Saturday, March 13, 2021

GEETHANJALI

 


கீதாஞ்சலி     ---   நங்கநல்லூர்  J K  SIVAN தாகூர்               

 34. இணைபிரியாத பிணைப்பு

34. Let only that little be left of me whereby I may name thee my all. Let only that little be left of my will whereby I may feel thee on every side
and come to thee in everything, and offer to thee my love every moment. Let only that little be left of me whereby I may never hide thee.Let only that little of my fetters be left whereby I am bound with thy will,
and thy purpose is carried out in my life---and that is the fetter of thy love

 
சிலர் எதையுமே சுருங்கச் சொல்லிப் விளங்க வைப்பார்கள். பெரிய பெரிய விஷயங்களைக் கூட சுருக்கமாக தெளிவாக புரியும்படியாகச் சொல்வார்கள்.   வார்த்தையின் பலம்  அது.  சிலர் சாதாரணமாக ராமன் தென்னை மரத்தில் ஏறினான் என்

பதை கூட ராமன் என்ன செய்தான் என்பதே கொஞ்சமும் புரியாமல் சொல்லக்  கூடிய வித்தகர்கள். நான் ரெண்டாவது ரகமாக இருப்பின் கிருஷ்ணன் என்னை மன்னிக்கட்டும்.

நான் எடுத்துக் கொண்ட  விஷயம் அப்படி.. 
ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி கொஞ்சம் மண்டையைக் கசக்கிக் கொண்டால் மட்டுமே புரியக்கூடியது. புரிய வைக்க என் சாமர்த்தியம் பயனளிக்கிறதா என்று படிப்பவர்கள் நீங்கள் தான் சொல்லவேண்டும். 

''கிருஷ்ணா, என்னை முழுதுமாகக் கரைத்து விடு. துளியூண்டு விட்டு வை. அந்த துளியூண்டு நீயாகவே இரு. அப்புறம் பார்,  நான் அந்தத்  துளியை விஸ்வரூபம் எடுக்க வைத்து நீதான் மொத்தமுமே என்று மார் தட்டிச் சொல்கிறேன்.

''என் எண்ணங்கள் , தீர்மானங்கள், முடிவுகள், மனோ திடம் எல்லாவற்றையுமே குறைத்துவிட்டு துளியூண்டு மட்டுமே பாக்கி வை. அது உன் பற்றிய ஒரே சிந்தனையாகவே இருக்கட்டும்.
 அப்புறம் பார்,  அந்த துளியூண்டை வைத்துக் கொண்டே நான் உன்னை எங்கும் எதிலும் காண்பவனாகி விடுவேன். என் எண்ணம் செயல் எல்லாம் நீயாகவே இருப்பதை உணர்வேன் உன்னையே எதிலும் நாடுபவனாக காண்பவ னாக, அறிபவனாகி விடுவேன். ஒவ்வொரு கணமும் என் அன்பை உன்மேல் கொட்டித் தீர்ப்பேன். 

என்னை துளியூண்டு மட்டுமாக்கி விட்டு மீதி எல்லாவற்றையும் எடுத்துக் கொள்  அப்போது தான் . உன்னை நான் எதனாலும்  என்னில் மறைக்க முடியாது. என்னிடம் எது மிஞ்சி இருக்கிறதோ அது நீ மட்டும் தான் என ஆகிவிடும். .

என்னைப் பார்த்தாயா, கிருஷ்ணா,  எத்தனை சங்கிலிகள் என்னைப்  பிணைத்திருக்கின்றன. நான் ஓடாமல் இருக்க ஒரே ஒரு சங்கிலி போதுமே. மற்றவைகளை எல்லாம் விலக்கி விடு. நான் எங்கும் ஓடப் போவதில்லை... ஒரே ஒரு சங்கிலி என்னை உன் சங்கல்பத்தோடு பிணைக்கட் டும். அதன் மூலம் நான் உன் கட்டுப் பாட்டில் கொஞ்சம் உலவுகிறேன். நீ ஆட்டி வைத்தபடி  எல்லாம் யோசிக்காமல் ஆடுகிறேன்.என் வாழ்வின் காரணம்  அப்போது தான் வெளிப்படும். அந்த ஒரு சின்ன சங்கிலி என்னையும் உன்னையும் இணைக்கும் பிணைப்பாக இருக்கட்டும். அதுவே நான் உன்மேல் வைத்த பாசம், அன்பு, நீ என்மேல் வைத்துள்ள பேரருள், பெருங்கருணை. உன் பேரன்பு. கிருஷ்ணா, நீ   இதைச் செய்வாயா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...