Sunday, March 7, 2021

PESUM DEIVAM

 

பேசும் தெய்வம் --- நங்கநல்லூர் J K SIVAN
''அதிசயம் ஆனால் உண்மை''
எவ்வளவு சொன்னாலும் அதற்கு மேலும் இன்னும் நிறைய அற்புத சம்பவங்கள் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்த ஒரு பேசும் தெய்வம் தான் காஞ்சி மஹா பெரியவா என்றால் மிகையாகாது. பக்தர்கள் அதனால் தான் அவர் மஹா சமாதி அடைந்து எத்த னையோ வருஷங்கள் ஆன பின்பும் அவரை இன்னமும் தேடுகிறார்கள். காஞ்சிக்கு சென்று அந்த தெய்வம் வாழ்ந்த ஆலயத்தை தரிசித்து அமைதி பெறுகிறார் கள். அவரை நினைக்கி றார்கள்,பேசுகிறார்கள், பாடுகிறார்கள், எழுதுகிறார்கள். சாஸ்வதமான ப்ரத்யக்ஷ தெய்வம் மஹா பெரியவா என்று மனம் நிறைந்து கதறுகிறோமே. அர்த்தம் இல்லா மலா அப்படி செய்கிறோம்? அனுபவமில்லை அறியாமையில் முழுகிய ஜடங்கள் அப்படியே ஏதாவது சொல்லிக்கொண்டு இருக்கட்டும். அவர்களுக்கும் மஹான் கிருபை உண்டு.

நமது பாரத தேசத்தில் மட்டும் தான் இப்படி எத்தனையோ மஹான்கள் இன்னும் பக்தர்கள் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து கஷ்ட நிவர்த்தி, சோக, ரோக, வியாதி நிவாரணம் எல்லாம் பெறுகிறார்கள். சர்வ கார்ய சித்தி நடக்கிறது. எதனால் என்றா மஹா பெரிய வாளைப் பொறுத்தவரை அவரது தவ வலிமை, ஜெப மஹிமை, ஆசிர்வாதம் காருண்ய அனுக்கிரஹம். அவர் எதையும் எவரிடமும் எதிர்பார்க்காதவர். அவரை நினைத்தாலே மனம் நிம்மதி பெறுகிறது.
ஒரு அற்புத சம்பவம் சொல்கிறேன். நான் கேள்விப்பட்டது, படித்தது.
காஞ்சி ஸ்ரீ மடத்தில் மஹா பெரியவா இருந்த போது பக்தர்களின் நெரிசலை சமாளிப்பதே கஷ்டம். தொண்டர்களுக்கு பெரிய சவால் அது எப்போதும். பக்தர்கள் கூட்டம் எப்போதும் அலைமோதிக் கொண்டிருக்கும்.
1960 களில் ஒரு நாள் அவரை தரிசிக்க வந்த பக்தர் கள் நீண்ட வரிசையில் நின்று கொண் டிருந் த போது அதில் 3 -14 வயசு பையனும் இருந்தான்.
நத்தை வேகத்தில் நீண்ட வரிசை மஹா பெரியவாளை நோக்கி நகர்ந்து கடைசியில் பையனும் பெரியவா அருகில் இப்போது நிற்கிறான். தனக்கு முன்னால் இருந்த பக்தர்கள் எல்லோரும் பெரியவாளிடம் ஏதேதோ தங்கள் குறைகளை வேண்டுதல் களை தெரிவிப்பதை பார்த்துக் கொண்டிருந் ததால், அவனுக்கு அவர் எதிரே நின்றபோது எதை சொல்வது, எப்படி சொல்வது, என்ன சொல்வது என்று தடுமாற்றம் . மஹா பெரியவா இதை கவனித்து விட்டார்.
'' டேய் பயலே, என்னடா விஷயம், எதுக்கு என்னை பார்க்க வந்திருக்கே?''
