Wednesday, December 15, 2021

 கோதையின் கீதை -   நங்கநல்லூர்  J K  SIVAN 


 2.   மார்கழி 1ம் நாள் '' இதுவில்லிப்புத்தூரில்: 


''ஏம்மா, குழந்தை வழக்கத்தை விட சீக்கிரமே எழுந்துட்டே.? உன்னுடைய திவ்ய குரல்லே நீ பாசுரங்கள் பாடும்போதுஎன்னை ஸ்ரீ வைகுண்டத்துக்கே கொண்டு சேர்க்கிறதம்மா''.-   தந்தை விஷ்ணுசித்தர் என்கிற பெரியாழ்வார் குரல்தழுதழுத்தது.

''அப்பா. எல்லாம் நீங்க கத்துக் கொடுத்தது தானே. எனக்குநீங்க இல்லாட்டா இதெல்லாம் எழு,   பாட,  வருமா அப்பா. அரங்கனை   எனக்கு  அறிமுகப் படுத்தியதே நீங்கதானே.   காரணமே நீங்க தானே. என் ரங்கனை பத்தி பாடத் தோண வச்சதே நீங்க தானேப்பா?
''ஆமாம் தாயே, நான் செஞ்ச பெரிய பாக்கியம் உன்னை அடைந்தது. உன் மூலமா அந்த ரங்கனைநினைக்கிறது, அவனைப் பத்திபேசறது, பாடறது எல்லாம்.இப்படியே என் வாழ்நாள் பூரா   போகணும்னு தோணறது அம்மா. இப்பல்லாம் நீயே எழுத்தாணிபிடிச்சு ஓலைச்   சுவட்டிலே நிறைய எழுத ஆரம்பிச்சுட்டே. ரொம்ப சந்தோஷம் , பெருமை  தாங்கலை எனக்கு.'' '' நிறைய எழுத மனதுதுடிக்கிறது அப்பா. ஒண்ணை நினைச்சு எழுதறத்துக்குள்ளே அதைக் காட்டிலும்   புதுசா,  அருமையா, வேறே ஒண்ணு மனசுக்குள்ளே ஒடறதாலே முதல்லே நானே அதைப்பாடிப் பார்த்து அனுபவிச்சுட்டு  எழுதறேன். ''

'ஏன் சீக்கிரம் எழுந்துட்டே?  ன்னு கேட்டேளே. வாசலைப் போய்பாருங்கோ, பெருக்கி, சாணம் தெளிச்சு, மெழுகி,பூவரசு , செம்பருத்தி  செருகி பெரிய கோலம் போட்டிருக்கேன், '' ரங்கா வா'' என்றும் எழுதிஇருக்கேன்''

''மார்கழி மாசம். பிரம்ம முகூர்த்தத்திலே சகலதெய்வங்களும் பூமிக்கு வரா அம்மா. நீ,   வா  ன்னு எழுதி கூப்பிடறத்துக்கு முன்னாலே உன்குரல் கேட்டு  அவனே  ஓடி வருவான், அந்த ரங்கன், எனக்கு தெரியாதா? நீ இன்னிக்கு  என்ன புதுசா பாடினே?''
''அப்பா, மார்கழிலே  விடியறதுக்குமுன்னே எழுந்து நீராடி விரத மிருந்து முப்பது நாளும் அந்த நாராயணனையே நினைத்துநோன்பு நோற்றால் அந்த ரங்கன் வேண்டியதைத்  தருவான் என்கிறதாலே எனக்கு அவனேவேண்டுமென்றே இந்த மாதம் பூரா நோன்பு நோக்கறேன். அந்த மாய கிருஷ்ணன் இருந்தஆயர்பாடியிலேயே நான் இருக்கிறதா மனசாலே அங்கே போய் மீதி பெண்களோடு சேர்ந்து கொண்டுஅவர்களில் நானும் ஒருத்தியா அங்கே ''ஆண்டாள்'' ஆயிட்டேன் பா.நான் உடம்பிலே இங்க இருந்தாலும் மனத்திலே கிருஷ்ணன் வீட்டையே சுத்தி சுத்தி வரதுதான் ரொம்ப சந்தோஷமாக இருக்கு அப்பா. ''
''என்ன எழுதினே படியேன் கேக்கறேன். கண்ணு சரியாதெரியலை. ஓலைச்  சுவடு படிக்க தீப  வெளிச்சம் போறலே.''
++++
இது  அதே சமயம்   ஆயர்பாடி கிராமத்தில்,,,ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்னால் :
கோதை ஆயர்பாடி இடைச்  சிறுமி ஆண்டாள் ஆகிவிட்டாள்.மார்கழி மாதம் குளிர். யமுனை உறங்குவது போல் அமைதியாக இருக்கிறது.அதைஎழுப்புகிறாள் ஆண்டாள். முதலில் தூக்கம் கலைந்து எழுந்தவள் தனது குடிலை விட்டுவெளியே வந்தாள். பாடுகிறாள்:
‘’மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். ‘’

