Sunday, December 15, 2019

GEETHANJALI



கீதாஞ்சலி    J K  SIVAN  
ரவீந்திரநாத் தாகூர் 

                                       
            25.  ஓய்வு தா 

25.   In the night of weariness let me give myself up to

sleep without struggle, resting my trust upon thee.
Let me not force my flagging spirit into 
a poor preparation for thy worship.
It is thou who drawest the veil of night upon
 
the tired eyes of the day to renew its sight 
in a fresher gladness of awakening.

பொன்னிற போர்வை போர்த்திய மாலை மங்கி எங்கும் மலைப்பாம்பு இரை கவ்வுவதைப்போல இருள் சர்வத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டு வருகிறது. காரிருள் ஆக இன்னும் சற்று நேரம் ஆகலாம். நானும் களைத்து விட்டேன் கிருஷ்ணா. 

கொஞ்சம் எதிர்ப்பு சொல்லாமல் ஏசாமல் தூக்கத்தின் வசம் என்னை தந்துவிடுகிறேன். என் நம்பிக்கை, ஊக்கம், நோக்கம் எல்லாம் உன் மீது தான் எப்போதும் வைத்திருப்பேனே .அலைபாயும் என் மனத்தை திடப்படுத்திக் கொள்கிறேன். உன்னை வழிபட துதிக்க என் முழு உணர்வையும்  முடிந்தவரை செலுத்துகிறேன்.

 பகல் நிறைய உழைக்கிறது. எப்போது சூரியன் தலையை தூக்குகிறானோ கிழக்கில் அப்போது முதல் ஓயாமல் உழைக்கும் பகலுக்கு ஒய்வு தர, மீண்டும் புத்துணர்ச்சி பெற, மறுபடியும் தனது ஓய்தல் இல்லாத கடமையை செய்ய அதற்கு சக்தி வேண்டாமா? அதற்காகத்தானே கிருஷ்ணா, நீ மெதுவாக இருளை அதன் மீது மெல்லிதாக போர்த்தி உறங்கப்பண்ணுகிறாய்!  

உனக்கு தெரியாதது என்ன இருக்கிறது  கிருஷ்ணா. யாருக்கு எப்போது எதை, எந்தவிதத்தில் எவ்வளவு, எப்படி செய்யவேண்டும் .... ஆஹா  நீ ஒருவனே அதை உணர்ந்தவன். 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...