Friday, January 21, 2022

MOOKA PANCHASATHI

 மூக பஞ்சசதி  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

ஆர்யா சதகம்.
 
वीक्षेमहि काञ्चिपुरे विपुलस्तनकलशगरिमपरवशितम् ।
विद्रुमसहचरदेहं विभ्रमसमवायसारसन्नाहम् ॥ ३१॥

31. Veekshe mahi Kanchi pure, vipula sthana kalasa garima paravasitham,
Vidhruma saha chara deham vibhrama samavaaya sara samnaham.

வீக்ஷேமஹி காஞ்சிபுரே விபுலஸ்தனகலஶகரிமபரவஶிதம் |
வித்ருமஸஹசரதேஹம் விப்ரமஸமவாயஸாரஸன்னாஹம் ||31||

பெண் என்றால் சௌந்தர்யம்.  அப்படி ஒரு பெண்ணை, தெய்வமாக, சகல சவுந்தர்யங்களோடு நான் காஞ்சிபுரத்தில்  காமாக்ஷி ஆலயத்தில்  பார்த்தேன்.  வைத்த கண் வாங்காமல், நகர மனமில்லாமல் சந்நிதியை விட்டு விலக நேர்ந்தது.  அப்படி ஒரு அழகுச் சிலை வேறெதுவும் இல்லை, வேறெங்கும் இல்லை.  சிரித்த முகமும் பவழம் போல் மேனியும்  கண்முன்னே  நிற்கிறது. 

कुरुविन्दगोत्रगात्रं कूलचरं कमपि नौमि कम्पायाः ।
कूलंकषकुचकुम्भं कुसुमायुधवीर्यसारसंरम्भम् ॥ ३२॥

32. Kuruvinda gothra mathram koolacharam kamapi naumikampaayaa,
Koolangasha kucha kumbham kusumayudha veerya sara samrambham.

  குருவின்தகோத்ரகாத்ரம் கூலசரம் கமபி னௌமி கம்பாயாஃ |
கூலம்கஷகுசகும்பம் குஸுமாயுதவீர்யஸாரஸம்ரம்பம் ||32||||

சிவந்த ரத்தினங்களை கும்பாச்சியாக  கூட்டி  ஒரு உருவம் செய்தால்  அது தான்  அம்பாளோ? அவளது சௌந்தர்யத்துக்கு ஈடு இணை எவரைச் சொல்வது? இப்படி  அழகாக  அந்த நாரீமணி  கம்பா நதிக்கரையில்  உலவிடும்போது  உலகமே  பின் செல்லாதோ?  ஒரு தாய்  அழகானவள் என்று பெருமைப்படும் பிள்ளைகள் நாம். அழகுக்கு அழகு சேர்த்தாற்போல்  யௌவன அழகி அம்பாள் கையில் மன்மத பாணங்கள்,  கரும்பு வில். எவர் எதிர்க்க முடியும் அவளை?   நான் தரிசித்து  மகிழ்ந்து மீண்டும் மீண்டும் நமஸ்கரிக்கிறேன்.

कुडूमलितकुचकिशोरैः कुर्वाणैः काञ्चिदेशसौहार्दम् ।
कुङ्कुमशोणैर्निचितं कुशलपथं शम्भुसुकृतसम्भारैः ॥ ३३॥

33. Kudmalitha kucha kisorai kurvanai Kanchi desa souhardham,
Kunkuma sonair nichitham kusala padham shambhu sukrutha sambharai.

குடூமலிதகுசகிஶோரைஃ குர்வாணைஃ காஞ்சிதேஶஸௌஹார்தம் |
குங்குமஶோணைர்னிசிதம் குஶலபதம் ஶம்புஸுக்றுதஸம்பாரைஃ ||33||

காஞ்சி தெய்வம்  காமாக்ஷி.  எல்லோரையும்  காந்தம் போல் வசீகரிப்பவள்.  அவளது செந்நிறம் பக்தர்கள் கண்களை  சுண்டி இழுக்கிறது.    பக்தர்களை காக்கும் பாரா தேவதை யை தரிசித்து மகிழ்ந்து நமஸ்கரிக்கிறேன்.

अङ्कितकचेन केनचिदन्धंकरणौषधेन कमलानाम् ।
अन्तःपुरेण शम्भोरलंक्रिया काऽपि कल्प्यते काञ्च्याम् ॥ ३४॥

34. Ankitha kachena kena chidandhangarana oushadhena kamalaanaam,
Antha purena Shambhoa alankriya kaapi kalpyathe kanchyaam.

