Sunday, March 21, 2021

PESUM DEIVAM

 

பேசும் தெய்வம் -- நங்கநல்லூர் J K SIVAN ---
'டங் டங் சாலா '
இப்போதைய சென்னை நெரிசலில் வீங்கி பலூன் மாதிரி வெடித்து விடும் அளவுக்கு பருத்து, பெருத்து விட்டது. அதுவும் டவுன் எனப்படும் பாரிஸ், கந்தசாமி கோயில் , பூக்கடை, சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கம் நடக்க முடிந்தால் அதுவே அதிர்ஷ்டம். பூங்கா பார்க் PARK என்று எந்தகாலத்திலோ பெயர்... இப்போது அது பூங்காவா? நான் சின்ன வயதில் மை லேடிஸ் கார்டன் my lady's garden , அங்கே தான் zoo இருந்ததால் அப்பா கை பிடித்துக் கொண்டு போயிருக்கிறேன்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டம் சென்ற வர்களுக்கு மின்ட் MINT எனப்படும் தங்கசாலை தெரியும். கோவிலுக்கு போகாத சென்னைவாசி கள் கூட ஒரு தரமாவது காசிக்கு போகாவிட் டாலும் சென்னை தங்க சாலைக்குள் நடந்து போயிருப்பார்கள். அங்கே யார் மேலாவது, எதன் மீதாவது இடிபடாமல் நடக்க வழியில்லை.
கஜகஜ வென்று மாடு இழுக்கும் பார கட்டை வண்டி, கை ரிக்ஷா வாய்நிறைய ரத்தக்கலரில் பான் சுபாரி நீள ஜிப்பா போட்ட வடக்கத்தியர் , சட்டையில்லாத, காலில் செருப்பில்லாத நமது லுங்கி டப்பா கட்டு ஆட்கள் நிறைந்த, வியாபாரிகள் கூடும் இடம். எல்லோரும் ஏதாவது ஒரு பெரிய சுமையை தூக்கியவாறு நடப்பார்கள்.
தங்கசாலை 17ம் நூற்றாண்டு கால நீளமான சென்னை நகர தெரு. தெலுங்கு பேசும் ,கோமுட்டி, பேரி செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்தார்கள். இன்றும் அந்த பரம்பரையினர், வம்சத்தினர் வியாபாரம் செய்கிறார்கள். இரும்பு சாமான், துணி, பாத்திர வியாபாரிகள் நிறைந்து இப்போது மார்வாரிகள், குஜராத்திகள், மற்றவர்களும் அவர்களோடு வாசம் செயகிறார்கள். அவர்களிடம் பக்தி குன்றவில்லை.
1841–1842 வாக்கில் கிழக்கிந்திய கம்பெனியார் ஆட்சியில் தங்க, வெள்ளி நாணயம் செய்யும் இடம் இங்கே உருவானது. உலோகங்களை உருக்கி நாணயம் வார்ப்படம் செய்யும் இடம் என்பதால் மின்ட் ஸ்ட்ரீட், தங்க சாலை என்ற பெயர் நிலைத்தது. அது அப்புறம் govt press , அரசாங்க அச்சகம் ஆயிற்று. இந்த தெருவின் வடகோடியில் வீராசாமி தெருவில் ராமலிங்க வள்ளலார் வாழ்ந்து , தினமும் கந்தசாமி கோவிலுக்கு நடந்து வருவார்.
தங்கசாலை பற்றிய சரித்திர தகவல் சொன் னேன்.. இனி மஹாபெரியவா பக்கம் வருவோம்.
ஒரு நாள் வழக்கம்போல காஞ்சி மடத்தில் நல்ல கும்பல். ஸ்வாமிகள் மௌன விரதம் இல்லை என்பதால் எல்லோருடனும் பேசினார். பல பக்தர்கள் அவர் எதிரே விழுந்து வணங்கி நின்று தங்களை, தங்கள் குடும்பத்தில் சிலரை பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
வரிசையில் வந்த ஒரு இளம் வாலிபன் வணங்கி ''பெரியவா, நான் வள்ளலார் நகரிலிருந்து வருகிறேன்'' என்றான்..
"வள்ளலார் நகரா?"
"ஆமாம் பெரியவா, தங்கசாலைக்குத்தான் அப்படி பெயர் மாறியிருக்கிறது.
