Saturday, March 19, 2022

VAINAVA VINNOLI

 

 

வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர்  J K  SIVAN 
ஸ்வாமி தேசிகன் 

''என்னைப்பார்  தேசிகா...''

பயங்களிலேயே  அதிக  பலம் வாய்ந்தது  மரண பயம்.  நாம் எவரும் அதிலிருந்து தப்பிக்க முடியாதவர்கள்.

அவன்  எவ்வளவு  பலம் வாய்ந்தவனாக வேண்டுமானாலும் இருக்க்கட்டும்.  டாக்டர்  ''சார் உங்களுக்கு கோரோனா  பாசிட்டிவ்..நுரையீரல் ரொம்ப பாதிக்கப்பட்டுவிட்டதே.  ஏன்  முன்பே கவனிக்கவில்லையா ?''  என்ற  ஒரு வார்த்தை சொல்லட்டும். அவ்வளவு தான்.. தொப் என்று கால் வலுவிழந்து கீழே உட்காருவான்.. வால்வு  காற்றுப்போன பலூன் ஆகிவிடுவான்.  

உங்கள் மேல்  வலுவான  புகார் இருக்கிறது. எந்நேரமும்  வருமான வரி ஏய்ப்பு அதிகாரிகள்  ரெய்டு வரலாம்... இது ஒன்றே போதும்....  பயம் எங்கிருந்து இவ்வளவு வந்து உடல் நடுங்குகிறது?

உச்சிமீது வானிடிந்து வாழுகின்ற போதிலும்  அச்சமில்லை. அச்சமில்லை  எல்லாம் வெறும் ஏட்டில் படிப்பதும், பள்ளிக்கூடத்தில் பாடுவதும் தான்...  பயம்  போகவேண்டும். போகட்டும். நம்மை விட்டு அறவே போகட்டும்.   இனிமேல் எனக்கு எந்த பயமும் இருக்கக் கூடாது. தைர்யமாக எதையும் சந்திக்கவேண்டும். உயிரே போனாலும் போகட்டுமே. எதற்கு இந்த பயம்?தலை நரைக்க ஆரம்பித்து விட்டதே. எந்த சக்தியும் எதிர்க்கட்டும். பயமே வேண்டாம். 

ஸ்வாமி தேசிகன் பயமில்லாமை ஸ்தோத்ரம் எழுதும்போது வயது 60க்கு மேல். இருபதுக்கு மேலான அபீதித்வம் ஸ்லோகம் இனிமேல் படிக்கப்போகிறோம்.  பீதி என்றால் பயம். அபீதி என்றால் பயமின்மை.  அற்புதமான  ஸ்லோகங்கள். 

அதை எழுதும் முன்பு  எப்படி  மரணத்தை அசாத்தியமாக  பக்தியோடு  சுவாமி தேசிகன் வரவேற்றார். எவ்வளவு அருமையான முடிவு அவருடையது என்று ஒரு காட்சி அளிக்கிறேன். எழுதும்போதே  கைகளை கம்பியூட்டரிலிருந்து எடுத்து இரு கரம் கூப்பி  ''மஹா ப்ரபு என்று  தேசிகனை மனமார  நமஸ்கரித்தேன்...

++++

மைசூரை சேர்ந்த கோபண்ணா உடையார் 1360 முஸ்லிம்களை துரத்தி அடித்து விரட்டினார். ஸ்ரீரங்கம் மீண்டும் வைணவர்கள் வசம் வந்தது. நம்பெருமாளை ஜாக்கிரதையாக  திருப்பதி யிலிருந்து ஸ்ரீரங்கம் கொண்டு வந்தாச்சு. அப்புறம் ஒரு ஒன்பது வருஷம் வாழ்ந்த சுவாமி தேசிகன் 1369ல் தனது 101வது வயதில், குமார வரதாச்சார்யர் எனும் மகனின் மடியில் தலை வைத்து, காலை ப்ரம்மதந்த்ர ஸ்வதந்தர ஜீயர் மேல் நீட்டி வைத்துக்கொண்டு படுத்தார். 

அவர் கண்கள் பஞ்சடையவில்லை.  எதிரே  பளபளவென்று ஒளிவிட்டு கண்முன்  வைகுண்டம் அருகில் தெரிந்தது.. திருப்பாற்கடல் ஓவென்று இரைச்சலுடன் கண்ணில் பட்டது. ஆதிசேஷன் மெதுவாக அசைந்து அசைந்து நீரில் மிதந்தான். அவன் மேல் நாராயணன் படுத்திருந்தாலும் அவன் பார்வை சுவாமி தேசிகன்மேல் படுத்தது.