வில்லிப்புத்தூரில் உள்ள  கோதை, ஆண்டாளாக ஆயர்பாடியில் தன்னை உருவகப் படுத்திக்கொண்டுபாடிய பாசுரம் கணீரென்று கோதையின் குரலில் திருப்பாவை முதல் பாசுரமாகத் தோன்றியது.அவளை கண்டெடுத்து வளர்த்த வளர்ப்பு தந்தை விஷ்ணு சித்தர் கண்களில் நீர் மாலை.
''அசாத்யம், ஸ்ரீயப்பதே, ரங்கநாதா, எல்லாம் உன் கிருபை. என்ன அற்புதம் இந்தக் குழந்தையின்பக்தி ஸ்ரத்தை. என் தாயே, கோதை, நீ லக்ஷ்மி அம்சம் என்பதில் சந்தேகமே இல்லை. என்னதிவ்யமாக எழுதியிருக்கிறாய். இவ்வளவு காலம் நான் எழுதினதுக் கெல்லாம் சிகரமாகஉன் எழுத்தில் பக்தி பாவம் மிளிர்கிறதே. எல்லாம் அந்த ரங்கன் செயல்.  நாளைக்கு நீ எழுதப்போவதையும் ஆவலாககேட்க காத்திருக்கேன். ''ஓவ்வொரு நாளும்பாசுரம் எழுதப்போறேன் பா. நீங்க எனக்கு அறிமுகப்படுத்திய அந்த நாராயணனின் அவதாரமான கிருஷ்ணன் இருந்தஆயர்பாடியிலே இடைச்சிறுமிகள் ஒன்றாககூடி யமுனையில் நீராடி நல்ல கணவன் கிடைக்ககாத்யாயனி விரதம் இருந்த நோன்பு பற்றியும் எழுதப்போகிறேன்.

வில்லிப்புத்தூரில் விஷ்ணு சித்தரையும் கோதையையும்விட்டுவிட்டு நாம் இப்போது ஆயர்பாடிக்குச் சென்று அங்கு சில பெண்கள்விடியற்காலையில் கூடியிருப்பதை காண்கிறோம். சில சிறுமிகள் ஆண்டாள் என்ற சிறுமியோடுகூடவே சென்று மற்றும் சிலரை எழுப்பச் செல்கிறார்கள்.

