Sunday, March 28, 2021

SURDAS

 

ஸூர்தாஸ்  -   நங்கநல்லூர்  J  K  SIVAN --

29.  யார்  அவனைத்  தூங்க விட்டார் தாலேலோ?




ஆராரோ, ஆரிரரோ, என்று எல்லாக்  குழந்தைகளையும் போல் குட்டி  கிருஷ்ணனையும்  நினைத்து  அவன் அம்மா யசோதை,  தொட்டிலிலோ,   தூளியிலோ போட்டு  ஆட்டினாள் .   மற்ற குழந்தைகள் போல் அவன் இருந்தால் தானே அவனும் தூங்கி யிருப்பான்.  அவன் நடிகன். பிறவி நடிகன். தூங்குவது போல் பாவனைசெய்பவன்.  ஜாலக்காரன் அவன் தூங்கிவிட்டால் பிரபஞ்சமே தூங்கி விடுமே.  காவல்காரன் தூங்கி விட்டால் பாதுகாப்பு ஏது?  அவன் என்ன காசு வாங்கிக் கொண்டு கண்ணயரும்  கூர்க்காவா?

யசோதை ஹரியைத் தூங்கப் பண்ணுகிறாள்.  தெரிந்த  தாலாட்டுப் பாடல்களை எல்லாம் பாடிப் பார்த்தாள் . லேசில் தூங்கமாட்டானே.  நம்மை அறியாமை அஞ்ஞானம் எனும் தூக்கத்திலிருந்து தட்டி எழுப்புபவனை  அல்லவா அந்தத்  தாய்  தூங்கப்  பண்ணுகிறாள்!!  பட்டுக்குட்டி, செல்லக்குட்டி என்று அவனைக்  கொஞ்சுகிறாள், தடவிக் கொடுக்கிறாள், சில குழந்தைகளை  மெல்ல தட்டினால் அந்த சுகத்தில் தூங்கும். தட்டாவிட்டால்  கொட்ட க்  கொட்ட முழிக்கும்.   பாடுகிறாள்.  
ராமனை கோசலை தூங்க  வைக்க பாடினதை  கிருஷ்ணனுக்கு யசோதை பாடுகிறாள். அவன் தான் இவன் என்று அவளுக்கு  எப்படி தெரியும்.
'' நான்  ஏற்கனவே  கேட்ட பாட்டு  தான் பரவாயில்லை  கேட்டு  யுகம் ஆயிட்டுது. மறுபடியும் கேக்கறேன். நீ  உன் குரலில் பாடு''
கிருஷ்ணனும்  ரசிக்கிறான். சிரிக்கிறான். தூங்க மட்டும் முடியாது என்று விஷமம் பண்ணுகிறான்.

சிலகுழந்தைகள்கெட்டிக்காரர்கள். அம்மாவின் கர்ண கொடூர பாட்டை நிறுத்த வேண்டுமானால் உடனே நாம் தூங்கி விட வேண்டும்  என்று தெரிந்தவை. கண்ணன் விஷயத்தில் அப்படியில்லை. கோசலையே மீண்டும் வந்து பாடுவது போல் கிருஷ்ணன்  உணர்கிறான். பழைய ஞாபகத்தின் சுகத்தில்   மெதுவாக கண் இமைகளை மூடுகிறான்.

''என் செல்லத்திற்கு தூக்கம் வந்து விட்டது.  ஏ,  தூக்கமே   நீ ஏன்  சீக்கிரம் வரவில்லை?''    அவளுக்குக்  காரணம் தெரியுமா? தெரிந்தால் பாடுவாளா?

ஆகவே தூக்கத்தைக்  கெஞ்சுகிறாள்.  ''தூக்கமே  சீக்கிரம் வாயேன். என் கண்மணியை தூங்க வையேன். நாள் முழுதும் விஷமம் செய்துவிட்டு  ரொம்ப களைத்துப்  போயிருக்கிறான். கொஞ்சம் ஓய்வெடுக்க  வைக்கி றாயா?''
சில  குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்கும். உதடுகள் ஏதோ முணு  முணுக்கும்  சில அழும். உடனேசிரிக்கும்.   கடவுள் தாமரைப்பூ  காட்டி   விளையாடுகிறார் '' என்று என் அம்மாசொல்லிக்  கேட்டிருக்கிறேன்.

யாரோ ஒரு சேடி  ''அம்மா''  என்று கூவிக் கொண்டே  ஏதோ சொல்ல  யசோதையிடம் வருகிறாள்''  உதட்டின் மேல் விரல் வைத்து'  'உஷ்  மெதுவாக.   கிருஷ்ணன்  தூங்குகிறான்''  என்று  சொல்லி தன்னுடைய  பாட்டை நிறுத்துகிறாள் யசோதை.  மெதுவாக திரும்பிப்  பார்க்கிறாள்.  தொட்டிலில்...

கிருஷ்ணன் எழுந்து உட்கார்ந்து கொண்டிருக் கிறான். ''உம்...  பாடு  சாந்தா  பாடு ஏன்  பாட்டை நிறுத்தி விட்டாய்'' என்று  டயலாக்  பேசுவது  போல்  இருக்கிறது  அவன் பார்வை.

மீண்டும் மேலே எழுதியதைப்  படியுங்கள்.  ''ஆராரோ ஆரிரரோ.....    யசோதை  மீண்டும் பாடுகிறாள்.....
அவளுக்கு தான் எத்தனை சந்தோஷம் இப்படி கண்ணனைத்  தூங்க வைப்பதில்.

நாம் கிருஷ்ணன் காலத்தில் இல்லை என்ற குறை வேண்டாம்.  ஸூர்தாஸ்  கண்ணில்லாமலேயே நம்மை கோகுலத்திற்கு கூட்டிச் செல்கிறார். நாம் தான்  தொட்டில் அருகே நிற்கிறோமே.

Yasoda lulling Hari to sleep,
Shaking the cradle, cuddling and fondling,                                      Singing to Him a song.                                                                                                                                        
My darling is sleepy
Why doesn't sleep come along?
Come sleep, come quickly
Kanha for you does long.
Sometimes He closes His eyes
Sometimes His lips are aflutter.
Thinking He has fallen asleep
Yasoda stops her singing.
Awake still, He's up suddenly
Enjoying Yasoda's song.
Such joy as Yasoda feels
Is unattainable to the gods.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...