''நீயா என்  நாராயணா? ''
'ஆமாம்  தேசிகா.  நான் நாராயணன் மட்டும் இல்லை உனக்கு பிடித்த  உன்னுள்ளே எப்போதும் இருக்கும் உன் வரதன், காஞ்சிபுரம் வரதராஜன், இன்னுமா என்னை அடையாளம் தெரியவில்லை உனக்கு?''
''அடடா என் செல்வமே,  என்  தேவராஜா, உன்னை எப்படி  தெரியாமல் இருக்கும்?''
''இல்லை  இன்னும் நீ  என்னை  சரியாகப்  பார்க்கவில்லை  தேசிகா. நன்றாக   இப்போது என்னை உற்றுப்பார்''
''ஹா ஹா.. என்  அம்மா ரங்கநாயகி  உன்னை எப்படி  கோட்டை விட்டேன்.... என்ன கண்கொள்ளாக் காட்சி இது,  உன்னருகே நிற்பவன் அல்லவரோ என் ரங்கநாதன்? அடடா  என்ன பாக்யம் செயது இருக்கிறேன் உங்களை என் முன் காண்பதற்கு?''
''வா தேசிகா.. வா   என்னோடு''  என்றான்  தேவராஜன்....
தேசிகனுக்கு  ஸ்வாஸம்  தடை பட ஆரம்பித்தது.....திருவாய் மொழி பாசுரம் ஒலிபோல் ஸ்வாசம்  ஒலித்தது. மெதுவாக தலையை அசைத்து  தனது புத்ரன் வரதனை  தேசிகனின்  கண்கள் அண்ணாந்து பார்த்தன. கண்ணீர் மல்க வரதன்   நூறு வயது நிறைந்த அப்பாவை  பார்த்தார்......
தேசிகனின் உதடுகள் மெல்லிதாக சப்தித்தன.
  
'வரதா, எநக்காக  நீ ஒரு தடவை கடைசி தடவையாக  நான் கேட்க .....திருவாய் மொழி பாசுரங்களை பாடுகிறாயா ?

 துயரம் தொண்டையை அடைக்க  அருமையான அந்த பிள்ளை வரதனின் குரலில் பாசுரம் தேனாக காதில் பாய, கேட்டுக்கொண்டே சுவாமி தேசிகன்மீண்டும் கண்களை மூடினார்.

நாராயணன்  ரங்கநாதனாக, வரதராஜனாக, தேவராஜனாக, அத்தி வரதனாக,.. சட்  சட்  என்று சினிமா காட்சிகள் போல்  தரிசனம் கொடுத்து விட்டு இப்போது...அற்புதமனாக எதிரே  திருப்பதி திருமலை   வேங்கடேசனாக இப்போது சங்கு சங்கரம்  தாங்கி  ஸ்வாமி தேசிகன் கண் முன் நின்றான்...
'' வேங்கடநாதா உனக்கு என் பேர் தானே வைத்தார்கள்....  எங்கே என்னைப்பார்....
....
''என்னைப்பார்  தேசிகா.... நன்றாக கண் விழித்துப் பார்.. இதோ லுன் எதிரே  வெகு நேரமாக உனக்காக  நிற்கிறேனே  என்னைப்  பார்....

''வேங்கடேசா ....பாலாஜி..என்னப்பா..........

''டாண் டாண்'' என்று கண்டாமணி ஒலி வைகுண்டம் பூரா ஒலித்தது. திருப்பதியா வைகுண்டமா ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம்  எங்கே  ஒலிக்கிறது   என்றே தேசிகனுக்கு தெரியவில்லை... சப்தம் மட்டும் காதுக்குள்  இனிமையாக நுழைந்தது..அவருக்குள்ளே  இருந்தே  அல்லவோ  சப்தம் வருகிறது.....
..ஸ்வாமி தேசிகன்  கண்டாமணியாகி விட்டாரா...... வந்த வழியாகவே வா  செல்கிறார்......?
கண்டாமணி அவதாரமான சுவாமி தேசிகன் பரமபதம் அடைந்தார்.

என் மகன்.... என் மகன் ....என்று ரங்கநாயகி தாயார் ஸ்வாமிதேசிகனின் சந்நிதி தமக்கு அருகிலே, எதிரிலேயே, இருக்கவேண்டும் என்று கட்டளையிட இன்றும் நாம் அவரை ஸ்ரீரங்கத்தில் அவள் சந்நிதி எதிரிலேயே தரிசிக்கிறோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...