Monday, March 28, 2022

 வைணவ விண்ணொளி - நங்கநல்லூர் J K SIVAN

கூரத்தாழ்வான்.

''அருமையான குருவும் அபிமான சிஷ்யனும் ''-1

காஞ்சிபுரத்திற்கு அருகே ஒரு அமைதியான உலகப் பிரசித்தி பெற்ற கிராமம் கூரம். இன்றும் கூட வயலும் தோப்புமாக கண்ணுக்கு ரம்யமாக இருக்கிறது. பல முறை சென்றிருக்கிறேன். கூரம் என்றாலே அந்த பெயரை உலகறியச் செய்தவர் கூரத்தாழ்வான். ராமாநுஜரைப் பற்றி பேசும்போது கூரத்தாழ்வானைப் பற்றிசொல்லாமல் விட முடியாது.
ஸ்ரீ ராமானுஜ - கூரத்தாழ்வான் குரு- சிஷ்ய பாவம் என்னை மிக மிக கவர்ந்த ஒரு வெகு கால
விஷயம். இவர்களைப் பற்றி அறிய ஆவலோடு நான் தேடி எடுத்த சில சம்பவங்களை என் சிற்றறிவுக்கு எட்டிய வரை எனக்கு தெரிந்த தமிழில் எழுதியுள்ளேன். (கொஞ்சம் பெரிய கட்டுரை. பொறுமை தேவை) .
கூரேசனை (கூரம் என்கிற ஊர்க்காரர்-- பின்னர் கூரத்தாழ்வான்) பற்றி எவ்வளவோ பேர் எத்தனையோ சொன்னாலும் எழுதினாலும் பாடினாலும் அலுக்காத காரணம் அவருடைய குரு பக்தி. ரொம்ப வசதியான குடும்பம். நிலம் நீச்சு என்று ஏராளமான சொத்து. அருமையான ஒரு மனைவி (ஆண்டாளம்மா) அமைந்தது தான் விசேஷம். தம்பதியர் இருவருமே தான தர்மத்தில் ஒருவரை யொருவர் மிஞ்சினர். கஞ்சி வரதனிடம் அளவற்ற பக்தி. அவர் காஞ்சிபுரத்திற்கு அடிக்கடி போன போதெல்லாம் அங்கு புதிதாக விசிஷ்டாத்வைதம் என்ற ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தந்தை பிரசாரம் பண்ணிக் கொண்டிருந்த ராமனுஜரிடம் அமோக பக்தி கூரேசருக்கு ஏற்பாடு காந்தம் போல் கவரப்பட்டார். அவரது எண்ணற்ற சீடர்களில் தானும் ஒருவராக இணைந்துகொண்டார். ராமானு ஜரிடம் வேத சாஸ்த்ரங்களை கற்று மீமாம்ச சூத்ரங்களையும் தெரிந்துகொண்டார். இருவருக் குள்ளும் பிரிக்க முடியாத நேசம், நட்பு , பாசம், சகலமும் உண்டானது. காஞ்சியே வாசமானார் கூரேசர். ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவர்களை ஆதரிக்க, ஊக்குவிக்க, ராமானுஜர் போக நேரிட்டது. .அங்கு அப்போது சைவர்களின் ஆக்ரமிப்பு, கெடுபிடி, கொஞ்சம் அதிகம். சூரியனைத் தாமரை பிரிந்தது. கூரேசன் கூரத்திலேயே ஐக்கியம். ஆனால் காஞ்சி வரதனும் பெருந்தேவி தாயாரும் வேறு திட்டம் வைத்திருந்தார்களே! கூரேசன் தனவந்தர் மட்டுமல்ல தர்மவானும் கூட. எண்ணற்ற தானங்களை தினந்தோறும் புரிந்த தம்பதிகள் அவரும் மனைவியும். நாள்தோறும் கூரேசர் ஆண்டாள் ஜோடியின் தான தர்மங்கள் இரவு வரையும் தொடரும். ஒருநாள் இரவு அன்னதானம் முடிந்து அவர்களின் மாளிகை கதவு தாழ் போடப்பட்டது. கோட்டைக் கதவு போல அது சாத்தப்பட்ட சப்தம் நிசப்தமான இரவில் காஞ்சியிலும் கேட்டது. வரதராஜ பெருமாளை பெருந்தேவி தாயார் கேட்டாள் .