பையன் நமஸ்காரம் பண்ணினான். மெதுவாக தயங்கி தயங்கி தனது மனதில் கொட்டினான்.
'' சாமீ, எனக்கு அப்பா கிடையாது! நான் ஒரு ஹாஸ்டல்ல தான் தங்கி படிக்கிறேன்! என் அம்மாவும் தங்கச்சியும் கூலி வேலை செஞ்சு பொழச்சுக்கலாம்னு பாம்பே போனாங்க. அங்கே வேலை சம்பளம் நிறைய கிடைக்கும்னு தான் போனாங்க. யாரோ ஒரு பெரிய கம்பெனி முதலாளி வீட்டுலே வேலை கிடைச்சுது. ஆனா கொஞ்ச நாளிலே அந்த முதலாளி வீட்டுலே வேலைக்கு போன எங்கம்மா ஒருநாள் மயங்கி விழுந்திட்டாங்க. டாக்டர் கிட்டே தூக்கிக்கிட்டு போனாங்க.. டாக்டர் பார்த்துட்டு எங்கம்மா செத்துட்டாங்க'' என்று சொல்லி திருப்பி அனுப் பிட்டாரு. முதலாளி வீட்டுலே நல்லவங்க. எல்லா செலவும் அவங்களே செஞ்சு அம்மாவுக்கு காரியம் எல்லாம் செஞ்சு கரையேத்திட்டாங்க. இப்போ என் தங்கச்சி மட்டும் தான் பாம்பேல அவங்க வீட்டிலே வேலை செஞ்சுகிட்டு இருக்கா. ஆனா இனிமே என் தங்கச்சியை அங்கே ''வேலைக்கு வேணாம் உங்க அண்ணன் கிட்டே சொல்லி இங்கே வந்து உன்னை உங்க ஊருக்கு கூட்டிட்டுப் போச் சொல்லு'' என்கிறாங்க சாமி.''
பையன் அழுது கொண்டே கண்ணை துடைத்துக்கொண்டு நிறுத்திவிட்டு மேலும் தொடர்ந்தான்.
தெய்வம் அவனையே பார்த்துக் கொண்டி ருந்தது . மௌனம். பையன் தொடர்ந்தான்.
''நான் இங்கே ஹாஸ்டல்லே படிக்கிறதே கஷ்டமா இருக்கு. என் தங்கச்சியை எப்படி சாமி கூப்பிட்டு வச்சிக்கிறது? சாப்பாட்டுக்கு என்ன செய்றது? எனக்கு ஒண்ணுமே தெரியலே சாமி. யாரோ சொன்னாங்க ''பெரியவர் கிட்டே போடா அவர் கிட்டே போய் சொல்லுடா''ன்னு. நேரா இங்கே வந்துட்டேன் சாமி. நீங்க ஏதாவது செய்யணும். நான் என்ன செய்யறதுன்னு தெரியலே, நீங்க தான் சொல்லணும் சாமி ''
'' உனக்கு யாராவது உதவி செய்ய சொந்தக் காரங்கள் இருக்காளா?''
'' எனக்குன்னு யாரும் இல்லீங்களே. நா அப்படி என்ன பாவம் பண்ணேன்னு தெரியலே அனாதையா இருக்கிறேன் சாமி ''
எல்லாம் துறந்த அந்த தெய்வீக சந்நியாசி கண்கள் கூட பனித்தன. கண்களை காஷாய வஸ்த்ரத்தால் ஒத்திக் கொண்டார் .
அவரது தீர்க்கமான பார்வை பையன் மேல் முழுசாக விழுந்தது. சில நிமிஷங்கள் மௌனம். பையன் கண் கொட்டாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
'' இதோ பார்டா, நீ இந்த மடத்துலயே ஒரு வாரம் தங்கிக்கோ! அப்புறம் பாத்துக்கலாம். சரியா?''
அருகில் இருந்த ஒருவரை கூப்பிட்டு அந்த பையன் தங்க இடம், உணவு வசதிகள் பற்றி உத்தரவு இட்டார். பையன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். ஒருவார காலம் ஓடியது.