அங்கிதகசேன கேனசிதன்தம்கரணௌஷதேன கமலானாம் |
அன்தஃபுரேண ஶம்போரலம்க்ரியா கா‌உபி கல்ப்யதே காஞ்ச்யாம் ||34||

அம்பாள்  சிவப்ரியை.  சிவனோடு இரண்டறக் கலந்த  அர்த்தநாரீஸ்வரி .அம்பாளும் சிவனைப்போல் பிறை சூடி காஞ்சி நகருக்கே  அழகூட்டுகிறாள். தாமரை முகத்தாளை வணங்கி நமஸ்கரிக்கிறேன்.

 ऊरीकरोमि सन्ततमूष्मलफालेन ललितं पुंसा ।
उपकम्पमुचितखेलनमुर्वीधरवंशसम्पदुन्मेषम् ॥ ३५॥

35. Oori karomi santhatha mooshmala phaalena laalitham pumsaa,
Upakampa muchitha khelanam oorvadhara vamsa sampad unmesham.

ஊரீகரோமி ஸன்ததமூஷ்மலபாலேன லலிதம் பும்ஸா |
உபகம்பமுசிதகேலனமுர்வீதரவம்ஶஸம்பதுன்மேஷம் ||35||

எனக்கு என்ன வேலை?  காஞ்சி நகரவாசி யாகிவிட்டேன்,  காமாக்ஷி தாசனாகி விட்டேன்.  அவளை தியானிப்பதே என் லக்ஷியம்.  அவள் முகம் எவ்வளவு குளுமையோ அவ்வளவு  சூடாக இருக்கும்   சிவனின் நெற்றி.  அக்னி குடியிருக்கும் நெற்றிக்கண் இருக்கும்போதே  சூடு இல்லாமலா இருக்கும்?  ஹிமவான் வம்ச குல ரத்னம் அவ்வளவுக்கவ்வளவு  குளுமையான கண்களை கருணையை காட்டுபவள் .. நமஸ்கரித்து வணங்குகிறேன்.

अङ्कुरितस्तनकोरकमङ्कालंकारमेकचूतपतेः ।
आलोकेमहि कोमलमागमसंलापसारयाथार्थ्यम् ॥ ३६॥

36. Ankuritha sthana korakam angalankaram eka chootha pathe,
Aloka mahi komalam aagama samlapasarayadharthayam.

அங்குரிதஸ்தனகோரகமங்காலம்காரமேகசூதபதேஃ |
ஆலோகேமஹி கோமலமாகமஸம்லாபஸாரயாதார்த்யம் ||36||

ஏகாம்ரம்  என்றால்  ஒற்றை மாங்கனி உடைய  மாமரம். அதன் அடியில் அமர்ந்து தவம் செய்தவள். காமேஸ்வரன் இடது துடையில்  அமர்ந்து ரக்ஷிப்பவள்.  வேதங்களின் உட்பொருள் ஆனவள்.  அழகே உருவெடுத்து  வந்தவள். நமஸ்கரிக்கிறேன்.


पुञ्जितकरुणमुदञ्चितशिञ्जितमणिकाञ्चि किमपि काञ्चिपुरे ।
मञ्जरितमृदुलहासं पिञ्जरतनुरुचि पिनाकिमूलधनम् ॥ ३७॥

37. Punchitha karunaa mudanchitha, sinchutha mani Kanchi kimapi kanchipure,
Manchareetha mrudhula haasam pinchara thanu ruchi pinaki moola dhanam.

புஞ்ஜிதகருணமுதஞ்சிதஶிஞ்ஜிதமணிகாஞ்சி கிமபி காஞ்சிபுரே |
மஞ்ஜரிதம்றுதுலஹாஸம் பிஞ்ஜரதனுருசி பினாகிமூலதனம் ||37||

கம்பா நதிக்கரையில் கிளிங் கிளிங்  என்று சத்தம் கேட்கிறதே  அது என்ன தெரியுமா?  அம்பாளின் இடையில் அணிந்திருக்கும் ஒட்யானத்தின்  நவமணி சலங்கைகள்  வேதநாத ஒலி .  அந்த சப்தமே  பக்தர்களின்  துன்பமகற்றி கருணை பெறச் செயகிறது. அந்த இனிய நாதம் காஞ்சி முழுதும் எதிரொலிக்கிறது.  இந்த இனிய இளைய தாமரை மொட்டு தான் மகேஸ்வரன், ஏகாம்ர நாதனின் பொக்கிஷம், செல்வம், பெரும்  தனம் .  நமஸ்கரிக்கிறேன்.

