Saturday, December 28, 2019

THIRUK KOLOOR PEN PILLAI


திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள்  J K SIVAN   
       

  33    ''இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே''

ப்ரம்ம ராக்ஷசன் என்பது ஒரு பிசாசு என்று ஓரளவுக்கு தெரியும்.   அவனைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவில்லை. 

தவறு செய்த பிராமணன் தான்  ப்ரம்ம ராக்ஷஸன் எனும்  ஒரு வித பிறவியாகிறான்.  தேவதைகள், மிருகங்கள்,  பக்ஷிகள், பல விதமாக  இருப்பது போல்  பிசாசுகளிலும் பலவிதம் உண்டு.   சாப விமோச்சனம் கிடைக்கும் வரை ப்ரம்ம ராக்ஷஸன் மரங்களில் வசித்து, வேத  ப்ராம்மணர்களை,  உத்தமர்களை  தின்பவனாக வாழ்பவன். முக்கியமாக  அரசமரத்தில் உறைபவன் என்று  கேள்வி ஞானம். நேரில் பார்த்தது இல்லை, பார்க்க விருப்பமும் இல்லை.

மஹா பெரியவா  அவனைப் பற்றி  சொல்லியிருப்பது :

 ''யார் ப்ரம்ம ராக்ஷசனாக மாறுவார்கள் என்றால்  அதற்கு ஒரு ஸ்லோகம் உண்டு:  “பிசாசோ குஹ்யக: ஸித்தோ பூதோ (அ)மீ தேவயோநய:” என்று ‘அமர’த்தில் முடிந்திருக்கிறது.) வேதாத்யயனம் நன்றாகப் பண்ணியும், துன்மார்க்கத்தில் போய் மற்ற ப்ராம்மணர்களுடைய ஸொத்து, ஸ்த்ரீ முதலானவற்றை அபஹரித்து அல்பாயுசில் செத்துப் போனவர்கள் அந்த வேத ஞாபகத்தோடேயே பிசாசு மாதிரி இருப்பதுதான் ப்ரம்மரக்ஷஸ்.  தான் அறிந்த விததையை மற்றவர்க்கு கற்று தராதவன் இம்மாதிரியான  பிரம்மராக்ஷசனாகிறான்.  அவனுக்கு  ஆஹாரம் தினந்தோறும் வேதம் தெரிந்த ஒரு ப்ராம்மணனைச் சாப்பிடுவதுதான்!  இல்லாவிட்டால் தெய்வ பக்தி உள்ளவர்கள் வாக்கு தவறினால் அவர்களை சாப்பிடுவது.

ப்ரம்ம ராக்ஷஸன் மாறுவேஷத்தில் போய் வேத அத்யயனம் செய்தவர்களிடம் நயமாகப் பேசி நீள இழுக்கடித்துக் கொண்டு தனியிடத்துக்குப் போய் வேத சாஸ்த்ர ஸம்பந்தமாகவே அநேகம் கேள்விகள் கேட்கும். அவர்கள் பதில் தெரியாமல் முழிக்கும்போது அடித்து பக்ஷித்துவிடும். ‘ப்ரம்ம ராக்ஷஸம் அடிச்சுப் போட்டுடுத்து’ என்று க்ராமாந்தரங்களில் சொல்வதுண்டு.''

 இப்படி பார்த்தால்  இந்த காலத்தில் ப்ரம்ம ராக்ஷஸன்  கிடையாது  போல் தோன்றுகிறது.   இருந்தாலும்  அநேகமாக  பட்டினியால்  சாகவேண்டியவன் தானோ? தினமும் இப்படி வேதம் அறிந்த பிராமணன்  ஒருவன் சாப்பிட  எங்கிருந்து கிடைப்பான்.   இருக்கும் ஒரு சிலரையும்  தின்று விட்டால் அப்புறம்?

