Friday, March 26, 2021

RAMA GEETHA 2

 ராம கீதை..   --   நங்கநல்லூர்  J K  SIVAN --

தஞ்சத்து எழுத்தச்சன்.  

                                   
                            ராமனின்  உபதேசம்.


ராமாயணத்தில்  ஆரண்ய காண்டம்  என்று ஒரு பகுதி.  அதில் ஒரு காட்சி.  
ராமனும்  லக்ஷ்மணனும்  சீதையை  இழந்து  தேடி அலைந்து  சுக்ரீவன் ஹனுமனை சந்தித்து  சீதையைத் தேடி  வானரவீரர்களை  அனுப்ப  காத்திருக்கிறார்கள்.  ஒரு நாள்  லக்ஷ்மணன்  ராமனை  தனியே கண்டு அவனிடம்  உபதேசம் பெறுகிறான். 

லக்ஷ்மணனுக்கு ராமன்  சில  தத்துவங்கள் உபதேசிக்கிறான்.  துளசி தாசர்  ஹிந்தியிலும்  எழுத்தச்சன்  மலையாளத்திலும் இந்த சம்பாஷணையை  விவரிக்கிறார்கள்.  நாம்  எழுத்தச்சனின்   மலையாள  உபதேசத்தை தான்  காண்கிறோம் இப்போது.  எழுத்தச்சன் கற்பனை  எப்படிப் போகிறது என்று பார்க்கவேண்டாமா?    இந்த உபதேசம்  ராமகீதா என்று பெயர் பெற்றது .   ராமாயணத்தில்  உத்தரகாண்டத்தில்   62  ஸ்லோகங்களை கொண்டது தான் ராம கீதை .  மலையாள  வார்த்தையை     ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறேன்.  ஸ்ரீ P. R. ராமச்சந்திரன் ஆங்கிலத்தில் இதை மொழி பெயர்த்திருக்கிறார்.

 Lakshman oru dinam  yekanthe  Rama devan,Trukkazhal  koopi vinaanwithanai  chonnan''
ஒருநாள்,  லக்ஷ்மணன்,   ராமன் தனித்திருந்தபோது  அவன்  திருவடிகளை நமஸ்கரித்து  பக்தியோடு என்ன சொன்னான்?
 
Mukthi margathhe   yarul cheyyanam, Bhakthanam   adiyanodu ajnanam neengum vannam,
Jnana  vijnana   bhakthi vairagya chihnamellam, Manasanandam varumaru  arul cheytheedenam,
Aarum  ninthiruvadiyozhinjillivayellam,Nerode yupadesicheeduvaan bhoomandale.”
Sri Raman  athu kettu Lakshmanan  thannodu appol, Aarudanandamarul cheythithu vazhipole .''

ஸ்ரீ ராமா,  என் போன்ற  ஞான சூன்யம் கூட  அறியாமை நீங்கி  புரிந்து கொள்ளுமாறு  மோக்ஷ மார்கத்தை, முக்தி மார்கத்தை கொஞ்சம்  சொல்லேன்'' ஞானம் என்றால் என்ன, பக்தி,  உலகத்தோடு ஒட்டாமல் என் மனம்  ஆனந்தமாக இருக்க என்ன வழி என்று உன்னைத்தவிர  வேறு எவரும்  சொல்வதற்கு  சரியான  குரு இல்லை''

''சரிடா  லக்ஷ்மணா  உனக்கு சொல்கிறேன் கேள்.''

“Kettalum yengilathu  guhyamam upadesam, Kettolam thernnu koodum vikalpa bramamellam,
Mumbinaal maya  swaroopathejnan  cholleduvan,  Ambodu pinne jnana sadanam chollamallo.
Vijnana sahithamaam jnanvum cholvan pinne,Vijnayam mathma sawaroopatheyum cholaamedo ,
Jneyamayulla pramathmanam ariyumbol, Maya sambanda  bhayamokke neengedumallo .”

 ''நான் உனக்கு சொல்வது பரம ரஹஸ்யம்.  கேட்ட பின்  உன்  மாற்றம், தடுமாற்றம் எல்லாம் மறையும்.. மாயை பற்றி முதலில் ஆரம்பிக்கிறேன்.  அப்புறம்  தெய்வீக  ஞானம் பெற்றால்  எப்படி உணர்வாய் என்பது பற்றி சொல்கிறேன்.  ஞானமும் விஞ்ஞானமும் விளக்குகிறேன்.   ஆத்மாவை எப்படி  உணர்வது என்றும் சொல்லித்தருகிறேன்.  ஆத்மாவை நீ உணர்ந்து விட்டால்  உலக மாயை தானாகவே  கழன்றுவிடும். அது பற்றி பயமோ சந்தேகமோ இருக்காது.  

“Athmavallatheyulla  dehadhi vasthukkalil, Atmavennulla bodham  yadonnu jagathraye,
Mayayakunnathu nirnayam athinale  ,Kaya sambandam aakum samsaram bhavikkunnu,
Undallo  pinne vikshepavarangal yennu,Randu roopam mayaykennariyuga, soumithre  nee,
Yennathil munnethallo lokathe kalpikunnathu, Yennariga  athi sthoola sookshma bedangalodum,
Lingadhibrahmanthamaam  avidhya roopamathum, Sangadhi  doshangale   sambhavi pikkunnathum.”

