Thursday, March 18, 2021

geethanjali


 


கீதாஞ்சலி    --   நங்கநல்லூர்  J K  SIVAN ---

தாகூர்  


36. ''சேவை செய்ய சக்தியைத் தா''



''36. This is my prayer to thee, my lord---

strike, strike at the root of penury in my heart.
 Give me the strength lightly to bear my joys and sorrows
 Give me the strength to make my love fruitful in service.
 Give me the strength never to disown the poor 
or bend my knees before insolent might
Give me the strength to raise my mind high above daily trifles.
And give me the strength to
surrender my strength to thy will with love.''  

ரொம்ப  அற்புதமான  கீதாஞ்சலி பாடல் இது. தாகூரின் சொந்த  ஆங்கில மொழிபெயர்ப்பு. 
இப்போதும் கூட கீதையில்  கிருஷ்ணன்   சொல்லும் அறிவுரைகளைப் பலர் படித்து, மதித்து,   இரவும் பகலும்  மற்றவர்க்கு உதவி சேவை செய்து வருகிறார்கள். அவர்கள் தாள் தொட்டு வணங்குவோம்.  ''மக்கள் சேவைதான் மஹேசனுக்கு புரியும் சேவை''. ஜன சேவை தான் ஜனார்தனனுக்கு சேவை. Service  to  fellowmen  is  service  to  god .   

கீதாஞ்சலியில் தாகூர்,  கிருஷ்ணா என்று நேரிடையாக ஒரு இடத்திலும் அவன் பெயரை உரைக்கவில்லை, உச்சரிக்க வில்லை. கண்ணுக்குத் தெரியாத அவன் காருண்யம், அன்பு, செயல்கள், அவன் வேணுகான ஒலி, அவனது ஒளிமயமான அசைவு இதைத் தான் சொல்கிறார். என்னைப் பொறுத்தவரை நான் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை அல்ல. கீதாஞ்சலி என்று சொன்னாலோ, எழுதினாலோ கி
ருஷ்ணன் நாமம் இன்றி அது  என் மனதில் பதியாது. இணைபிரியாத இரண்டு அவை.  ஆகவே  தான்  என்  கீதாஞ்சலியில்  கண்ணன் தாராளமாக வருவான் போவான் இருப்பான், உங்களை அடைவான். 

''எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. 15-16 வயது பையன் நான். அடிக்கடி என் தந்தையார் இந்த கீதாஞ்சலி ஆங்கில வார்த்தைகளை அடிக்கடி உபயோகிப்பதன் விவரம் அப்போது புரியவில்லை. சரணாகதி லக்ஷணத்தை இதற்கு மேல் ஆங்கிலத்தில் சொல்ல முடியுமோ என்று தாகூரின் வரிகள் யோசிக்க வைக்கிறது.

''பகவானே கிருஷ்ணா, நான் உன்னை என்ன கேட்பேன்? எனக்கென்ன வேண்டும் என்று தானே? எனக்கு உன்னிடம் இருந்து என்ன வேண்டும் தெரியுமா, நீ எதை எனக்குத்  தரவேண்டும் என  அறிவாயா? என் இதயம் ஏழ்மையாக, பூஞ்சையாக, ஒன்றுமில்லாமல், நலிந்து கிடக்கிறதே , அதற்கு என்  துக்கம் சந்தோஷம் ரெண்டையும் ஒன்றாக ஏற்கும் சக்தியைக்  கொடு.

உபயோகமில்லாத ஞானப் பஞ்சமாக, ஞான சூன்யமாக இருக்கும்  என்  மனதுக்கு  உன் சக்தியை பலமாக கொடு. எதற்கு என்று கேட்கிறாயா வரிசையாக மறுபடியும் கூட சொல்கிறேன் எண்ணிக்கொள்.

1. என்னதான் சுகம் என்னை தேடி வரட்டுமே, எவ்வளவு பேரிடியாக துன்பம் என்னை சூழட்டுமே, அவைகளால் பாதிப்பு இல்லாமல் இன்பத்தையும் துன்பத்தையும் ரெண்டையும் சமமாக எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கு வரவேண்டும். சந்தோஷமோ, துக்கமோ என்னை விழுங்கி   ஏப்பம்  விடக்கூடாது. எது வந்தாலும் அதை சமமாக உணர்ச்சிவசப்படாமல் ஏற்றுக்கொள்ளும் சக்தியைத் தா. அதைக் கொடுக்கக்கூடியவன் நீ ஒருவன் தானே.**

 2.என் மனத்தில் அன்பு ஊறவேண்டும். ஊறிக்கொண்டே இருக்க வேண்டும். உன்னிடம் மட்டும் அல்ல. நீ படைத்த அனைத்து உயிர்களிடத்தும் கூட. பிரதி பலன், ஆதாயம் தேடாத, சுயநலம் அற்ற தூய அன்போடு நான் சேவை செய்யவேண்டும். அது அனைவருக்கும், அனைத்துக்கும் பயன்பட வேண்டும். அதில் கிடைக்கும் சந்தோஷம் எனக்கு வேண்டும். அப்படி அன்போடு உழைக்கும் சக்தியைத் தா.

3. வறியோர்க்கு, நிர்க்கதியாக தவிக்கும் உயிர்களுக்கு  ஓடிச்சென்று உதவும் சக்தி வேண்டும். எந்த அதிகாரத் துக்கும் தலை  வணங்காமல், கட்டாயம் எதற்கும்  அடிபணியாத தைரியமுள்ள இரும்பு இதயம் கொடு.  செயல்படுத்த சக்தியும் எனக்குத் தா.

4. பொழுது விடிந்தால் ஆரம்பித்து, இரவு மண்டையைப்  படுக்கையில் சாய்த்து தூங்கும் வரை அப்பப்பா ஒவ்வொரு நாளும் ஒரு யுகம். எத்தனை இன்னல்கள், தடங்கல்கள், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், கோபம் தாபம். என் மனம் இதையெல்லாம் தாண்டி தைரியமாக, தன்னம்பிக்கையோடு ''தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழமென்ன'' என்று ஒரே சீராக அமைதியாக ஆனந்தமாக துணிவோடு செயல்பட சேவை செய்ய எனக்கு தேவையான சக்தி உன்னிடம் தான் இருக்கிறது. அந்த சக்தியை எனக்குத் தா.

5. அவனருளால் அவன் தாளை வணங்க என்று ஒரு அற்புதமாக சொல் எங்கள் தமிழில் உண்டு.
''கிருஷ்ணா, அந்த அர்த்தத்தில் சொல்கிறேன். உன் திருவடிகளில் சரணடைய எனக்கு சக்தி வேண்டு மல்லவா? என்னாலியன்ற பரோபகாரத்தை மக்களுக்குச்  செய்வது தானே உனக்கு செய்யும் சேவை? நீ கொடுக்கும் அந்த சக்தியை உனக்கு மனமார்ந்த அன்போடு செலுத்த வேண்டாமா, அதற்கு அந்த சக்தியை நீயே எனக்கு கொடு கிருஷ்ணா, நான் பம்பரம், என்னை சுற்றி ஆடவிடுவது நீ அல்லவா. ஆட்டுவித்தால் ஆடுகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...