இதோ ஆண்டாள் குரல் கணீரென்று கேட்கிறதே :
''மார்கழி வந்து விட்டதே.   நீங்கள்  சீக்கிரம்  எழுந்திருக்க வேண்டாமா. நாம்எல்லாருமாக யமுனைக்கு செல்வோம். அங்கு புனித நீராடி ஸ்ரீ கிருஷ்ணனைப் பணிவோம்.அவன் ஒருவன் போதுமே நாம் கேட்டதெல்லாம் அருள.தோழியர்களே எழுந்திருங்கள்.''
''என்னடி ஆண்டாள் , இந்த மார்கழி குளிரில் அதிகாலையில் வந்து எங்களைஎழுப்பி வா போய்  சில் லுன்னு  குளிப்போம், பாடுவோம் என்கிறாய். எதற்கு ஏன் என்கிற விஷயம் சொன்னால் தானே புரியும் ? '' --- அந்த ஆயர்பாடி சிறுமியர் அவளிடம் கேட்க ஆண்டாள் சொல்கிறாள்:
''நான் சொல்கிறேன். கேளுங்கள்.  ஆனால்   ஒரு நாளைக்கு ஒரு விஷயம்தான் சொல்வேன். அப்போது தான் உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியும். ஒரே அடியாகஒரு மாதத்துக்கான  விஷயத்தை ஒரே நாளில் சொல்லித் திணிக்கக் கூடாது. இன்னிக்கு மார்கழி 1ம் நாள். இந்த மார்கழி என்கிற மாசம் ரொம்ப உயர்வானது..எனக்கென்னமோ  இந்த மாதம் தான்  எல்லா மாதத்தையும்   விட   ரொம்ப பிடிக்கும். வெயில்கிடையாது. தண்ணீருக்கு பஞ்சமில்லை. இந்த ஊர் என் உயிர். ஏன் என்றால் இந்தஆயர்பாடியில் தான் கிருஷ்ணன், அந்த ஆணழகன், கருநீல வண்ணன், செவ்விதழ், அழகிய கன்னம், செந்தாமரை போன்றகண்கள் எல்லாம் உடையவன் இருக்கும் நம்முடைய இந்த ஆயர்பாடி, ஒரு ஸ்வர்க பூமி என்பதில் என்ன சந்தேகமடிஉங்களுக்கு!!.        அவன் சாதாரணமானவனா யிருந்தால் இந்த பேச்சுக்கே இடமிலையே! எதிர்த்தவர்களின்உயிர் குடிக்கும் வீரன் அந்த நந்த கோபனின் பிள்ளையைத் தவிர வேறு யார்? அவன் தாய் பற்றி சொல்ல வில்லையே, இந்த சிங்கக்குட்டியைப் பெற கொடுத்து வைத்தவள் அவள்.யசோதை அவள் பேர். போதுமா?
''நேரமாச்சே, சீக்கிரம் வாருங்கள் தோழியரே, குளிர்ந்த யமுனையில் குளித்து அவனைப் பாடுவோம்,
''ஆண்டாள் கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன் அப்படி என்னஇதுக்கு முக்கியம்?''
''எதற்காக இந்த மார்கழி மாதம் நோன்பு என்று தெரியணும்என்றால் , இந்த மாசம்தான்அந்த கிருஷ்ணனுக்கு, அதாவதுநாராயணனுக்கு பிடித்த மாசம். மாதங்களில் அவன் மார்கழியாகவே இருக்கிறானாம் .நாமெல்லோரும்,   ஏன்,   இந்த உலகில் எவருமே


, ஸ்வர்கமடைய நாம் செய்யும் இந்த பாவை நோன்பு தவிரகுறுக்கு வழி வேறே இல்லை அல்லவா?''
பெண்கள் ஸ்நானம் முடித்து கூட்டமாக சேர்ந்து நாராயணனைநெக்குருகி, மனமுருகிப்பாடி , வெள்ளை உள்ளத்தோடு வேண்டி அன்றைய நோன்பைத்தொடங்கினர். பிறகு தத்தம் வீடு திரும்பினர்.
மார்கழி மாதம் நம்அனைவராலும் ஸ்ரீ வில்லிப்புத்தூர்சென்று ஆண்டாளை தரிசனம் செய்ய இயலுமா? சென்னை வாசிகளே!  இப்போதுள்ள  நிலையில்  அவரவர்  வீட்டிலேயே  அதுவே   க்ஷேத்ரமாக  எண்ணி  அவனை நினையுங்கள் . ஒவ்வொரு  வீட்டிலும்    மார்கழி முழுதும் கோலாகலமாக விமரிசையாக ஆண்டாள் பெருமாள்  திருமஞ்சனம்   மனதளவிலாவது நடக்கட்டும்.  பிரபந்த பாசுரம் எதிரொலிக்க, விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் திவ்யதரிசனம்கிடைக்கிறதே,  நம்மால்  போக முடியாத நிலையில்  இருக்கவே இருக்கிறது டிவி, யு ட்யூப்,  வாட்ஸாப்ப்  அதிலே  கொள்ளை கொள்ளையாக  அரங்கன், பார்த்தசாரதி, ரெங்கமன்னர்கள் வருவார்களே.  இருந்த இடத்திலே இருந்து கொண்டே அவர்களை வரவேற்று நமஸ்கரிப்போம்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...