Tuesday, March 2, 2021

GEETHANJALI

  கீதாஞ்சலி    -    நங்கநல்லூர்  J K  SIVAN 

தாகூர்                                                            


 30. என் எண்ண எதிரொலி


30. I came out alone on my way to my tryst. 
But who is this that follows me in the silent dark? 
I move aside to avoid his presence but I escape him not. 
He makes the dust rise from the earth with his swagger; 
he adds his loud voice to every word that I utter.
 He is my own little self, my lord, he knows no shame;
 but I am ashamed to come to thy door in his company.
 
தெருவில் நாம்  நடக்கும்போது   எவரோ நம் பின்னாலேயே தொடர்ந்து நடந்து வந்துகொண்டிருந்தால்  நமக்குள் ஏதோ ஒரு  சந்தேகம், பயம் ஏற்பட்டு அடிக்கடி  அந்த  நபர் தொடர்கிறாரா என்று கண்காணிக்கிறோம்.  நடையை மாற்றுகிறோம், எங்காவது ஒரு இடத்தில் திரும்புகிறோம். அங்கும் தொடர்ந்தால் நமது சந்தேகம் வலுக்கிறது?  எதற்கு இந்த வேண்டாத நிழல்?

தாகூர்  இதை அனுபவித்து  எழுதுகிறார்.
யாரோ நம்மை பின் தொடர்கிறார்கள். நம்மை, நம் பேச்சை, செயல்களை, ரகசிய ஊடல்களைக் கூர்ந்து கண் காணிக்கிறார்கள் என்று தெரிந்தால் எவ்வளவு அசௌகரியமாக, சங்கடமாக இருக்கும். அதே தான். 
நான் எப்படியோ உன்னைச் சந்திக்க வேண்டும். அந்த எண்ணத்தோடு தான்  தனியே உன்னைத்தேடி வந்தவன். நீ அகப்படவில்லை, ஆனால் இந்த குளிரிலும், இருளிலும் துளியும் சப்தமே போடாமல் யார் என்னைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது?

நான் நின்றால் நிற்பது, நான் திரும்பினால் தானும் திரும்புவது, என் நிழலா? நிழல் இருளில் தெரியாதே. யார் இப்படி என்னைத்  தொடர்வது? சரி ,  யாரோ வேகமாக போவதற்கு நாம் இடையூறாக இருக்கிறோம் போல் இருக்கிறது.  வழி விட்டுத் தொலைப்போம்..    
அவ்வளவு அவசரமாக போவதாக இருந்தால் முன்னால் என்னை தாண்டி போகட்டும் என்று ஓரமாக நின்று வழி விட்டேன். அவனோ/அவளோ அதுவும் நிற்கிறது. சரியான கல்லுளி மங்கனா/ளா? என்னை விடமாட் டேன் என்கிறதே? 

எனக்குள் ஒரு ஆர்வம். அவன்/ள்  யார் என்று அறியாமல் விடப் போவதில்லை. அட்டகாசமாக அவன் டப் டப் என்று நடக்கும் அந்த அதிகார டாம்பீக தோரணையில் கால்களால் புழுதியைக் கிளப்பி விட்டு அல்லவோ செல்கிறான்? நான் சொல்லும் மிருதுவான வார்த்தைகளை உரக்க காது செவிடு பட எதிரொலிக்கிறான். எதற்கு உரத்த குரலில் பிரதி பலிப்பு?

ஓஹோ நீ வேறு யாரோ அல்ல. எப்படி என்னுடைய  நிழல் எனக்குள்ளேயே  மறைந்திருக்கிறதோ அது போல் அவன்  என்னுள் உறைபவன். அது நீ தான் கிருஷ்ணா.  என்னில் பாதி.   நீயே  'நான்'' என்கிற போது பயம் என்ன, வெட்கம் என்ன.  பெருமையாக  அல்லவா இருக்கிறது? 

 ''கிருஷ்ணா, என் தலைவா, பிரபு,  நீதான் அவன்.   என் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு, அவனோடு சேர்ந்து உன் சந்நிதி வாசலுக்கு எப்படி  நான் வருவேன்? இப்படி நினைக்கும்போது எனக்கு தான் என் மேலேயே வெட்கமாக, கஷ்டமாக இருக்கிறது. மனதில் எந்த பழங்குப்பையு மில்லாமல், உன் எண்ணம் ஒன்றுடனேயே தான் ''சுத்தமாக'' வர வேண்டும்.   ஒரு லாரி குப்பையை சுமந்துகொண்டா நான் உன் வாசலில் வந்து நிற்க முடியும். அதை நினைக்கும்போது தான்  எனக்கு   வெட்கமாக இருக்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...