Saturday, January 29, 2022

A PEACEFUL LIFE

 


இல்வாழ்க்கையில் நல்வாழ்வு.  நங்கநல்லூர்  J K  SIVAN 


''ராமண்ணா,  என்ன  இது  வாழ்க்கை வெறுத்து போயிடுத்து  என்கிறேள் ?  என்ன ஆச்சு உங்களுக்கு?  இப்போதானே  73 ஆகிறது.   போன சனிக்கிழமை  ஆஞ்சநேயர்  வடை கொண்டுவந்து கொடுத்துட்டு என்கிட்டே என்ன சொன்னீர்  ஞாபகமிருக்கா?''

''எவ்வளவோ சொல்றேன் சிவன், எது ஞாபகமிருக்கு, நான் என்ன சொன்னேன், நீங்களே
சொல்லுங்கோ?''

''வாழ்க்கை சுகம்னா  அப்படி ஒரு சுகம் சார். நான்  நூறு வயசு வாழணும்'' னு  சொன்னேள். அப்படி என்ன  சந்தோஷமான விஷயம் ?  என்று கேட்டேன்.  

''என் பிள்ளைக்கு பத்து வருஷம் கழித்து இப்போ தான் அப்பாவாகும் பாக்யம் கிடைச்சிருக்கு. டாக்டர்  மீனாக்ஷி கன்போர்ம் CONFIRM  பண்ணிட்டா.  எங்க  தெருக் கோடி ஆஞ்சநேயருக்கு  வடை மாலை சாத்தினேன்,இந்தாரும் னு எனக்கு ஐந்து கொடுத்தேள்'' அதுக்குள்ளே என்ன விரக்தி?

''ஓ அதுவா, இந்த   உலகத்திலே நடக்கிறது எதுவுமே பிடிக்கலே.   பேப்பரை  திறந்த  எந்த பக்கத்திலேயும் மனசை, மனுஷனை சந்தோஷப்படுத்தற நியூஸ் எதுவுமே காணோம்.  எப்படி திருடலாம், கொள்ளை அடிக்கலாம், பொய்  சொல்லலாம், எங்கெல்லாம் லஞ்சம் ஊழல்.  போலீஸ் ..... இது பார்த்தவுடனே,  ஆசையா குடிச்ச காப்பிகூட  வெளிலே வாயிலெடுக்க வைக்கிறது. 

வீட்டிலே  காய்கறி வாங்க  சின்ன கூடை கொடுத்தா.    எல்லாம் யானை விலை குதிரை விலை. முருங்கைக்கா  வாங்கப்  போனேன். ஒன்ணு 38 ரூபாய். தேங்கா 40 ரூபாய். எங்கேயோ எவனோ கோடி  கோடியாக  நிறைய  சைபரோடு  லஞ்சம் ஊழல் பண்ணிட்டு கார்லே சுகமா போகிறான்.  என் வம்சத்திலேயே யாரும்  ஒரு காலணா லஞ்சம் வாங்கினதில்லே, கொடுத்து கை  சிவந்த குடும்பம் என்கிறான் கேட்டுட்டு கை  தட்ட  கும்பல் அவனே ஏற்பாடு பண்றான். இந்த பாழாப்போன கொரோனா  இயற்கையா இல்லை, செயற்கையா  சீனா செஞ்சு  உலகத்திலே எல்லா இடத்திலேயும் பரப்பினது என்று ஒரு ஜப்பான் விஞ்ஞானி சொல்றான்.  பகவானை திட்றவன்  கோயிலை இடிக்கறவன் , இதெல்லாம்  அறவே எனக்கு பிடிக்கலே, எங்க தாத்தா காலம் இனி வராது, அதனாலே தாத்தா கிட்டேயே போயிடணும்  போல தோண்றது ''  

