Tuesday, December 24, 2019

PESUM DEIVAM



பேசும் தெய்வம் 3ம் பாகம்     J K SIVAN 

                                 'கிறிஸ்த்மஸ்  / கிறிஸ்து ''   

''இந்தாங்கோ  கிருஸ்துமஸ்  கேக்''  சாப்பிடுங்கோ. உங்களுக்காக  கொண்டுவந்தேன்.    ரீட்டா  என்ற பெண் சொன்னது. 
நான் கேக் சாப்பிடுவதில்லை.அந்த குழந்தை ஆசையாக கொடுத்தாதது வேண்டாம் என்று சொல்ல முடியாது. கூடாது. 
''அப்படி ஸ்டூல் மேலே வைச்சுடும்மா''
உங்களுக்கு  கேக் பிடிக்காதா தாத்தா?
''யார்  சொன்னது?   ரொம்ப பிடிக்குமே. 
கிறிஸ்துமஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா  தாத்தா. 
நிறைய தெரியும்மா.  இப்போது என் கையில் இருக்கிறது கூட  அவரைப்பற்றி சொல்லும் ஒரு புஸ்தகம் தான்.  அதோ அந்த படத்திலிருக்கிற தாத்தா சொன்னது.''
''ஓஹோ  இவரை எனக்கு தெரியுமே எங்க வீட்டிலே சொல்வார்களே.  காஞ்சி பெரியவா என்று . எங்க அப்பா அம்மாவுக்கு கூட ரொம்ப மரியாதை அவர் மேலே.  அவர்  என்ன தாத்தா சொல்லியிருக்கிறார்?''
''உனக்கு புரியும்படியா கொஞ்சமா சொல்றேன்.''
'' கிறிஸ்துவுக்கு பெயர்  ஜீஸஸ் க்ரைஸ்ட்’.   ஜெர்மானிக் , ட்யூடானிக்,  Teutonic    ஜெர்மன் பாஷையில். ஆங்கிலம்  டச்சு, ஸ்காண்டினேவியன் பாஷைகளிலும் அதே பெயர் தான்.  ஆரம்பத்தில்  ஹீப்ரு மொழியில் அவர் பெயர் தான் அப்படி பின்னால்  மாறி இருக்கிறது.  ஸம்ஸ்க்ருத ‘ச்ராவணீ’ தமிழ் ‘ஆவணி’யாக உருமாறின மாதிரி 

கிறிஸ்து  ஐரோப்பாவை சேர்ந்தவர் இல்லை.   நமது  ஆசியா கண்டத்துக்காரர்  தான்.  அவர் தாயமொழி அரமீயன். ஹீப்ருக்களின் பாஷை.  அதில் அவர்  ஒரிஜினல் பெயர் ‘யீஷுவ  (Yeshua).   அது  ஐரோப்பிய பாஷைகளில் ‘ஜோஷுவா’ ’ஜீஸஸ்’ என்று திரிந்து விட்டது. .

‘ய’கர வரிசை ‘ஜ’கர வரிசையாவது எல்லா இடத்திலேயும் உண்டு. வேதத்திலேயே மற்ற சாகைகளில் (கிளைப் பிரிவுகளில்) ‘ய’ என்று வருவது  சுக்லயஜுர் வேதத்தின் மாத்யந்தின சாகையில் ‘ஜ’  ஆகிவிடும். யமுனாவை ஜமுனா  என்பது போல். யந்த்ர மந்திர்   ஜந்தர்மந்தர்  ஆன மாதிரி.   தமிழிலே  ‘ஜ’வை ‘ய’ ஆக்குகிறோம்.  ஸமஸ்க்ரித  ‘யாமம்’ தமிழில்  ''ஜாமம்’ .  அது போல் தான் , ‘யீஷுவ’வின் ‘யீ’தான் ‘ஜீஸ’ஸில் ‘ஜீ’யாகியிருக்கிறது. அந்த ‘ஜீ’யை  மீண்டும் ‘ய’காரப்படுத்தி, வித்யாஸமாக, ‘யேசு’ என்கிறோம்.

ஆரம்பத்தில் இருந்த   ‘யீஷுஅ’ நம்முடைய ‘ஈச’ .   சிவ நாமா.எனலாமா?    சொல்லலாம்  ஆனால் யாராவது அபிப்ராய பேதமாகச் சொல்வார்கள் .  பேதம்  வேண்டாம். ‘ஜீஸஸ் க்ரைஸ்ட்’டில் ‘ஜீஸ’ஸை ‘ஈச’னாக  அபேதமாகவும்  சொல்லலாம். அபிப்ராயங்கள் வேறுபடும்.