 நமது உடல் அதன் பாகங்கள்  எதுவுமே  ஆத்மா இல்லை.  ஆனால்  அது எல்லாமே  ஆத்மா மாதிரி  இந்த மூன்று லோகங்களிலும் தவறாக  நம்புகிறார்கள் அதற்கு  காரணம்  மாயை தான்.  அதனால்  ஆத்மாதான்  தேகம் என்று நம்புகிறார்கள்.   புரிதல் தவறாகிறது.  ஏதோ ஒரு திரை உண்மையை மறைக்கிறது.  இதெல்லாம் மாயையின் வேலை என்று முதலில் புரிந்துகொள் லக்ஷ்மணா.   உலகமே  சாஸ்வதம், உண்மை என்கிறமாதிரி தோற்றம்  தருகிறது.   காணும் யாவும் ஒன்றுக்கொன்று  மாறுபாடு  உடையவை.  ஒன்று மாதிரி இன்னொன்றில்லை.  பொய்யான  காட்சி தந்து  நல்வழிக்கெதிரான பாதை காட்டும்.   தேகத்தையே  சுற்றி சுற்றி வரும் இது நிரந்தரமானதல்ல.. ப்ரம்மத்தை  அடையச் செய்யாது.   ஆசை,கோபம், சுயநலம், ஆங்காரம்  இதையே  வளரச்செய்யும் தன்மையுடையது. 
 
Jnana roopiniyakum  vidhyayathu, Ananda  prapthi  hetha Bhootha yennarinjalum,
Maya kalpitham paramathmani  viswamedo, Maya kondallo viswam undennu thonnikkunnu,
Rajju  gandathingale  pannaga  budhi pole  ,Nischayam vicharikkil yetum onnillayallo ,
Manavanmaaral kana pettathum kelkkayathum, Manasathingal smarikka pedunnathumellam,
Swapna sannibham vicharikkil  allathu onnallo, Vibhramam kalanjaalum vikalpamudakenda.
 
ஞானத்தை  அறிவது தெய்வீக மான முயற்சி.  ஆனந்தத்தை பெற  உதவுவது. உலகம்  இதில்  அடங்காது என்றாலும்  மாயை அதை  நிரந்தரமானது போல், என்றும்  நம்பிக்கையானது போல்  காட்டி  ஏமாற்றும்.   இந்த உலகமே  அந்த  ஆத்மாவின் ஒரு  பகுதியாகக் காட்டும்,  எப்படி  அரை இருட்டில்  கயிறு  பாம்பாக காட்சி தந்து  மனதை கண்ணை  ஏமாற்றுகிறதோ அது போல். கானல் நீர் மாதிரி.  இல்லாததை இருப்பதாக காட்டும்.  சரியாக சிந்தித்து,  திடமான மனது கொண்டவன், தெய்வ பக்தி உதவியால்  இதை அறிந்து கொள்ளமுடியும்.   மனதின்  விளையாட்டு மனிதனை ஆட்டுவிப்பது.   சரியாகப்  புரிந்து கொண்ட
வனுக்கு  இது ஒரு கனவுத் தோற்றம்.   இதை  அகற்று,  தவறான புரிதலை  நிறுத்து.  


Janma samsara   vruksha moolamayathu deham, Thanmoolam puthra kalathradhi sambandamellam,
Dehamayathupancha Bhootha  sanchaya  mayam, Deha sambandam maya vaibhavam vicharichaal,
Indriya dasakavum ahankaravum  budhi, Manassum chitha moola prakrukruthi yennithellam,
Orthu kandalum orumichu irikkunnathallo. Kshethramayathudeham yennum undallo namam.
Yenivathingal ninnuveronnu jeevanathum, Nirnayam paramathma, nischalam niramayan,
Jeevathma  swaroopathe yarinjukolvanulla,Sadhanangale  kettu kolga soumithre nee.

 ஒன்று  நன்றாக கவனத்தில் வை.  இந்த  பிறப்பு எனும் மரத்தின் வேர் , அதன் கிளைகள் எல்லாமே   தேகம் தான். 
அதால் தான்  தாய்  பிள்ளை, மனைவி,   சகோதரன்  போன்ற  உறவெல்லாம்  விளைகிறது.   தேகம்  என்பதை  பஞ்ச பூதத்தின் சிறு  சேர்க்கை.  உடல்  மாயையின் உறவு, அதன்  ஒரு அம்சம் என்று எண்ணத்தொடங்கினால்  ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், அகம்பாவம், புத்தி  மனம்,  மூளை  இத்யாதி  விஷயங்கள் தனித்து விடும்.   அவை உண்மையான  ஆத்மா  இல்லை என்று புரிபடும்.    தேகத்திற்கு  க்ஷேத்ரம் என்று ஒரு பெயர் உண்டு.. மேலே சொன்ன அத்தனை  தடங்கல் களையும்  மீறி ஒரு சிறு  ஒளி உள்ளே  இயங்குகிறது. அது தான் ஆத்மா.  அது  நிரந்தரமானது, அழிவற்றது. எதனோடும்  சேராதது, எதுவும் தேவையற்றது. 

அருமை லக்ஷ்மணா,  ஆத்மா பற்றி மேலும் சொல்கிறேன் கேள். பயனடைவாய்.''   என்கிறார்  ஸ்ரீ ராமன்.


தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...