Sunday, December 8, 2019

VISHNU SAHASRANAMAM

 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்   J K SIVAN 


                           ஆயிர நாமன் :  (249-264)

249. விஸிஷ்டா:  ஜாக்ராத், ஸ்வப்னா, சுஷுப்தி  ஆகிய  மனிதனின் மூன்று நிலையை தாண்டிய எதுவோ அது. பஞ்ச கோசத்திற்கு அப்பால் உள்ளது. அறியவொண்ணாதது.

250. சிஷ்டக்ரித்:  பரிபாலிப்பவன். துஷ்டர்களை அழித்து  சிஷ்டர்களை பாதுகாப்பவன்.

251. சுசி:  பரிசுத்தன். மாயையால் பாதிக்கப் படாதவன். துரீயன். நித்ய பரிசுத்தன் .
252. ஸித்தார்த்த :  தர்ம, அர்த்த, காம, மோக்ஷம்  இந்த  நான்கும் மனிதனை  அடையாளம் காட்டும்  செயல்கள்   எண்ணங்கள்  . இவை அனைத்தும்  அருள்பவன்,  சங்கல்பிப்பவன்.,

253. ஸித்த சங்கல்ப:  நினைத்த மாத்திரம் பெறுபவன். உபநிஷத்துக்கள் மகா விஷ்ணுவை  ''சத்ய சங்கல்பவான்'' என்று கூறுகின்றன.

254 ஸித்திதா:  கர்மா பல தாதா. தக்க கர்ம பலனை அளிப்பவன்.

255. ஸித்தி  சாதனா:  தன்னை நாடுபவனுக்கு  நாடும், தேடும்  சக்தியை அளிப்பவன். ''ஸித்தி'' என்றால் அடைதல்.

28.வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர: |
வர்த்தநோ வர்த்தமாநஸ்ச விவிக்தஸ் ஸுருதி ஸாகர: |

256. வ்ருஷாஹி:   தர்மவான் . சகல காரியங்களுக்கும் பலனை அளிப்பவன்.   கர்ம பலனின்  முடிவை அளிப்பவன்.

257. வ்ரிஷபா:  நாராயணன் அவரவர் விரும்பும் பலனை அளிப்பவர். தர்மம், நியாயம், நேர்மை, நீதி, சாந்தி, தனம் ,தான்யம் எது கேட்கிறோமோ அது.

258. விஷ்ணு:   சர்வம் விஷ்ணு மயம்  எங்கும்  எதிலும் நிறைந்தவர். ''அர்ஜுனா,  நான் தானடா  இந்த பிரபஞ்சமே. அதால் தான் எனக்கு விஷ்ணு என்று பெயர்' - கிருஷ்ணன் கீதையில்.

259. வ்ரிஷபர்வா:    விஷ்ணு தான்  நம்மை மோக்ஷபாதையில் ஏற்றிச் செல்லும் ஏணிப்படி. பர்வம் என்றால் மலை என்றும் பொருள். எனவே  மலையுச்சி,  மோக்ஷத்துக்கு கொண்டு சேர்ப்பவர்.

260. வ்ருஷோதரா:   மழையாக பொழிவது.  வர்ஷிப்பது. உதரம்: வயிறு, நாபி:  அங்கு தான் பிரபஞ்சமே உதித்தது. பிரளய கால வெள்ளத்தில் மீண்டும் ஜீவராசி உண்டானது விஷ்ணுவின் நாபியில். ஏன்  உலகில்  நாம்  தாயின் வயிற்றிலிருந்து தானே உதித்தவர்கள்!!ll  எல்லா உயிரினமும் அப்படித்தானே.

261. வர்தனா:  பராமரிப்பவர். தாய் போல் காப்பவர்.

262. வர்த்தமானா : ஸ்ரீ மஹா விஷ்ணு சங்கல்ப மாத்திரத்தில் லோக சம்ரக்ஷணத்துக்காக   எந்த உருவையும் எந்த அளவிலுமாக  தன்னை வியாபித்துக்  கொள்ளும் சக்தி உடையவர். எங்கும் எதுவாகவும் எப்போதும் நிறைந்தவர்.

263. விவிக்தா : தனித்திருப்பவர்.   எதனோடும் ஒட்டாதவர். இருட்டில் கயிறு பாம்பாக தோன்றினாலும் கயிறு தான் உண்மை என்று காட்டுகிற மாயாஸ்வரூபியாக  தோன்றினாலும் உண்மையில் ஸ்வரூபமே அற்றவர் ''அர்ஜுனா  அவைகள் எல்லாமே என்னில்  இருந்தாலும் நான் அவற்றில் இல்லையடா'' - கிருஷ்ணன் கீதையில்.

264. ஸ்ருதி  சாகரா : சகல நதிகளும் சங்கமிக்கும் சாகரம், கடல். விஷ்ணு.  எந்த சாஸ்த்ர ஞானமும் கடைசியில் இது ஒன்றே  என காட்டப்படும்  விஷ்ணு. -

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...