குட்டி கிருஷ்ணா,  என் எதிரே  உட்கார்ந்து இருக்கியா,   நீ  ஒண்ணு  செய்யேன்''' என்கிறார்   ஸூர் தாஸ்,
''என்ன தாத்தா  நான் என்ன செய்யணும்?  என்று கேட்டான்  கன்னத்தில்  கை  ஊன்றி அமர்ந்த குட்டி கிருஷ்ணன்.
'''என்னை எப்போவும் உன்கிட்டேயே வச்சுக்கிறீயா?   நீ தானே என்னை ரக்ஷிக்கணும். உனக்கு தெரியாதா, நான் இதோ, இப்பவோ, இன்னும் கொஞ்சநாளோ?''  -  என் வாழ்க்கை முடியப்போகிறதே.
 'ஓஹோ  அது தான் உன் ஆசையா?
''அன்னிக்கு சிந்து நதிக்கரையில் என்ன நடந்ததுன்னு  மறந்து போச்சா?''
''என்ன நடந்தது, ஞாபகம் இல்லை,  நீயே சொல்லு தாத்தா?''
''சொல்றேன் கேளுடா கிருஷ்ணா.  தாகத்திற்கு நீர் அருந்த கஜேந்திரன் எனும் யானை ஆற்றில் காலை வைத்து இறங்கியது .எதைச் சாப்பிட்டு இன்று பசியாறலாம் என்று ஒரு முதலையும் அப்போது அந்த நதியில் காத்திருந்தது.  கஜேந்திரன் நீரில் இறங்கியதும் முதலைக்கு மகிழ்ச்சி. ''ஆஹா,  நமக்கு கிடைச்ச  லக்கி ப்ரைஸ் இது '' என்று யானையின் காலை பிடித்து கவ்வியது. உயிர் காத்துக் கொள்ள கஜேந்திரன்  எதிர்த்தான்.
''கையில் கிடைத்த அல்ல  வாயில் கடித்த  ஆகாரத்தை விடுவேனா''  என்று முதலையும் யானையின் காலை  விடவில்லை.
''உயிரா, பசியா? எது வெல்லும்?. அதுவும் நீரில் முதலை பல யானைகளுக்கு சமம். பன்னிரண்டு மணி நேர போராட்டம். முதலையின் கை ஓங்கி யானையை இன்னும் ஆழத்திற்கு இழுத்துக்கொண்டு போகிறது.
யானைக்குத் தெரிந்து விட்டது. நம் சக்தி விரயமாகிக்கொண்டு வருகிறதே. இனி உதவி வெளியே யிருந்து தான் உதவி நமக்கு  வரவேண்டும். யார் உதவுவார்கள்?  சடாரென்று  கஜேந்திரனுக்கு   உன், (கிருஷ்ணன் ) ஞாபகம் வந்தது.
''கிருஷ்ணா, கிருஷ்ணா, துவாரகா நாதா'  ஆதி மூலா'' ....
 யானையின் சோக ஒலி துவாரகை சென்று உன்னுடைய  அரண்மனை கதவை படார் படார் என்று இடித்தது.
''கிருஷ்ணா,  உனக்கு அவசரம் புரிந்து விட்டது. எங்கே கருடன்?  
''கருடா  உடனே  இங்கே வா ''
நொடியில் கருட  வாகனனாக சங்கை ஒலித்துக் கொண்டு    (''நான் வந்துவிட்டேன்' என்று தைரியம் சொல்ல ) கதாயுதத்தோடு பறந்தாயே.

''கிருஷ்ணா , இதோபார்,  இதைக் கேள்.  நான் உன்னை அண்டி வந்தவன். என்னைக்  காத்திடுவாய் என்று கதறுகிறேன். முதலையை காத்ததுபோல் இந்த பவ சாகரத்திலிருந்து, உலக வாழ்க்கைக்  கடலிலிருந்து  என் ஐம்புலன்களாகிய முதலைகளின்  பிடியிலிருந்து  என்னை  நீ   மீட்பாயா. நந்த குமாரா?''

ஸூர்தாஸை அவரது பிரிஜ்பாசி மொழி தெரிந்து படித்தால்  அவர் இன்னும் மணம்  வீசுவார்.  ஹிந்தியில் கிடைத்ததே  பாக்யம். இதாவது கிடைத்ததே  என்ற  திருப்தி.

ஆச்சர்யம்  மேலிட்டு  சந்தோஷமாக அதிசயிப்பதை  'மூக்கின் மேல்  விரலை  வைத்து''  என்று  சொல்வது வழக்கம்.   என்னை  ஆட்கொண்ட   மிகப்  பெரிய   ஆச்சர்யம்  ஒரு  ஓவியனின் கற்பனா சக்தி . கண்பார்வை  அற்ற  ஸூர்தாஸ்   மூச்சுக்கு  முன்னூறு அல்ல மூவாயிரம் கிருஷ்ண நாம ஜபம் செய்பவர். அதை அழகிய கவிகளால்  வெளிப்படுத்துபவர். அதைக்  கேட்கும் போது நம்மை எங்கோ  தேவ லோகத்தில்  கொண்டுசேர்க்கிறது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். குட்டியாக கிருஷ்ணனே நேரில் வந்து அவர் எதிரில் வந்து  கால்களை சப்பணம்  இட்டுக்கொண்டு  எவ்வளவு  லாகவமாக,  பதவிசாக,  
 ஸூர்தாஸ் முன்னால்  அமர்ந்து கொண்டு இடது கன்னத்தில் கை வைத் து குனிந்து அவர்  தன்னைப்  பற்றி  கவி பாடுவதை  ஆர்வமாக ரசித்துக் கொண்டிருக்கிற மாதிரி எப்படி அந்த ஓவியனுக்கு வரையத் தோன்றியது?. கிருஷ்ணன் கண்களில் ஆச்சர்யம், புன்முறுவல் தத்ரூபம். ஒருவேளை கிருஷ்ணன் தரிசனம் கொடுத்திருப்பானோ?

