Friday, January 7, 2022

SURDAS

 ஸூர்தாஸ்    -   நங்கநல்லூர் J K  SIVAN


6.  நீ வேறு நான் வேறா கண்ணா?

நீங்களும்  நானும்  கண்ணனை  காண்பது வேறு.  ஸூர்தாஸ் காண்பது வேறு.  நாம்  ஏதோ  ஒரு அந்நிய ஜீவனைப் பற்றி  நினைப்பது போல்  கண்ணனை அணுகுகிறோம்.  அவர் அப்படியல்ல.  கண்ணனின் குடும்பத்தில் ஒருவராக  அவன்  வளரும்போது  கண்டு மகிழ்ந்த யசோதை நந்தகோபனைப் போலவே  கிருஷ்ணனை  மனக்கண்ணால்  பல  ஆயிரம் வருஷங்களுக்குப் பிறகும் காண்கிறார்.  அது அவருக்கு  கிருஷ்ணன் கொடுத்த பாக்யம். 
இதோ  ஸூர்தாஸின்  ரன்னிங் கமெண்ட்ரி.  running  commentry .

அமைதியான  கோகுலத்தில்  இன்று  ஒரே  சப்தம்.  கலாட்டா  கலவரம் எதுவுமில்லை.  சந்தோஷமாக  மக்கள் எழுப்பும் கூச்சல்.  ஆனந்த சப்தம்...ஒரே கும்பலாக  மக்கள் திரண்டு இருக்கிறார்கள்.

''என்ன ஒரே கூட்டம் அந்த வீட்டின் முன்?''

''விஷயம் தெரியாதா?. ஊரிலேயே பெரிய நந்த கோபன் வீட்டில் ஒரு அழகிய பிள்ளை பிறந்திருக் கிறானே . அவன் கொள்ளை அழகைப்  பார்க்க கூட்டம் கூடாதா?

கூட்டத்தின் இடையே ஒரு தாடி, மீசை , உடலெல்லாம் விபூதி, உடலெங்கும் தலையில் ருத்திராக்ஷம். அந்த  ஜடாமுடி ரிஷிக்கு இங்கே  என்ன வேலை? எல்லாம்  துறந்தவருக்கு இங்கென்ன ஈர்ப்பு ?

''என்ன இப்படி ஒரு கேள்வி? எல்லாம் துறந்தபின் எதைத் தேடுவார்களோ  அதை அல்லவா  இங்கே காண  வந்திருக்கிறார். ''

உள்ளே இருந்து யசோதை வெளியே வந்து எல்லோரையும் ''உள்ளே  வாருங்கள்''  என்று உபசரித்து  அழைக்கிறாள். ஏற இறங்க அவளை பார்க்கிறார் ஜடாமுடி.

''நமஸ்காரம் ப்ரபோ.''

'' நீதான் அவன் தாயா?' யசோதை என்பது நீ தானா?

''ஆமாம் ஸ்வாமி. உள்ளே வாருங்கள் குழந்தையை ஆசீர்வதியுங்கள்''

குழந்தையை வாரி அணைத்தபோது அவர் ஜடாமுடியை  குட்டி கிருஷ்ணன் தனது குஞ்சுக் கரங்களால் பிடித்து இழுத்தான். பின்னால் கொஞ்சம் வளர்ந்த பின்  கோபியரின்    ''பின்னலை பின்னின்று இழுத்தவன்'' அல்லவா? இப்போதே  ரிஹெர்சல்  rehersal.

''என்னைத்  தெரிகிறதா?'' - ஜடாமுடி கண்ணாலேயே கேட்டது  குட்டி கிருஷ்ணனுக்கு புரிந்தது..

''ஆஹா,  உம்மைத் தெரியாத ஒரு கணம் உண்டா? தெரியாதவர் மூவுலகிலும் உண்டா?' -- பொக்கை   வாய் சிரிப்பு பதில் சொல்லியது  அவருக்கு மட்டும் புரிந்தது. 

''ஆம். நாம் இருவரல்ல ஒருவரென்று தெரியுமல்லவா ?''
''நிச்சசயமாக''
குழந்தையை யசோதையின் கையில் அளித்துவிட்டு  ஜடாமுடி பேசினார்

''அம்மா, யசோதா உன் குழந்தை இருக்கிறானே இந்த கிருஷ்ணன், இவன் நித்யன். என்றும் வாழ்பவன். வாழ வைப்பவன், வளமும் வரமும் அளிப்பவன். நீலன். சுருண்ட அழகிய முடியுடை யவன். என்ன அழகாக அடர்ந்த கருத்த கூந்தலை கிரீடம் போல் வளைத்து சுருட்டி வைத்திருக்கிறாய். சிரத்தின் சிகரமாக ஒரு மயில் பீலி வேறு செருகி அழகுக்கு அழகு சேர்த்திருக்கிறாய்.

சிவந்த இதழ் அந்த நீல முகத்தில். ஓஹோ,   நீல ஆழ்கடலில் செம்பவளமோ!.கோகுலத்தில் மொத்த உயிரும் இவனது தானா?

எங்கும் நிறைந்திருக்கும் அக்ரமக்கார அரக்கர்களின் நெஞ்சில் உண்டாகும்  வலி இவன் தருவது தானா?''

ஸூர்தாஸ் பரந்தாமனைப்  பார்த்ததில் பரமசிவனின் பரம சந்தோஷத்தைபற்றி அசாத்தியமாக எழுதுகிறார்.

பிருந்தாவனத்தில் எப்போதும் கண்ணன் ஒரு பெரிய வயதான கருப்பு நிற கப்பும் கிளையான மரத்தடியில் தான் விளையாடுவான். (தமலா என்று ஜெயதேவர் அதை சொல்வார்) அது  போலவே அவனும் கருப்பன் என்று சொல்ல முடியாது. ஆகாசத்தை போல் நீலமாக, கருப்பாக, சிவந்து, கரு நீலமாக எப்படி மனம் வேண்டுமோ அப்படி காட்சியளிப்பவன். மாயா ஜாலன்.

கண்ணன் விளையாடும்போது காலடி மண் தூசி காற்றில் பறந்து என் கண்ணில் பட்டு என் குறை, பாபங்களை நீக்கிவிடுகிறதே என்கிறார் ஸுர்தாஸ்.    இதோ அந்த பாடல்:

Rani tero chir jiyo gopal
Begi badhyo badi hoya viradh lat, mahari manohar baal
Upaji paryo yah koonkhi bhagya bal,samudra seep jaise laal
Sab gokul ke pran jeevan dhan , bairin ke ursal
Sur kito jiya sukh paavat hai, nirkhat shyam tamal
Raj aaraj lagyo meri akhiyan,roge dosh janjaal          

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...