Saturday, March 12, 2022

SUR DAS

 


ஸூர்தாஸ் - நங்கநல்லூர் J K SIVAN

35. தேவகிக்கு ஒரு சேதி ...

ஸூர் தாஸர் பாடல்கள் அற்புதமாக இயற்றப் பட்டவை. அவன் அருளால் தானாகவே நீரூற்றாக பொங்கி வழிகிற பக்தியில் அந்தந்த நேரத்தில் மனதில் உதித்து வார்த்தைகளாக வெளியே வழிந்தவை. நமது பாக்யம் யாரோ அதை செவிமடுத்து, எழுத்து வடிவில் சேமித்து நமக்கு சிலது கிடைத்திருக்கிறது. அவர் மனதில் தோன்றி யவை பாடலாக வெளிவந்தது அவருக்கு தெரிந்த பிரிஜ் பாஷா என்கிற மொழியில். ஒவ்வொருவரும் அவரவருக்குத் தெரிந்த மொழியில் தானே பேசவோ பாடவோ அழவோ முடியும்.

''தேவகியிடம் போய்ச் சொல்லுங்கள். ''அம்மா, காலம் ஓடும் வேகம் ஒப்பிடமுடியாதது. வருஷங்களை யுகமாக்கிப் பின்னே தள்ளி விடும். கிருஷ்ணன் பிருந்தாவனத்தை விட்டு சென்றது நேற்றுபோல் இருந்தாலும் எத்தனை வருஷங்கள் ஆகி விட்டன. எல்லாமே மாறிவிட்டது காலத்தின் கோலத்தில். உத்தவர் மெதுவாக பிருந்தாவனத்தில் நுழைகிறார். யசோதை நந்தகோபன் வீடு அப்படியே மாறாமல் இருக்கிறது. வாசலில் யசோதை நிற்கிறாள்.

''யார் இது? என் கிருஷ்ணனா இப்படி மாறி விட்டான்?'' உத்தவர் உருவத்தில் க்ரிஷ்ணனைப் போல் இருப்பார். கிருஷ்ணனுக்கு அவர் நெருங்கின உறவும்கூட. யார் இவர்?

''வாருங்கள் சுவாமி... யசோதா அவரை உள்ளே அழைக்கிறாள். உபசரிக்கிறாள்.
''நான் துவாரகையிலிருந்து வருகிறேன். என் பெயர் உத்தவன்.. என்குரு, என் தோழன், என் சகோதரன், கிருஷ்ணன் வாழ்ந்த இந்த இடத்தைக் காண இங்கே வந்தேன். கிருஷ்ணனும் ''உத்தவா, நீ ஒருமுறை கோகுலம் பிருந்தாவனம் எல்லாம் சென்று வா'' என்று என்னை அனுப்பினான்.''
கிருஷ்ணன் எனும் பெயர் யசோதையின் காதில் இன்பத் தேனாகப் பாய்ந்தது. அப்படியே உத்தவர் காலடியில் அமர்ந்து அவரையே நோக்கினாள் . ஆனந்தத்தில் வார்த்தைகள் வரவில்லை. எப்படியோ ஒருவாறு தன்னைச்சமாளித்துக் கொண்டு பேசுகிறாள்:
''என் கண்மணி, என் செல்லம், என் கிருஷ்ணன் நன்றாக இருக்கிறானா? அவனை எப்போதும் என் கண் இமையில் வைத்து மூடிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லுங்கள். அவன் எப்போதும் இங்கே தான் என்னோடு இருப்பதாகவே நான் நினைக் கிறேன். அதை விட முக்கியமாக நீங்கள் மதுரா வுக்கு திரும்பும் போது அவனைப்பெற்ற அந்த புனிதவதி தேவகியிடம் இதைச் சொல்லுங்கள்:
''தேவகி அம்மா, இந்த யசோதை உங்கள் வேலைக்காரி, உங்கள் மகன் கிருஷ்ணனின் பணியாள். அவன் மீது சொல்ல முடியாத அன்பும் பாசமும் நிறைய கொண்டவள். அவன் அழகில் கட்டுண்டவள். அப்பப்பா, அவன் விஷமங்கள், பிடிவாதம் எல்லாவற்றையும் பற்றி தான் உங்களுக்கு த் தெரியுமே.


விடிந்ததும் வெண்ணை தேடுவான். குளிப்பாட்ட லாம் என்று அவனுக்காக எண்ணெய், நறுமண சிகைக்காய் வாசனை பொடிகள், சுத்தமான வெந்நீர் வஸ்திரங்கள் எடுத்து வைப்பதைப் பார்த்தவுடன் சிட்டாய் ப் பறந்து ஓடி விடுவான். எப்படியோ ஒருவாறாக அவனைத் தாஜா பண்ணி, வெண்ணை தின் பண்டங்கள் கொடுத்து பிடித்து வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் . என் உடம்பில் பாதி தெம்பு காணாமல் போய் விடும். இதெல்லாம் உங்களிடம் சொல்லியிருக்க மாட்டான். சங்கோஜப்பட்டு மறைத்திருப்பான் என்பதற்காகச் சொல்கிறேன்.'' ஸூர்தாசர் கற்பனையே அலாதி. கீழே வ்ரஜ்பாஷாவில் அவர் ஸ்வயமாக மனதில் தோன்றிய மேற் கண்ட விஷயத்தைப் பாடியது எவரோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து என் கையில் சிக்கியது. ரொம்ப பிடித்தது.

सँदेसौ देवकी सौं कहियौ । हौं तो धाइ तिहारे सुत की, दया करत ही रहियौ ॥ जदपि टेव तुम जानतिं उनकी, तऊ मोहिं कहि आवै ।। प्रात होत मेरे लाल लड़ैतैं, माखन रोटी भावै ॥ तेल उबटनौ अरु तातो जल, ताहि देखि भजि जाते । जोइ-जोइ माँगत सोइ-सोइ देती, क्रम-क्रम करि कै न्हाते ॥ सूर पथिक सुन मोहिं रैनि दिन, बढ्यौ रहत उर सोच । मेरौ अलक लडै़तो मोहन, ह्वैहै करत सँकोच ॥ "

Sandeso devaki so kahiyo Hau to dhai tihare sut ki maya karat nit rahiyo Yadapi tev tum jaanat unki tau mohi kahi aave Prat hot mero laal ladaiti maakhan roti bhaave Tel ubatano aru tato jal tahi dekhi bhagi jaave Joi joi mangat soi soi deti kram kram kari nahave Sur pathik suni mohe rain din bado rahat dar soch Mero alak ladaito mohan hwaihe karat sankoch

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...