Saturday, December 4, 2021

ADHI SANKARA NIRVANA DHASAKAM

 ஆதி சங்கரர் -     நங்கநல்லூர் J K  SIVAN

நிர்வாண தசகம் - பதிவு  4 

ஆதி சங்கரரின் இந்த அற்புத  10 ஸ்லோகங்கள் எப்படி  எப்போது இயற்றப்பட்டன என்று ரெண்டு காரணங்கள் சொல்கிறார்கள்.  முதலாவது,  நர்மதை நதிக்கரையில் ஆரண்யத்தில்  தனது குரு  ஸ்ரீ கோவிந்தபாதரை முதன்முறையாக சந்தித்தபோது  அவர்  ''  நீ யாரப்பா?'' என்று கேட்கிறார். அதற்கு பதிலாக சங்கரர் பாடியது என்று ஒரு கதை.  மற்றொன்று,  ஆதிசங்கரர் இந்த பூவுலகை விட்டு நீங்குமுன் அவரது சிஷ்யர்கள் ''குருவே எங்களுக்கு நீங்கள் உபதேசம் செய்யுங்கள்'' என்று வேண்டியபோது பாடியவை  என்பது. எதுவாக இருப்பினும் நாம் பாக்கியசாலிகள் என்பதில் சந்தேகமே இல்லை. நிர்வாண தசகத்தை  தச  ஸ்லோகி என்றும்  சொல்கிறார்கள். 

ஆதி சங்கரரின் அத்வைத சாரத்தின் ஒரு துளியாக இந்த நிர்வாண தசகம் அமைந்திருக்கிறது. இது வரை  6 ஸ்லோகங்களை  ரசித்தோம்.  இந்த முடிவான பதிவில் மற்ற மீதி நான்கு ஸ்லோகங்களை அறிந்து நிறைவு செய்வோம். 

न शास्ता न शास्त्रं न शिष्यो न शिक्षा न च त्वं न चाहं न चायं प्रपञ्चः ।
स्वरूपावबोधाद्विकल्पासहिष्णुस्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम्  ॥7॥

Na sastha na sasthram na sishyo na siksha, Na cha thwam, na cha aham na cha ayam prapancha,
Swaroopavabadhadhi vikalapa sahishnu, Thadekovasishta Shiva kevaloham. 7

ந சாஸ்தா ந சாஸ்த்ரம் ந சிஷ்யோ ந சிக்ஷா ந ச த்வம் ந சாஹம் ந சாயம் ப்ரபஞ்ச: |
ஸ்வரூபாவபோதாத்விகல்பாஸஹிஷ்ணுஸ்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் |7||

சாஸ்திரங்களின்  தோற்றம்  ஆரம்பம் நான் இல்லை. அவற்றை  உள்ளடக்கிய   ஞான  நூல்கள், புஸ்தகங்களும்  நான்  இல்லை.  நான் யாருக்கும் சிஷ்யனுமில்லை, எவருக்கும் குருவும் இல்லை.  நீயுமில்லை, நானுமில்லை, உலகத்தில் எதுவுமில்லை, உலகமே நான் இல்லை.ஏனென்றால் இதெல்லாம்  ஆத்மா இல்லையே,.  நான் ஒரு சாதா சிவன், சதாசிவன்,  ஆத்மன். நான் தூக்கத்திலும் கனவிலும், அதைக்  கடந்தும்,  இருப்பவன். எல்லாமே இல்லாமல் போனாலும் அப்போதும் நிலையாக இருப்பவன்.

न चोर्ध्वे न चाधो न चान्तर्न बाह्यं न मध्यं न तिर्यङ् न पूर्वा परादिक् ।
वियद्व्यापकत्वादखण्डैकरूपस्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम्  ॥8॥

Na chordhwam na chadho na cha andhar na bahyam, Na madhyam na thiryang na poorva paraddik,
Viyad vyapakathwath Akandaika roopa, Thadekovasishta Shiva kevaloham. 8

ந சோர்த்வே ந சாதோ ந சாந்தர்ந பாஹ்யம் ந மத்யம் ந திர்யங் ந பூர்வா பராதிக் |
வியத்வ்யாபகத்வாதகண்டைகரூபஸ்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் 8 |

''இன்னொன்று சொல்லட்டுமா? நான் மேலே மட்டும் இல்லை, கீழேயும் கிடையாது. உள்ளேயும் காணமுடியாது, வெளியேயும் தேட முடியாது, அப்படியென்றால் எங்காவது நடுவே கிடைப்பேனா என்றால் அதுவும் இல்லை. குறுக்கே, எதிர்புறம், பக்கவாட்டில்,,  ஹுஹும்,  இல்லவே இல்லை. கிழக்கில் இருப்பாவானோ ? அல்லது ஒருவேளை மேற்கே எங்காவதோ ?  அங்கும்  நான் கிடையாது.  காற்றில் கலந்த உயிர் சத்து போல் எங்கும் கலந்து வியாபித்து இருக்கிறதே ''ஈதர் ''(ether) அதுபோல தான் நான். எங்கும் காணப்படுபவன். 
நான் சிவன், ஆத்மன். நான் தூக்கத்திலும் கனவிலும், அதைக்  கடந்தும்,  இருப்பவன். எல்லாமே இல்லாமல் போனாலும் அப்போதும் நிலையாக இருப்பவன்.