" நாதா! இது என்ன சப்தம்?. எங்கிருந்து ? '' அருகே எங்கிருந்தோ வருகிறது. விசாரித்து விஷயம் உனக்கு கேட்டு சொல்கிறேன்”- நடித்தான் நாராயணன். வரதராஜ பெருமாள் ஆலயத்தின் பிரதான பட்டாசாரியாரான திருக்கச்சி நம்பிகளை அழைத்து பெருமாள் கேட்டார். பெருமாளோடு பேசுகிற அதிசய பாக்யவான் நம்பிகள்.
"சுவாமி, நானும் கேட்டேன். அது கூரத்தில் அன்றாட அன்னதானம் முடிந்து இரவில் கூரேசர் வீட்டு வாசல் கதவு மூடப்பட்டு தாழ்ப்பாள் போடும் சப்தம்".
பட நாடக சூத்ரதாரி ஆயிற்றே பெருமாள்!. தெரியாதது போல் சொன்னார்:
"அடே அப்படியா, கூரேசனும் ஆண்டாள் அம்மாளும் அவ்வளவு தர்மிஷ்டர்களா? எனக்கு அவர்களை பார்க்க வேண்டும் அழைத்து வா "
திருக்கச்சி நம்பி பெருமாள் கட்டளையாய் சிரமேற்கொண்டு அம்பு போல் விரைந்து கூரேசரிடம் பெருமாளின் விருப்பத்தை தெரிவிக்க கூரேசர் திடுக்கிட்டு நடுங்கினார்.
"என்ன அக்ரமம் செய்துவிட்டேன் மஹா பாவி, நான்? அன்னதானம் செய்வதை ஊருக்கெல்லாம் பிரபல்யம் செய்வது போல் கதவு தாழ்ப்பாள் சத்தம் பெரிதாக போட்டு தம்பட்டம் அடித்துவிட்டேனே. பெருமாளுக்கும் தாயாருக்கும் நான் போட்ட சத்தத்தால் அமைதி இழக்க செய்து மகா பாவத்தை தேடிக் கொண்டு விட்டேனே?!!”
ஆடிப்போய் விட்டார் கூரேசர். இனி நான் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.
என் சொத்து சுதந்திரம் பூரா அப்படியே எல்லாவற்றையும் துறந்து ஸ்ரீரங்கத்துக்கு ஓடி என் குரு நாதர் ராமானுஜரை சரண் அடைவது ஒன்றே பிராயச்சித்தம். ‘’அடியே ஆண்டாளு, கட்டின துணியோட உடனே கிளம்பு. ஸ்ரீரங்கம் போவோம்” . அவ்வாறே இருவரும் ஸ்ரீரங்கம் நோக்கி நடந்தனர். வழியே சில இடம் காட்டு பாதை. கள்வர் பயம் ஆண்டாளை கலக்கியதைக் கண்டு அதிசயித்தார் கூரேசன்.
"என்ன பயம் ஆண்டாள் உனக்கு? நம்மிடம் என்ன இருக்கிறது. உன்னிடம் எதாவது பொருள் உள்ளதா, சொல்?
கூரேசரிடம் உண்மையை உடைத்தாள் ஆண்டாள் அம்மாள்.
''வழியில் உங்களுக்கு எதாவது தாக சாந்திக்காவது உதவுமே என்று நினைத்து இந்த சிறிய தங்க பாத்திரத்தை கொண்டு வந்தேன்''
புடவை முடிச்சிலிருந்து அந்த சிறிய பாத்திரத்தை நீட்டினாள் ஆண்டாள் அம்மாள்.
“அட பேதைப் பெண்ணே!, எல்லாவற்றையும் துறந்து என்று நான் உன்னிடம் சொன்னபோது அதில் இந்த பாத்திரமும் சேர்ந்தது தான்” . அந்த பாத்திரத்தை வாங்கி வீசிதூர காட்டில் எறிந்தார். "அப்பாடா!! இனி உனக்கு பயம் தேவை இல்லையே, எது காரணமோ அதை வீசி எறிந்தாயிற்றே.”

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...