Monday, January 24, 2022


 ஸூர்தாஸ்   -  நங்கநல்லூர்  J K   SIVAN


'' எழுந்துக்கோ ''  

ஸூர்தாஸ்  கண் பார்வை இழந்தவர்  என்று  நாம் நினைத்தால்  நாம் தான் குருடர்கள். புறக் கண்ணால்   சிறிது தூரம் வரை இருப்பதை  மட்டும் தான் பார்க்க முடியும். நாம்  அப்புறம் இருப்பதை காணமுடியாத குருடர்கள் இல்லையா?   ஆனால் மனக்கண்  மூலம்  அற்புதமாக  பல யுகங்கள் தாண்டி  எங்கோ எப்போதோ  நடந்ததைப்  பார்க்க முடியும் என்று நிரூபித்தவர்க நமது ஹிந்து சனாதன தர்மத்தில் எத்தனையோ  ரிஷிகள், மஹான்கள் ஞானிகள்.  அப்படி ஒருவர் தான் ஸூர்தாஸ் .  கலியுகத்தில் குருடராக நமக்கு தெரிந்தாலும் துவாபர யுகத்தில் கிருஷ்ணனோடு கூடவே இருந்த அங்கே அப்போது   நடந்ததை எல்லாம்  நிதர்சனமாக பார்க்க முடிந்தவர்,  தான் துய்த்த அந்த இன்பத்தை பாடல்கள் மூலம்  நமக்கும் சொன்னவர்.

 குட்டி  கிருஷ்ணனை தொட்டிலிலிருந்து  யசோதை  எழுப்பும்  காட்சியை  எவ்வளவு  அற்புதமாக ஸூர்தாஸ்   வர்ணிக்கிறார் பார்க்கலாமா?  இந்தியோ  வ்ரஜபாஷையோ  நமக்கு தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் எவரோ மொழி  பெயர்த்ததை தான் ரசிக்கமுடிகிறது என்றாலும்  அதை  தமிழில் அனுபவிப்போம்.  இதற்குண்டான  ஹிந்தி  படலைத் தேடினேன்  எனக்கு கிடைக்கவில்லை.
உங்களிடம்  சூர்தாஸ் ஹிந்தி பாடல்கள் இருந்தால் அதை இங்கிலீஷில் அர்த்தத்தோடு எனக்கு அனுப்பினால் ரொம்ப உதவியாக   தமிழில் படித்து பலரை  சந்தோஷப்படுத்தலாம்.

சுப்ரபாதம்.  பொழுது புலர்ந்துவிட்டது . எழுந்திரு  கிருஷ்ணா, சீக்கிரம்.  விழித்துக்கொள். இதைப்பார். எவ்வளவு அழகாக  தாமரை மலர்கள் மொட்டு அவிழ்கிறது.  அதோ  அல்லி மலர்களும் எவ்வளவு  தேன் வண்டுகளை   தேனை  வயிறு நிறைய  நிரப்பி வழி அனுப்புகிறது. கொடிகள் காற்றில் அசையும் போது சிறு சிறு பறவைகள் ஊஞ்சலாடிவிட்டு பறக்கின்ற அழகைப் பார். கொக்கரக்கோ  சப்தங்கள்  காதில் விழுகிறதல்லவா?  சொல்லி வைத்தாற் போல்  எல்லா சேவல்களும்  எப்படி  ஒரே மாதிரி ஸ்வரத்தோடு சப்த மிடுகின்றன.  கடிகாரங்களை விழுங்கி இருக்குமா?  சப்த ஜாலங்கள் என்றால் மரங்களில்  கூவும்  பறவைகளின் வினோத ஒலிகள் தான்.  அம்மா, அம்மா என்று  அடி   வயிற்றி லிருந்து எழும்பும் பசுக்களின் குரல் கன்றுகளை சந்தோஷப் படுத்துகிறது. அவிழ்த்து விட்டவுடன் கன்றுக் குட்டிகள் எவ்வளவு  ஆசையாக தாவித் தாவி அம்மாக்களைத்  தேடுகிறது. சூரியன் கிழக்கே எழும்பியதால்  சந்திரனின் சாம்ராஜ்யம்  முடிவுக்கு வருகிறது.  வ்ரஜ பூமியில்  வழக்கம்போல கோப கோபியர்கள்  அன்றாட கடமைகளைத்  துவங்க தொடங்கி விட்டார்கள்.

 அட , எவ்வளவு இனிமையாகப்  பாடிக் கொண்டே அவர்கள் சந்தோஷமாக தங்களது வேலைகளை செய்கிறார்கள்.     இதெல்லாம்  எதற்கு சொல்கிறேன் தெரியுமா  கண்ணா,  எழுந்திரடா  குட்டிகிருஷ்ணா, உன் தாமரை மலர் போன்ற திருக்கைகளை நீட்டு  தூக்கி விடுகிறேன். எழுந்திரு.''

   wake up , Krishna,   wake the lotus-petals                  
 open the water-lilies droop
 the bumblebees have left
the creepers cocks crow,
and birds chirp on the trees.
The cows are in the byre lowing;
they run after their calves;
the moon fades before the sun.
Men and women arise
and joyfully sing their songs;
Krishna, of hands lotus-like awake,
for the day is about to dawn.    
         

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...