வராக அவதாரத்தில் நாராயணன்  பூமி தேவியை பிரளயத்தின் பிடியில் இருந்து மீட்டு தன் மடியில் இருத்தி,  உபதேசித்தது தான் கைசிக மஹாத்ம்யம்.  இதை சொல்வது வராஹ  புராணம்.

திருக்குறுங்குடியில்  என்று ஒரு  பாணர் குல  வைஷ்ணவ  பக்தர்.  அவரது ஊர்  முனி கிராமம்  என்பார்கள். .   திருக்குறுங்குடி நம்பி எனும்  பெருமாளுக்கு  இந்த பாணர்  தன்னை புகழ்ந்து படுவது ரொம்ப பிடித்து  அவரை  ''நம் பாடுவான்'' (நம்மை நன்றாக பாடுபவன்)  என்று புகழ்ந்தார் என்றால் எந்த அளவுக்கு அந்த பாணரின்  பக்திரஸ  பாடல்கள் அமைந்திருக்க வேண்டும்!    
ஏகாதசி  உபவாசம் இருந்து  திருக்குறுங்குடி மலை ஏறி நம்பியை பாடி துவாதசி பொழுது புலர்ந்ததும் வீடு  திரும்புவார்.  

ஒரு  ஏகாதசி அன்று காலை நம் பாடுவான்  இவ்வாறு குறுங்குடிக்கு நடந்துகொண்டிருந்த  போது   வழியில் பசியோடு ஆகாரம் தேடிக்கொண்டிருந்த   ஒரு  ப்ரம்ம ராக்ஷஸன் அவரை  நிறுத்தி ''இன்று எனக்கு நீ தான்  உணவு '' என்றான்.

''ப்ரம்ம ராக்ஷஸா, ரொம்ப  சந்தோஷம், உனக்கு  நான்  ருசியாகவே இருப்பேன்.   ஆனால் உன் உணவு கொஞ்சம் லேட்டாக தான்  உனக்கு கிடைக்கும்.   நான்  இந்த மலை மேல் ஏறி நம்பியை இன்றெல்லாம் பாடி , நாளை  காலை திரும்புவேன்  அப்போது நீ  என்னை சாப்பிடு''   என்கிறார் பாணர்.

'' ஆஹா,  உன்னை நான்  இப்போது விட்டால் நீ  தப்பி விடுவாய்  ஆகவே  காத்திருக்க முடியாது''  '

'இல்லை  ப்ரம்ம ராக்ஷஸா,   திருக்குறுங்குடி நம்பியின் பக்தன்  ஒரு நாளும்  பொய்  பேசமாட்டேன் . இது சத்தியம்''  என்கிறார் பாணர்.   சரி என்று  ப்ரம்ம ராக்ஷஸன் ஒருவாறு அரைமனதோடு ஒப்புக்கொள்கிறான். தப்பிப் போகாமல் வழி மேல் விழி வைத்து பாணர் வரும் வரை காத்திருக்கிறான். 

நம்பாடுவான் கவலையில்லாமல்  ஆனந்தமாய்  நம்பியை நாடி போனார். பாடினார். இரவெல்லாம் ஆனந்தமாக நேரம்  சென்றது.  காலை  துவாதசி தீர்த்த பிரசாதம் உண்டு திரும்பினார். திரும்பி வரும் வழியில் ஒரு கிழ பிராமணன் சந்திக்கிறான்.  அவனை  வணங்குகிறார்  பாணர்.

''சுவாமி நீங்கள் எங்கே இவ்வளவு  அவசரமாக  வேகமாக  செல்கிறீர்கள்?''  என்று கேட்கிறார் கிழவர் .

''பெரியவரே,  நான்  ஒருவன் பசியாக இருக்கிறான் அவனுக்கு உணவாக போகிறேன் . நேற்றிலிருந்து எனக்காக ஒரு ப்ரம்ம ராக்ஷஸன் காத்திருக்கிறான்.  சொன்ன வார்த்தை மீறக்கூடாது அல்லவா?''

