Friday, December 6, 2019

GEETHANJALI


கீதாஞ்சலி     J.K SIVAN 
ரபீந்திரநாத் தாகூர் 

                                        24.   நீண்ட பாதையில்.......

சில நாட்களாக  தாகூர் பக்கமே  போகவில்லை. அதில் அவருக்கு வருத்தமோ கோபமோ தெரியாது என்றாலும் எனக்கு குற்ற உணர்ச்சி.  ஒவ்வொரு சமயம் அவரை அணுகவேண்டும் என்று மனம் துடிக்கும்போதெல்லாம் வேறு எவரோ  என்னை கிளப்பிக்கொண்டு போய்விடுகிறார்.

இன்று கதவை தட்டி உள்ளே நுழைந்து  தாகூரை பார்த்தாயிற்று.   வாடா வா,  மறந்தே போனாயோ?  என்று கேட்டு சூடாக கல்கத்தா டீ , அல்ல  அம்ருதம் ஒன்று தந்தார்.   புதிதல்ல தொடர்வது.   24வது   அற்புதமான அவரது கீதாஞ்சலியை பருகுவோம். 


24  f the day is done, if birds sing no more, if the wind has flagged tired, then draw the veil of darkness thick upon me, even as thou hast wrapt the earth with the coverlet of sleep and tenderly closed the petals of the drooping lotus at dusk.

From the traveller, whose sack of provisions is empty before the voyage is ended, whose garment is torn and dustladen, whose strength is exhausted, remove shame and poverty, and renew his life like a flower under the cover of thy kindly night.

ஒவ்வொருநாளும்  காலை கிழிக்கும் சீட்டுக்கு  ஏன்  நாட்காட்டி  என்று வெகு பொருத்தமான பெயர்.  அதை விட சிறந்த  பெயர் யோசிக்க முடியவில்லை.  அந்த ஆசாமி கிடைத்தால்  டிசம்பர் மாச ரேஷன் சர்க்கரை முழுதும் அவருக்கு அபிஷேகம் செய்யலாம்.


நாட் காட்டி. தெளிவாக சொல்கிறது.   ''அடே  உன்னிடம் இருக்கும்  மீதி நாட்களை இனி எண்ணமுடியும், அது தான் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறதே. இருப்பதை அருமையாக உபயோகி. இந்தா இன்று உனக்கு ஒரு முழு  புது நாள்''....  என்று  புதிய தேதியை காட்டுகிறது... 

 இன்று ஒரு சீட்டு கிழித்தது  ஒரு  நாள்  குறைந்து போனது புரிகிறது. அதற்குள் இந்த புது நாள் ஓடிவிட்டதே.  அந்தி நெருங்கி முடிந்து இருள் எல்லாவற்றையும் மெதுவாக நிதானமாக சொகுசாக விழுங்குகிறது. காலதேவா,  இனிமேல் இன்று  பறவைகள் பறக்காது. பாடாது. கூடு தேடி ஒதுங்குகிறது.   காற்று வீசி வீசி ஓய்ந்து போய்விட்டது.   உனது  நீண்ட  அகல பெரிய  இருள் போர்வை தான்  உறக்கம் என்ற பெயரில் எல்லாவற்றையும்  கண்ணை மூட வைக்கிறாயே  அது போலவே  நானும்  இருளில் மூழ்குகிறேன். 

 கிருஷ்ணா, நீ தூக்கத்தால், உறக்கத்தால்  ஓய்வில்லாது அசையும் உலகத்தை கொஞ்சம் கொஞ்சமாக  கண் மூட  வைப்பாய் அல்லவா?  அந்தியில் தாமரை மலர்கள்  இருள் கண்டது,  தமது  மடல், இதழ்  மூடுகிறது. 

காலதேவா,  ஒரு காட்சி கண் முன்  என்னை காட்டட்டும்.  முதிர்ந்த பிரயாணி. லொங்கு லொங்கு என்று  வெகு தூரம் நீண்ட பாதையில்  நடந்து விட்டேன்.. முதுகில் சுமந்த  உணவுப் பொருள் மூட்டை  உருவத்தில்  என்னைப்போல் இளைத்து, கொஞ்சம் கொஞ்சமாக காலி கோணிப்பையாகவே  ஆகிவிட்டது.   ஓஹோ  அது முடியும்போது என் பிரயாணமும் முடிவுக்கு வருகிறதோ?  உடுத்திய ஆடையை பார்த்தாயா, எத்தனை பழையது.  கல்லில்,  முள்ளில், காற்றில்,வெயிலில், மழையில்,  அதன் வனப்பு  இழந்து,   கிழிந்து, கசங்கி, மண் புழுதிபடலமாக கரை படிந்து தொங்குகிறது.   இனி என்னை மூடிக் கொள்ளும்  சக்தி கூட  குறைந்து விட்டது.  மானமாவது மண்ணாங்கட்டியாவது.  மறைக்க சக்தியோ  தகுதியோ கூட  இல்லை.  இதிலிருந்து மீள முடியாதோ? இதெல்லாம் விலகுமோ? 

ஆஹா, கிருஷ்ணா, உன் அளவற்ற கருணையால், 
 புத்துணர்ச்சி, புது வாழ்வு கொடுக்கமுடியும்.  அதோ தந்த தாமரை மொட்டு மீண்டும் காலை புத்தம் புதிதாக கண்ணைப்பறிக்க மலருமே , அதற்கு செய்யும்  தயவை எனக்கும் காட்டு.  இனி நானும்  வாழ்வில் உன் கருணையால் அமைதியாக  அந்த இரவில் கூம்பும் தாமரை இதழ் விரித்து  புத்தொளி பெற்று  காலை  ஒரு புது மலராவது போல்,  நானும்   ஒரு புதிய பக்கம் திருப்புகிறேனே.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...