Tuesday, December 24, 2019

GEETHANJALI




கீதாஞ்சலி  J K SIVAN
ரவீந்திரநாத் தாகூர்          

                   20  மலரும் மனமும் 

20. On the day when the lotus bloomed, alas,                             
my mind was straying, and I knew it not.
My basket was empty and the flower remained unheeded.
Only now and again a sadness fell upon me, and I started up from my dream and felta sweet trace of a strange fragrance in the south wind.That vague sweetness made my heart ache with longing  and it seemed to me that is was the eager breath of the summer seeking for its completion.I knew not then that it was so near, that it was mine, and that this perfect sweetness had blossomed in the depth of my own heart.


கவிஞனின் எண்ணங்கள் அவனிடம் இருப்பதில்லை. எங்கோ வானில், விண்ணில் அளவின்றி  பறந்துகொண்டிருக்கும்.அதனால் தான் அன்று காலை என் கண்ணைப் பறித்தது  என் வீட்டின் அருகே உள்ள ஒரு குளத்தில் தாமரை.மொட்டவிழ்ந்த புத்தம் புது தாமரை மலர்.  சூரியனைத் தேடும் அதன் அழகில் என் மனம் எங்கோ பறந்து திரிந்து கொண்டிருந் ததை அறியேன்.

சிலையாக நின்ற என் கையில் காலி பூக்குடலை.  சுற்றிலும் எங்கும் வண்ணவண்ணமாக மயக்கும்   சிரிக்கும் மலர்கள்  ''என்னை ஏன் பார்க்கவில்லை  பறிக்கவில்லை''  என்று கூப்பிட்டதும்,  கேட்டதும், என் காதில் விழுந்தால்  தானே!
விட்டு விட்டு  சிக்கலாக என்னென்னவோ  சோகத்திரைகள் என் மனதில்.  நிறைவேறாத ஆசைகள், நடக்காத கனவுகள், அது தந்த துக்கம்.  

எண்ணச்  சிக்கலில் என் கனவின்  ஆரம்ப நுனியை தேடுகிறேன். நெஞ்சை, உடலை, இதயத்தை,  மிருதுவாக மயிலிறகால்  தடவிக் கொடுப்பது போல் இளங்குளிர் தென்றல் காற்று இனிமையான மலர்களின் நறுமணத்தைச் சுமந்து என் மீது வீசுகிறது. அடேடே  என் இதயத்தின் வலியை அது அதிகப்படுத்தி விட்டதே. என் இதயம் இனம் புரியாத எதையோ இழந்து தேடுகிறதே. 
வேனில் காலம் விடைபெறுகிறதோ? நழுவுகிறதோ?
அதன் பிரிவு மூச்சு தான் என் பாதிப்போ?

இதுவரையில் அருகிலேயே இருந்ததை நான் உணரவில்லையா, என்னோடு இணைந்திருந்ததை கவனிக்காமல் புறக்கணித்துவிட்டேனோ? 

''நீ என்னை மறந்தாலும் நான் உன்னை விடுவதில்லை என்று என் இதயத்தில் ஒரு பாகத்தில் குடிகொண்ட  இனிய நறுமணமிக்க எண்ணமோ? 

ஓஹோ என் இதய ஆழத்தில் எங்கோ அது மலர்ந்து மொட்டவிழ்கிறதோ? 

அது தான் வெளியே குளத்திலா ?



என் இதயத் தாமரை கண்ணுக்கு குளத்து தாமரையா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...