'ஹே,  ஸூர் தாஸ் தாத்தா, நான் செய்தது பெரிதல்ல, நீ அதை ராகமாக செவியினிக்க பாடி நேரில் நடந்ததைப் பார்த்தவன் போல் பாடுவது தான் அபூர்வம்'  என  கிருஷ்ணன் சொல்வதைப்  போல் 
ஓவியம் தீட்டிய நீ யார் அப்பா?.  நீ யாராயிருந்தாலும்   நீ மிக உயர்ந்த  கிருஷ்ண கடாக்ஷம் பெற்றவன் என்று மட்டும் நிச்சயமாக சொல்வேன்''

கஜேந்திரன் எப்படி  முதலையிடம் மாட்டிக்கொண்டான்?
வழக்கமாக ஆற்றில் இறங்கி குளித்து விட்டு தாமரை மலரைப் பறித்துகே கொண்டு வந்து  விஷ்ணுவுக்கு  அர்ச்சனைசெய்யும். எனவே அன்றும் வழக்கம் போல் நீரில் இறங்கிய போது  தானா ஒரு  பெரிய பசித்த முதலை அதன் ஒரு காலை பிடித்துக் கொண்டு நீரில் ஆழத்துக்கு இழுக்க வேண்டும். யானை எவ்வளவோ முயன்றும்  முதலையின் பிடியிலிருந்து, கடியிலிருந்து ,தப்ப முடியவில்லை. முயற்சி, சக்தி,  ரெண்டுமே  இழந்த நிலையில் கஜேந்திரன்  ''ஆதி மூலமே''  என்று கதறுகிறான். ஆதி மூலம் என்ற சொல்  காதில்  விழுந்தால்  நாராயணன் சும்மாவா இருப்பான்? கருடாரூடனாக வந்த  விஷ்ணு, ''நீ போய் உன்  வேலையைச்செய்'' என்று சுதர்சனசக்ரத்தை   வீச, அது  முதலையை  மோக்ஷத்துக்கு   அனுப்பி  கஜேந்தரனின்  காலுக்கு  வந்த  ஆபத்தைமுதலையின் தலையோடு  போகச் செய்கிறது. இது தான் கஜேந்திர மோக்ஷ கதை.

''ஹே கோவிந்தா, ஹே  கோபாலா, இதோநான்ஒவ்வொருநொடியும்மரணத்தைநெருங்கி கொண்டிருக்கிறேன். உன் திருவடி நிழலைத் தா. நீரில் இறங்கினேன் வழக்கம்போல்.ஆனால் வழக்கம் இல்லாமல் ஒரு முதலை யிடம் சிக்கிக் கொண்டேன். என் காலைக் கவ்விய அந்த முதலை என்னை ஆழத்துக்கு இழுக்கிறது. தரையில் அதை எப்போதோ கொன்றிருப்பேன். நீரில் அதன் சக்தி அதிகம். என் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டிருக்கிறதே. முயன்ற வரை என் சக்தி விரயமானது தான் மிச்சம். இதோ என் வாய் கண் காது மூக்கு எல்லாமே நீரில் மூழ்கப்  போகிறதே. அவ்வளவு தான் என் வாழ்க்கை. இதோ கடைசியாக முடிந்த போதே' 'கிருஷ்ணா''
என்று சொல்லி விடுகிறேன். அப்புறம் முடியுமோ, முடியாதோ?   நந்தகுமாரா, நந்த நந்தனா ,, என்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்று''

हे गोविन्द हे गोपाल अब तो जीवन हारे ।
अब तो जीवन हारे प्रभु शरण है तिहारे... हे गोविंद ॥

नीर पीवण हेतु गयो सिन्धू के किनारे
सिन्धू के बीच बसत ग्राह चरण ले पधारे
हे गोविन्द हे गोपाल...

चार प्रहर युद्ध भयो ले गयो मझधारे
नाक कान डूबण लागे कृष्ण को पुकारे
हे गोविन्द हे गोपाल...

द्वारिका में शब्द गयो शोर भयो भारी
शंख चक्र गदा पदम गरुङ ले सिद्धाये
हे गोविन्द हे गोपाल...

सूर कहे श्याम सुनो शरण हैं तिहारे
अबकी बेर पार करो नन्द के दुलारे
हे गोविन्द हे गोपाल...

॥ ॐ नमो भगवते वासुदेवाय ॥

Hey Govind hey Gopal
Hey Govind rakho sharan
Aab to jivan hari --(2)
Neer pivan heytu gayo
Sindhu ke kinare
Sindhu beech basat grah
Charan dhari pachhare
Hey Govind hey Gopal
Chaar prahar yudha bhayo
Ley gayo mazdhare
Naak Kaan Dooban lagey
Krishna ko pukare
Hey Govind Hey Gopal
Dwarika me Sabd gayo
Shor bhayo bhare
Shankh Chakra Gada Padma, Garud ley sidhare
Sur kahe shyam suno sharan hai tihare
Aab ki bar paar karo, Nand ke dulare
Hey Govin Hey Gopal

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...