அன்று வெள்ளிக்கிழமை. மஹா பெரியவா தரிசனம் பெற நாலு உயர் அதிகாரிகள் வழக் கம் போல் தட்டுகளில் வில்வம், , மலர்கள், பழங்கள், கல்கண்டு திராக்ஷை, முந்திரி காணிக்கை யோடும் பக்தியோடும் வந்திருந் தனர். எல்லோரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள். ( NEYVELI LIGNITE CORPRATION) . தட்டுகளை காணிக்கைப் பொருள்களோடு ஸ்ரீ மகாபெரியவா முன் வைத்து விட்டு சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்கள். ஆசி வேண்டினார்கள்.
மஹா பெரியவா அருகே இருந்த ஒருவரைக் கூப்பிட்டு
'' ஒருவாரம் முன்னாலே வந்தானே, அந்த பையனை அழைச்சுண்டு வா இங்கே ''
என்கிறார். சில நிமிஷங்களில் பையன் அவர் முன் நின்றான். என்ன தோன்றியதோ அந்த தெய்வத்துக்கு. எதிரில் கைகட்டி வணங்கிக் கொண்டு நின்ற நான்கு NLC அதிகாரிகளில் யாரோ ஒருவரை மட்டும் நோக்கி ''கிட்டே வா'' என்று அழைத்தார். அவர் பையன் அருகில் வந்து நின்றதும், மஹா பெரியவா
''டேய் போன வாரம் என் கிட்ட சொன்னியே அதை அப்படியே இப்போ இதோ இவர் கிட்டே சொல்லு'' என்று கட்டளையிட்டார். பையன் தன் சோகக்கதையை மீண்டும் சொன்னான். மற்றவர்களோடு சேர்ந்து பெரியவாளும் மெளனமாக கேட்டார். கேட்ட அந்த அதிகாரி ஸ்ரீ மஹா பெரியவாளின் முன்பு கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுதார். பெரியவா காலின் கீழ் எதிரே தடால் என்று விழுந்தார். அங்கு ஒரு ஆச்சர்யம் நடந்தது.
''பெரியவா.. பெரியவா .. நான் என்ன சொல்றது. ஆஹா, என்னே உங்க கருணை. இந்த பையனு டைய தாயார் அவனுடைய சகோதரி ரெண்டு பேருமே பம்பாயில் இருக்கும் என்னோட சொந்த அக்காள் வீட்டில் தான் வேலையா இருந்தானு தெரியறது. என் அக்கா என்கிட்டே போன்லெ ஒரு மாசம் முன்பு சொன்னது ஞாபகம் வருது. யாரோ ஒரு தமிழ் நாட்டு வேலைக்காரம்மா பம்பாய்க்கு அவகிட்டே வேலை செய்ய வந்தா ளாம் . திடீர்னு ஒருநாள் வீட்டிலேயே நெஞ்சு வலி வந்து டாக்டர் கிட்டே போய் காட்டி டிரீட்மெண்ட் எடுக்கறதுக்குள்ளே வழியி லேயே செத்து போய்ட்டா் .. காரியம் எல்லாம் நாங்க தான் பண்ணோம். இப்போ அந்த சின்ன பொண்ணை எப்படி வேலைக்கு வச்சிக்கிறது. எப்படியாவது அதை அவளோட அண்ணன் கிட்ட அனுப்பிட ணும்னு முயற்சி பண்றோம்'' னு சொன்னது இவனைப் பத்தி தான் போல் இருக்கு. ஒரு ஹாஸ்டல் நம்பர் அட்ரஸ் கொடுத்து அங்கே இவனைப் பற்றி விசாரிச்சு அந்த ஹாஸ்டல் மூலம் நான் தான் இவன் கிட்டே ''உன் அம்மா வேலை செஞ்சிட்டு இருக்கும்போதே செத்துட் டாங்க. நீ உடனே பம்பாய் போய் உன் தங்கச்சியை போய் அழைச்சிட்டு வா ''என்கிற செய்தி சொல்ல வைச்சவன். எப்படி அந்த பையன் அதை எடுத்துக்கு வான், எப்படி பாம்பே போவான், அந்த பெண்ணை எப்படி கூட்டிண்டு வருவான் அப்புறம் எப்படி அவர்கள் வாழ்வார்கள் என்று யோசிக்கவே இல்லை ''
அழுகைக்கு நடுவிலே திக்கி திக்கி விவரித் தார் அந்த NLC அதிகாரி.பரமாச்சார்யர் அவரை நோக்கி தலையை ஆட்டினார்.
