Tuesday, January 11, 2022

SURDAS

 ஸூர்தாஸ் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

  
9. நின் தாமரைப்பதமே கதி

பக்தி பரவசத்தில் தன்னை இழந்து இறைவனோடு ஒன்றி அவனது ப்ரபாவத்தில் மூழ்கி ஆனந்த மான நிலையிலிருக்கும் மஹான்கள் இந்த உலக சிந்தனை துளியும் இல்லாதிருப்பவர்கள்.  அவர்களது வாக்கில் சத்யம் எதிரொலிக்கும். அவர்கள் எழுத்தில், கற்பனையில், சத்யம் பிரதிபலிக்கும். நம்மால் காண முடியாததை ஆனந்தமாக கண்டு விமர்சிப்பார்கள். அவர்களை படிக்கும்போது, அனுபவிக்கும்போது கொஞ்சமாவது  நம்மை  மாற்றும் சக்தி கொண்டவை என்பது புரியும்.  எனவே அடிக்கடி  இதில்  'டச்'   இருக்கவேண்டியது  அவசியம் ஆகிறது. 

அப்படிப்பட்ட  ஒரு பக்தி பூர்வமான மஹான்  கண்ணற்ற  ஸூர் தாஸ்.

கண்ணன் ஸூர்தாஸ் மூச்சில் இருந்து பாடலாக வெளிவந்து எவர்  எழுத்தாலோ இன்று நம் முன்னே   ஹிந்தியில், ஆங்கிலத்தில் புத்தகமாக நிற்கிறான்.

ஸூர் தாஸ் பேசிய  பாடிய  மொழி தெரியாத நாமும் அவரோடு சேர்ந்து கண்ணனை  ரசிக்க வேண்டாமா? அதன் மூலம்  ஸூதாஸின்  கிருஷ்ணானுபவத்தில்  கடுகளவாவது  நாமும் அனுபவிக்க வேண்டாமா?    இன்று ஒரு ஸூர்தாஸ் பாடல்.

''ஹே மனமே,  வா உனக்கு ஒரு நல்ல வழி சொல்லித்தருகிறேன். அங்கே இங்கே  ஓடாதே. அதோ பார் ஒளிவீசும் சிவப்பு நிறத்தில் தோன்றுகிறதே அது என்னவென்று அறிவாயா? செந்தாமரைக் கண்ணனின் தாமரை மலர்ப் பாதங்கள்.  அது  யாருடையதென்று யோசிக்கிறாயா? அதுதான்நமது நந்தகோபன் மகன் கிருஷ்ணன் திருப்பாதங்கள்.  எவன் திருவடி துணை இருந்தால் பயங்கள் நீங்குமோ அவனுடையது..

அரிது அரிது மானுடராகப்பிறத்தல் அரிது. அப்படிப் பிறந்து, இந்தவாழ்க்கை சம்சார கடலை தாண்ட வேண்டாமா? அதற்குசாதுக்களின் சத் சங்கம் தேவை இல்லையா?

இதோ என்னைப்  பார்.  கண்ணற்றவன்.பார்வை  கிடையாதென்பதால்  இரவு எது, பகல் எது,  எனக்கு? எல்லாமே இருட்டு. தூக்கம் ஏது? தேஹத்தில்  உஷ்ணம், குளிர்ச்சி, மழை ,வெயில்,  படுவது தெரிகிறது. அனுபவிக்கிறேன். அற்ப சுகத்தை நாடி, கொடிய, கருமிகளுக்கு உழைத்தேன். அதால் என்ன பிரயோஜனம்?
நான் யார்? அந்த கோவிந்தனின் தாசானு தாசன். நவ வித பக்தி என்பார்களே   அதில் தான் எனக்கு விருப்பம்.  ஓஹோ,   நவவித பக்தி என்னவென்று  சொல்லவில்லையா?. சொல்கிறேன்
என் ஹரியின் பெருமைகளை கேட்பது,  
அவன் பெருமைகளை நாவினிக்க சொல்வது, பேசுவது, ஸ்மரிப்பது, 
கணநேரமும் விடாமல் அவனை நினைவினில் நிறுத்திக் கொள்வது,  
பிரார்த்திப்பது, 
அவன் செந்தாமரை திருவடிகளில் சரணடைவது, 
நறுமண வாசமிகு மலர்களால் அவனைஅர்ச்சிப்பது, 
வாசனாதி திரவியங்களால் அவனைமகிழ்விப்பது, 
அவனுக்கு உற்ற நண்பனாக சேவைபுரிவது, 
இதையெல்லாம் விடு..... என்னையேஅவனுக்காக மறந்து இழந்து அவனுக்கு என் உயிர் உடல் பொருள் ஆவி அனைத்தும்அர்ப்பணிப்பது.... போதுமா ??

போதும்  போதும் போதும்..... என்கிறார் சூர்தாஸ் இந்த அருமையான பாடலில்:

नंदन अभय चरण अभय चरण अरविंद रे
भज हूँ रे मन श्री नंद नंदन अभय चरण अरविंद रे ।
दुर्लभ मानव जनम सतसंगे, तर आये भव सिंध रे ।
अभय चरण अरविंद रे शीत आ तप मात बरीशन,
एह दिन यामनी जाग रे । 
अभय चरण अरविंद रे विफले से बिनु कृपण दुर्जन, चपल सुख नव लाग रे ।
अभय चरण अरविंद रे श्रवण र्कीतन स्मरण वंदन, बाद से मन दास रे । 
अभय चरण अरविंद रे पूजन सकी जन आत्म निवेदन,
गोविन्द दास अभिलाष रे । अभय चरण अरविंद रे
भज हूँ रे मन श्री नंद नंदन अभय चरण अरविंद रे ।
अभय चरण अरविंद रे

Bhajahoon re man sri nand nandan abhaya charan arvind hey
Durlabh manav janam satsange tar jaave bhav sindh re
Sheet Aatap Vatavariyat , ae din aavanijaani re
Biphale sevenu kripan durjan chapal sab sukh lagi re…
Sravan Kirtan Smaran Vandan Paadsevan Dasya re
Poojan Sakhijan Atmanivedan , Govind Das abhilashi re…
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare    

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...