अपि व्यापकत्वादितत्त्वात्प्रयोगात्स्वतः सिद्धभावादनन्याश्रयत्वात् ।
जगत्तुच्छमेतत्समस्तं तदन्यस्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम्  ॥9॥

Api vyapakathwadhi Thathwa prayogath,Swatha sidha bhavananya asrayathwath,
Jagat thuchamethath samastham thadanya,Thadekovasishta Shiva kevaloham. 9

அபி வ்யாபகத்வாதிதத்த்வாத்ப்ரயோகாத்ஸ்வத: ஸித்தபாவாதநந்யாச்ரயத்வாத் |
ஜகத்துச்சமேதத்ஸமஸ்தம் ததந்யஸ்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||9

எங்கும் எதிலும் இருந்தும், ஒரே நோக்கமாக, ஆத்ம லட்சியமாக இருப்பவன். எனக்கு யாரும் அவசியமில்லை, எவரையும் எதிர்பார்த்து நான் இல்லை. எனக்கு நானே போதும். எதுவும் தேவை அற்றவன். உலகம் எனக்கு லக்ஷியம் இல்லை. நான் இல்லையே அது.

நான் சிவன், சதா சிவன் , ஆத்மன், நான் தூக்கத்திலும் அதை கடந்தும் இருப்பவன். எல்லாமே இல்லாமல் போனாலும் அப்போதும் நிலையாக இருப்பவன்.

न चैकं तदन्यद्द्वितीयं कुतः स्यान्न चाकेवलत्वं न वा केवलत्वम् ।
न शून्यं न चाशून्यमद्वैतकत्वात्कथं सर्ववेदान्तसिद्धं ब्रवीमि ॥10

Na chaikam thadanyath dweetheeyam kutha syath, Na chaa kevalathwam na vaa kevalathwam,
Na soonyam na chaa soonyamadvaidhakathwath, Kadam sarva vedhatham sidham braveemi 10

ந சைகம் ததந்யத்த்விதீயம் குத: ஸ்யாந்ந சாகேவலத்வம் ந வா கேவலத்வம் |
ந சூந்யம் ந சாசூந்யமத்வைதகத்வாத்கதம் ஸர்வவேதாந்தஸித்தம் ப்ரவீமி ||10

நான் உருவமே இல்லாதவன். என்னை ஏதோ ஒன்றாக நினைக்க முடியாது. ஆகவே நான் இரண்டாக பிரித்தும் பார்க்க முடியாதவன். நான் இப்படித்தான் என்று குறிப்பிட்டு கூற முடியாதவன், இல்லை அவன் அப்படியில்லை என்று வேறு மாதிரியாகவும் என்னை பார்க்கமுடியாது. நான் ஒன்றுமே இல்லாத சூன்யம் அல்ல, அதில்லாமல் வேறு என்று அறுதியிட்டு எவரும் விவரிக்க முடியாதவன். இரண்டற்ற ஒன்றின் சாரம்,  சத்ய ஸ்வரூபம் என்பார்கள். யார் எப்படியெல்லாம் என்னை வித விதமான தத்துவங்களால் கோட்பாடுகளால் எடுத்துச் சொன்னாலும் அதிலும் நான் அகப்பட மாட்டேனே .விவரித்தாலும் அது நான் நிச்சயம் இல்லை.
நான் சிவன், சதா சிவன் , ஆத்மன், நான் தூக்கத்திலும் அதை கடந்தும் இருப்பவன். எல்லாமே இல்லாமல் போனாலும் அப்போதும் நிலையாக இருப்பவன்.

நாம் கேக்காமலேயே, நமக்கு இந்த நிர்வாண தசகம் பத்து ஸ்லோகங்கள் விலைமதிக்க முடியாத பொக்கிஷம் கிடைத்திருக்கிறதே. அவருக்கு நாம் நன்றி சொல்வது இவற்றை கொஞ்சம், கொஞ்சமாக, அல்லது கொஞ்சமாவது பின் பற்றுவதே.

சங்கரர் மேலே சொன்னதெல்லாம் ப்ரஹதாரண்யக உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நிர்வாண தசகத்தை தவிர்த்து நிர்வாண ஷட்கம் என்று ஆறு வைராக்கியத்தைப் பற்றி ஆதி சங்கரரே எழுதி இருக்கிறார். அதையும்  அடுத்த  பதிவிலிருந்து  படித்துவிடுவோம். லட்டு மாதிரி கொடுக்கிறார். வேண்டாம் என்று சொல்வார்களா?  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...