''ஓ அப்படியா விஷயம். சரி நீ எனக்காக ஒரு உபகாரம் பண்ணுவியோ?''
'' உத்தரவு கொடுங்க பெரியவா, எது வேணா லும் நான் செய்யக் காத்துக்கிட்டுஇருக்கேன்'' என்கிறார் அந்த அதிகாரி.
''அப்படின்னா, நீ தான் இனிமே இந்த பைய னை யும் இவனோட தங்கையையும் ஒன்னோட ரெண்டு குழந்தைகள் மாதிரி நீ பத்திரமா ஜாக்கிரதையா பாதுகாத்து வளர்க்கணும். ரெண்டு பேரையும் நன்னா படிக்கவைக்கணும் ! அந்த பொண்ணை வளர்த்து ஒரு நல்ல எடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும் ! எனக்காக இத நீ பண்ணுவியாடா?''
தெய்வமே மனமுருகி தன்னிடம் இப்படிக் கேட்ட போது அந்த அதிகாரி நிலைமையில் ஒரு கருங்கல்,பாறாங்கல் இருந்தாலும் கூட ஐஸ் மாதிரி உருகி ஓடாதா?
''செய்றேன், செய்றேன், கண்டிப்பா அதை உங்க உத்தரவா கட்டளையா தலைமேல் பொறுப்பாக ஏற்றுக் கொண்டு செய்றேன். இது உங்க கரு ணையால் எனக்கு கிடைச்ச பெரிய பாக்யம்'' '
கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக் கெடுத்து ஓட மஹா பெரியவாளின் திருவடி களில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் அந்த அதிகாரி. பையனை வாரி அணைத்துக் கொண்டார். அவர்களுக்கு பிரசாதம் கொடுத் து அபாய ஹஸ்தம் அளித்து அனுப்பினார் மஹா பெரியவா.
இது எல்லாமே சில நிமிஷங்களில் நடந்தது. நான் தான் நீளமாக எழுதத் தெரியாமல் எழுதி நேரம் எடுத்துக் கொண்டு விட்டேன். அப்புறம் அந்த பையனும் அவன் தங்கையும் NLC அதிகாரி வீட்டில் செல்லக் குழந்தைகளாக பத்திரமாக நன்றாகப் பாதுகாக்கப்பட்டு வளர்ந்தார் கள். நன்றாகப் படிக்க வைத்து அந்த பெண்ணை ஒரு நல்ல இடத்தில் திருமணமும் செய்து கொடுத்துவிட்டார் அந்த அதிகாரி!
நான் மறுபடியும் சொல்கிறேன். எத்தனை தரம் வேண்டுமானாலும் சொல்வேன். மஹா பெரிய வாளின் பூரண அருட் கடாக்ஷத்தைப் பெற்ற வர்கள் எண்ண முடியாதவர்கள், எண்ணிக்கை யில் அடங்காதவர்கள். அந்த மஹானின் அதிஷ்டானத்தில் இன்றும் கஷ்டமென்று வருபவர்களின் மனக்குறை யெல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் ஓடி ஒளிந்து விடுகிறது'' என்று பக்தர்கள் சொல்வ தில் லவலேசமும் சந்தேகம் கிடையாது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...