‘க்ரைஸ்ட்’  ஐரோப்பிய பாஷை.  நாம் பட்டாபிஷேகம் என்று விசேஷ அபிஷேகம்,  மங்கள  ஸ்நானம் என்று தலைக்குத் தைலம் வைத்து பண்ணுகிறது போல  எல்லா தேசங்களிலும் மத சாஸ்த்ரபூர்வமாக  கொஞ்சம்  தைலம் தேய்ப்பதுண்டு. ஸ்நானம் இல்லாமல் வெறும் தைலம்  மட்டும். அது தான்  ‘அனாயிண்ட்’  செய்வது.. ஈச்வரனே அந்த மாதிரிச் சில பேரை லோகோத்தாரணம் பண்ணுவதற்காக ‘அனாயிண்ட்’ பண்ணி, அதாவது பட்டாபிஷேகம் பண்ணி, ‘மெஸையா’ (Messiah) என்று அனுப்புவதாகச் சொல்வார்கள். ஹீப்ரு ‘மேஷியா’ என்ற பெயர் இங்கிலீஷில் ‘மெஸையா’ ஆனது.  கிரீக்   (Greek)பாஷையில் இது ‘க்ரைஸ் டோஸ்’ . அதன் தொடர்ச்சியாக இங்கிலீஷில் ‘க்ரைஸ்ட்’ என்ற பெயர்வந்தது.

‘ஜீஸ’ஸுக்கு ‘ஈச’ ஸம்பந்தம் காட்டின மாதிரி இந்த ‘க்ரைஸ்டு’க்கு   கிருஷ்ண ஸம்பந்தம் காட்டினாலென்ன ?

கிருஷ்ணனை நாம் கிஷ்டன், கிட்டன், கிருட்டிணன்  என்கிறோம். அதுமாதிரி  ‘க்ரிஸ்டன்’ என்று சொன்னால் என்ன.  முடிவிலே சொல்லும் ‘அன்’ விகுதி தமிழில்தான் உண்டு. நாம் ‘ஈச்வரன்’ என்பது வடக்கத்திக்காரர்களுக்கு ‘ஈச்வர்’தான்; நம் சங்கரன், ராமன் எல்லாமே சங்கர், ராம் என்றிப்படித் தான்! வர வர இங்கேயும் அதுவே ஃபாஷனாகி வருகிறது… அது இருக்கட்டும்…. ‘அன்’ விகுதி போய்விட்டால் க்ரிஸ்டன் ஆன க்ருஷ்ணன் என்ன ஆவான்? ‘க்ரிஸ்ட்’ என்று தானே ஆவான்? ‘சிவ’ ஸம்பந்தமானது ‘சைவம்’, ‘விஷ்ணு’ ஸம்பந்தமானது ‘வைஷ்ணவம்’ என்று ஆரம்ப இகாரம் ஐகாரமாகிற மாதிரி ‘க்ரிஸ்ட்’ ஸம்பந்தமானது ‘க்ரைஸ்ட்’ என்றே ஆகும்! அப்படித்தானே?  ஆகக்கூடி, ‘ஜீஸஸ் க்ரைஸ்ட்’ = ‘ஈச க்ருஷ்ணன்’.
(இதை சொல்லிவிட்டு  பரமாச்சார்யர்  
சிறிது நேரம் தாமும் சிரித்து உடனிருந்தோரையும் சிரிக்க வைத்து விட்டு தொடர்கிறார்: ) 

''சிவ-விஷ்ணு அபேதம் காட்டுகிற மாஸத்திலே  திருப்பாவை  திருவெம்பாவை  பாடும் இந்த  மார்கழியிலேயே மத்தியில்  வரும்  கிறிஸ்துமஸ் பண்டிகையின் காரண புருஷர் தம்முடைய பெயரிலேயே ஈச்வரன் என்று சொல்லப்படும் சிவன், விஷ்ணுவின் பூர்ணாவதாரமான க்ருஷ்ணன் ஆகிய இரண்டு பேரின் பேர்களையும் பேதம் பார்க்காமல் ஒன்று சேர்த்து வைத்துக் கொண்ட மாதிரிக் காட்டுகிறார் என்று ஸமய ஸமரஸத்தை மேலும் கொஞ்சம் நீட்டிப் பார்க்கலாமோ என்று தோன்றிற்று. தோன்றினதைச் சொன்னேன்''.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...