लोलहृदयोऽस्ति शम्भोर्लोचनयुगलेन लेह्यमानायाम् ।
ललितपरमशिवायां लावण्यामृततरङ्गमालायाम् ॥ ३८॥

38. Lola hrudayosmi Shambho lochana yugalena lehyamaanaayaam,
Laalitha paramashivaayaam lavanyaa amrutha tharanga maalaayaam.

லோலஹ்றுதயோ‌உஸ்தி ஶம்போர்லோசனயுகலேன லேஹ்யமானாயாம் |
லலிதபரமஶிவாயாம் லாவண்யாம்றுததரங்கமாலாயாம் ||38||

பரமேஸ்வரனே மயங்கி கண்களால் விழுங்கும் அழகு தெய்வம்  அம்பாள்.  கருணா சாகரி . லலிதா பரமேஸ்வரி அம்ருதமாக கண்களுக்கு  விருந்தூட்டுபவள்.  சௌந்தர்யம் எனும் சமுத்திரத்தில் அடுத்தடுத்து ஓயாமல்  எழும்பும்  அழகிய அலைகள், லஹரி, போன்றவள்  அழகிய  அம்பாள் என்பதால் அவளை வர்ணிக்க  சௌந்தர்ய லஹரி  என  ஸ்ரீ  ஆதி  சங்கராச்சார்ய பகவத் பாதாள்  தனது ஸ்லோகங்களை பெயரிட்டார்.  நமஸ்கரிக்கிறேன்.

मधुकरसहचरचिकुरैर्मदनागमसमयदीक्षितकटाक्षैः ।
मण्डितकम्पातीरैर्मङ्गलकन्दैर्ममास्तु सारूप्यम् ॥ ३९॥

39. Madhu kara sahachara chikurai madanaagama samaya dheekshaa kadakshai,
Manditha kampaa theerai mangala kandhairmaasthu saaroopyam.

மதுகரஸஹசரசிகுரைர்மதனாகமஸமயதீக்ஷிதகடாக்ஷைஃ |
மண்டிதகம்பாதீரைர்மங்கலகன்தைர்மமாஸ்து ஸாரூப்யம் ||39||

அம்பாளின் சுருண்டு திரண்ட  கருமையான கேசங்கள்  காற்றில் அசையும் போது   கருவண்டுகள்  அவளைச் சுற்றி பறப்பது போல் தோன்றுகிறதே.   கம்பா நதிக்கரையில்  ஒளிவீசி  சஞ்சரிக்கும்  காமேஸ்வரி,  காமாக்ஷியின் திருப்பாதங்களை சேர்ந்து விடவேண்டும்.  அவளைத் தரிசிக்கவேண்டும் என்ற  ஆவல், தாபம், தணியவே  இல்லை. நமஸ்கரிக்கிறேன்.

वदनारविन्दवक्षोवामाङ्कतटीवशंवदीभूता ।
पूरुषत्रितये त्रेधा पुरन्ध्रिरूपा त्वमेव कामाक्षि ॥ ४०॥

40. Vadanaravinda vaksho vamanga thatee vasam vadhee bhootha,
Purushatrithaye thredhaa purandhri roppaa thwameva Kamakshi.

வதனாரவின்தவக்ஷோவாமாங்கதடீவஶம்வதீபூதா |
பூருஷத்ரிதயே த்ரேதா புரன்த்ரிரூபா த்வமேவ காமாக்ஷி ||40


அம்மா  தாயே,  நீயே  பல  நாமங்கள், ரூபங்கள் கொண்டவள்,  ப்ரம்மாவின் நாவில்  நீ  ஸரஸ்வதி , மஹா விஷ்ணுவின்  மார்பில் நீ  மஹா லக்ஷ்மி ,  சிவனின் இடது பாகத்தில்  நீ உமா மஹேஸ்வரி, அர்த்தநாரீஸ்வரி.   அம்மா, காமாக்ஷி, உன்னை தியானிக்கிறேன், வணங்குகிறேன். நமஸ்கரிக்கிறேன்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...