ராமண்ணா  விரக்தியா பெருமூச்சு விட்டார்.
''ராமண்ணா, ஒரு நிமிஷம் இதை கேளுங்கோ,  உலகம்னா   அப்படித்தான், மாறிண்டே இருக்கும், அது தான் நியதி, எதுவுமே  ரெண்டு  ரெண்டு தான்.  கணவன் X  மனைவி மாதிரி.  எதிரும்  புதிருமா. பகல் x  இரவு,  பிறப்பு x இறப்பு,  ஏழை x  பணக்காரன், ஒரு காசுக்கு ரெண்டு பக்கம்.  ஒரு பக்கம் ராஜா தலை, இன்னொரு பக்கம் அவன் தலையிலே வச்சுக்கமுடியாத பூ.  படிச்சவன் x  படிக்காதவன், ஆஸ்திகன் x  நாஸ்திகன்.. இதுபோல் எத்தனையோ.    சிலபேர் காரணமில்லாமல்  விதண்டாவாதம், பிடிவாதம்,  கர்வம்,  சுயநலமாக  நம்மை அணுகினாலும், அவர்கள் அறியாமைக்கு வருந்தி அவர்களை மன்னிப்போம், மறப்போம்.

நாம்  கருணையோடு, அன்போடு பெரிய மனதோடு நடந்துகொண்டாலும்  தீய எண்ணங் களோடு நெருங்குவார்கள்.  தேள், பாம்பு, பூரான், இயற்கை குணம் போல அது என்று அவர்களிடம் தொடர்ந்து அன்பும் கருணையும் கொள்வோம்.

நாம் நேர்மையாக இருந்தாலும், நமக்கு துரோகம் செய்வான். கிடக்கட்டும். நாம் நேர்மையோடு நடந்து  கொண்டே இருப்போம்.    நாம் சந்தோஷமாக இருப்பதை பார்த்து பொறாமையில் வெந்து கருகுவான். எதிலும் திருப்தியோடு சந்தோஷமாகவே ஒவ்வொரு  வினாடியும் நமக்கு கழியட்டும்.
எவ்வளவு தான் நல்லது செய்தாலும் தூற்றுபவன் தூற்றட்டும். நல்லதே நினைப்போம், செய்வோம்.
என்னிடம் இருக்கும் சிறந்ததை  சந்தோஷமாக  தருவேன்.  அது உலகத்துக்கு சிறந்ததாக இல்லா  விட்டால் எனக்கென்ன?  என்னிடம்  இருக்கிறது அது தான்.   என்  பெஸ்ட் . BEST .  சிறந்ததாக கருதி தானே தந்தேன்.  தரேன்.   அப்படி நினைச்சு தானே   எழுதறேன்.  பிச்சைக்காரனிடம்  ராஜ முழி  எதிர்பார்த்தால் அவன் என்ன  பண்ணமுடியும்?  இருக்கறது அவ்வளவு தான். 
 
நம் உடம்பில் எத்தனையோ  கெட்ட  சமாசாரங்கள் ஒளிந்து கொண்டிருந்தால்  கண்டுபிடித்து அவற்றை வெளி யேற்றி விடுவோம்.  நல்ல  ஆரோக்யமான உடல்நிலை, நல்ல  மனநிலையால் தான் கிட்டும்.  என் ஒவ்வொரு  திசுவிலும்  கிருஷ்ணன் இருந்தால் அப்புறம் என்ன கஷ்டம் எனக்கு?  அவனுக்கு நன்றி சொல்லவே  என் வாழ்நாள்  போதாதே.   மற்றவர்களை பற்றி எனக்கு என்ன கவலை? அப்படி நினைத்தாலும், அவர்களைப்  பற்றிய நினைவு நல்லதாகவே மனதில்படட்டும்.   உருவாகட்டுமே .  அதுவே என் ஆரோக்கியத்துக்கு இன்னொரு கனமான அஸ்திவாரக்கல்.

இந்த உலகை விட்டு நீங்கும்போது நீ என்ன பெற்றாய் என்பதை விட என்ன கொடுத்தாய் என்று தான் கணக்கு பார்ப்பார்கள்.  நான் நிறைய  புஸ்தகங்களை விட்டுச் செல்வேன். அது தான் என் ஆஸ்தி. அதற்காக ஒரு நாளைக்கு 20 மணி நேரம் சந்தோஷமாக மனதிருப்தியாக செலவிட முடிகிறது.. இப்போதைக்கு  அது தான் இந்த நிலை, கிருஷ்ணன் மனது வைத்தால்  சொச்ச காலமும் இப்படியே ஓடி விடாதா?  ஓடணும் என்பது தான்  வேணுகோபாலனிடம் என் வேண்டுகோள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...