Wednesday, March 24, 2021

GEETHANJALI

 

கீதாஞ்சலி     -   நங்கநல்லூர்  J K  SIVAN --
தாகூர் . 



   39.  காத்திட வா  கேசவா 


39.  When the heart is hard and parched up,
come upon me with a shower of mercy.
When grace is lost from life,
 come with a burst of song.
When tumultuous work raises its din on all sides shutting me out from beyond,
come to me, my lord of silence, with thy peace and rest.
When my beggarly heart sits crouched, shut up in a corner,
break open the door, my king, and come with the ceremony of a king.
When desire blinds the mind with delusion and dust,
O thou holy one, thou wakeful, come with thy light and thy thunder.


இது மழையா தூத்தலா?   சை .. விடாது நசநச என்று நாளெல்லாம் பெய்கிறதே என்று  முன்பு சொல்வேன்.  இப்போது  மழையே  நீ வேண்டும். ஏன் ரொம்ப நாளாகவே  உன்னைக்  காணோம்?  என் தெய்வமே  கிருஷ்ணா, நீ கருணை மழையாக வா. ஆனந்த ராகத்தோடு வா.

என் இதயம்  பாளம் பாளமாக  விரிசல் விட்ட  மழை  காணாத  வறண்ட  நிலமாகி விட்டதே.    வானத்தை உற்று நோக்குகிறேன். எங்குமே  கருமை கண்ணில் படவில்லை. தொடுவானம் வரை  கண்ணுக்கெட்டியவரை  எங்கும்  பார்த்துவிட்டேன். மலட்டு வானம். ஆடை  இல்லாத , நிர்வாண,  நீல,  நீளமான,  வானம்.  கொஞ்சமாவது ஒரு குட்டி மேகம்.. ஹுஹும்..   எங்காவது  மண் வாசனையை கிளப்பி விட  கொஞ்சம் தூத்தல்...ஹுஹும்.

கிருஷ்ணா, ஆக்ரோஷமான  சூறைக்காற்று போல்  கற்றை கற்றையாக   எண்ணப் புயல்கள் என் மனதில் எழும்பி,   என்னைத் திசை திருப்பி  உன்னிடமிருந்து   என்னை வெகு தூரம் பிரித்து விட்டது.    நீ அமைதியே உருவாக  காருண்யத்தோடு சப்தமில்லாமல் என்னிடம் வருவாயா?

நான்  பரம ஏழை.   என் மனம்  சக்தி இழந்து ஒரு மூலையில் நிர்கதியாக எண்ணங்களின் பிடியில் சிக்கி  அமர்ந்திருக்கிறது.

நீ என் ராஜா, ஒரு மஹா ராஜா, இதோ பார் என்னை.   மூடிய அறையில் மூலையில் சுருண்டு என் இதயம் நோஞ்சானாக கூனி குருகி தவிக்கிறதே. மூடிய கதவை படார் என்று உதைத்துத்  திறந்து உள்ளே வா என் மஹாராஜா, என் இதயத்தைத் தட்டிக் கொடுத்து உனது இருப்பிடமாக ஆக்கிக்கொள். 

ஓயாத எண்ணற்ற அலைபோல் என் ஆரவாரமான செயல்பாடுகள் என்னைப் பிடித்து தூரத்  தள்ளுகின்றன. நீ இருப்பதற்கு எதிர்ப்பாதையில் நான் செலுத்தப்படுகிறேன். அவற்றை பிளந்து நீ என்னருகில் வா கிருஷ்ணா, வா.  வா.   வந்து என் மனதில் அமைதியை நிரப்பு. அலைபாயும் இதயத்திற்கு அமைதியைக்கொடு . அதற்கு ஒய்வு தா.

எப்போதும் என் மனம் ஒரு இனம் புரியாத மாயை,  மயக்கத்தில்,  வாடி, ஆசைப்  புழுதியில் கண் இருண்டு , குருடாகி, புரள்கிறதே,    என் பரிசுத்த, பரிபூர்ண தெய்வமே,  நீ  வா, எழுந்திரு, விழித்துக் கொள். உன் பேரன்பு மின்னல் ஒளி கண்ணை ஒளி பெறச்செய்ய, தைரியம் ஊட்டும் இடியுடன் என்னைக் காத்திட வா கேசவா.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...