''இந்த வழியாக போனால் தானே  அவன் உம்மை  பிடித்துக் கொள்வான். வேறு வழி இருக்கிறது. காட்டுகிறேன். நீர் தப்பி போகலாம்''

''இல்லை  சுவாமி எனக்கு தப்ப எண்ணமே இல்லை.  இன்று என் கடைசி நாள்  உம்மை சந்தித்ததில் மகிழ்ச்சி''

''ஆஹா  உமது  பாட்டைப் போல உமது பேச்சும்  ஆனந்தமாக இருக்கிறது '' என்று மனதில் நினைத்துக் கொண்டார்  கிழ பிராமணனாக வந்த திருக்குறுங்குடி நம்பி. 

நம் பாடுவான்  தன்னை நோக்கி வருவதை  தூரத்திலேயே  பார்த்துவிட்டான்  பிரம்ம ராக்ஷசன், 

'' ஐயா,  நீங்கள் என்னை இப்போது சாப்பிடலாம். ஒருநாள் உங்களை பட்டினி போட்டுவிட்டேன். ஆனால் நல்லது தான். ஏகாதசி அல்லவா.'' என்றார் நம் பாடுவான்.

''சுவாமி நீங்கள் உண்மையான  விஷ்ணு பக்தர்.  உம்மை பார்த்தவுடனே எனக்கு  பசி தாகம் எல்லாம் போய்விட்டது.   நீர்  குறுங்குடி நம்பியை  பாடின பலனை எனக்கு அளித்து  எனக்கு சாப விமோசனம் அருள வேண்டும்.'' என்று கெஞ்சினான் பிரம்மராக்ஷசன். 

''  அப்பா ப்ரம்ம  ராக்ஷஸா, நம்பியை பாடியதால் தான்  பலன் என்று இல்லை,  பாடுவதே பூர்வ ஜென்ம பலன் ''

'' சுவாமி  நீங்கள்  நேற்று ஏகாதசி அன்று நம்பியை   நிறைய பாடி இருப்பீர்கள்,  கடைசி பாடல் எந்த பண்ணில் (அப்போது ராகம் என்பது பண் ) பாடினீர்கள்?''

''கைசிகம்''

''அந்த கைசிக பண்ணை  பாடிய   பலனையாவது எனக்கு அருளி   நான்  சாப விமோசனம்  பெற வேண்டும்''

''குறுங்குடி நம்பி பகவானே, இந்த ப்ரம்ம ராக்ஷஸன் தவறை மன்னித்து அவன்  சாப விமோசனம் பெற அருளவேண்டும்'' என்று  வேண்டுகிறார் நம் பாடுவான்.  

''அட,  ப்ரம்ம ராக்ஷஸனை  காணோமே,   அங்கே   சோம சர்மா என்ற ஒரு அந்தணன் நின்றான். வணங்கி னான். ''நான் யாகத்தை முறைப்படி செய்யாத குற்றத்தால் ப்ரம்ம ராக்ஷஸனானேன், உங்களால் சாப விமோசனம்  பெற்றேன்'' என்று சொல்லி அவன்  மறைந்தான்.

திருக்குறுங்குடி  க்ஷேத்ரத்துக்கு  ஒரு  தனி  விசேஷம் உண்டு.   ஸ்ரீ ராமானுஜருக்கு திருக்குறுங்குடி நம்பி  தானே  அவரது  சிஷ்யராக மாறி சேவை செய்த ஸ்தலம்.

திருக்கோளூர் பெண்மணிக்கு தான்  எல்லாமே தெரிந்திருக்கிறதே . திருக்குறுங்குடி  ப்ரம்ம ராக்ஷஸனின் பசி தாகம் களைப்பு எல்லாம்  நம் பாடுவான் போக்கியது தெரியாதா?    

'' ஐயா, ஸ்ரீ ராமானுஜரே , நான் என்ன  “நம் பாடுவான் போல் பிறருக்கு உதவி புரிந்தவளா?  எப்படி நான் இந்த  திருக்கோளூர் க்ஷேத்திரத்தில் வசிக்க  இயலும்?  என்று கேட்கிறாள்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...