''ஓஹோ வள்ளல் என்றால் பணத்தை வாரிக் கொடுக்க வேண்டும். வெள்ளைக்கார அரசாங்கம் பணம் நிறைய அச்சுப் போட்ட சாலை இப்போது வள்ளலாரின் ஊராகி விட்டதோ!"
" ஆமாம் பெரியவா தங்கசாலைக்கு இப்போது அது தான் பெயர் ''
''அதுசரி, தங்கசாலை என்றாயே, அப்படியென் றால் அங்கே பணம் அச்சுப் போடுகிற இடம் என்பது உனக்கு தெரியுமோ?"
"தெரியாது பெரியவா "
"தங்க சாலை என்றால் ஒருவேளை தங்கத்தினால் போட்ட ரோடு இருந்தது என்று நினைத்தாயோ?"
"தெரியாது பெரியவா. இப்போ தான் பெரியவா சொல்லி அங்கே வெள்ளைக்காரன் தங்கக்காசு தயாரித்ததால் அந்த இடம் தங்கசாலை என்று பேர் கொண்டது என்று தெரிஞ்சுண்டேன்.''
''அதுவும் தப்பு, தங்கசாலை என்று சொல்வது தப்பு '' மஹா பெரியவா சொல்லிவிட்டு புன்னகைத்தார்.
'' தெரியலை , நீங்களே சொல்லுங்கோ பெரியவா கேட்கிறோம்''
" நீ சப்த விடங்க க்ஷேத்திரம்'' என்று பெயர் கேள்விப்பட்டதுண்டா?''
''...........................'''
கைகட்டி வாய் பொத்தி ''தெரியாது' என அந்த வாலிபர் உணர்த்த தலை ஆட்டுகிறார். பெரியவா தொடர்கிறார்.
"டங்கம் என்றால் செதுக்கும் உளி . கற்சிலை அடிக்கிற உளி மட்டுமில்லை. தங்கத்திலும், வெள்ளியிலும் விக்ரஹங்கள், நகைகள்
செய்ய உபயோகிக்கும் கருவி. உளி மாதிரி. டங்கம் என்று பெயர்.
தேவ தச்சனான விஸ்வகர்மா டங்கம் எல்லாம் இல்லாமலேயே, மனது சங்கல்பத்தால் நினைத்த எதையும் உருவாக்கி விடுவான். டங்கமில்லாமல் செய்வது விடங்கமாக செய்வது. என்று பொருள்படும்.
விஸ்வகர்மா செய்த ப்ரதிமைகள், பிம்பங்கள், விக்ரஹங்கள் விடங்கமாக செய்ததால், திருவையாறு அதன் பக்கத்தில் ஆறு க்ஷேத்ர ங்களில் கோவிலில் உள்ள மூர்த்திகளுக்கு சப்த விடங்க மூர்த்திகள் என்று பெயர். வருஷா வருஷம் சப்த ஸ்தானம் உத்ஸவம் நடக்கும்.''
கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் நிசப்த மாக பெரியவா சொல்லும் விஷயங்களை சிரத்தை யாக கேட்டுக் கொண்டிருக்க அவர்களை ஒரு முறை பார்த்து விட்டு பேசும் தெய்வம் மேலே தொடர்கிறது..
''உன்னை தங்கசாலை பற்றி கேட்டுட்டு ஏன் விடங்கம் பற்றி பேச்சு மாற்றினேன் தெரி யுமா?"
ஒரு நிமிஷம் நிறுத்தி எவரேனும் பதில் சொல்கி றார்களா என்று காத்திருந்த போது அனைவரும் ஆவலாக சிலையாக நிற்கி றார்கள்.
"நாணயம் பண்ணுமிடத்தில் தங்கக்காசு செய்வ தால் அதற்குத் தங்கசாலை என்று பெயரென்று நினைத்தால் அது தப்பு. வெள்ளைக்



காரனின் காலத்திலே இப்போது போல் தங்கம் அதிக விலை இல்லா விட்டாலும் கூட தங்கக் காசை விட வெள்ளி, தாமிரம் முதலான மற்ற உலோகக் காசுதான் அதிகம் அச்சடித்து போட்டார்கள். அதனால் தங்க சாலை என்பதற்குக் காரணம் வேறே.
காசுகளில் சித்திரம்,எழுத்து இவற்றைப் பொறிப் பதற்கும், அதன் மாற்று,எடை எல்லாம் சுத்தமாய் இருக்கிறதா என்று பரிசோதனை பண்ண தட்டிப் பார்த்தே தெரிந்து கொண்டா ர்கள். உளி போன்ற ஒரு கருவியை நாணயங் களைத் தட்டி பார்க்க உபயோகித்தார்கள். "டங்கம்" என்றே அதற்கும் பெயர். காசு உலோகத்தில் உருக்கி வார்த்து அச்சடிக்கும் கிடங்கில் இப்படி நிறைய ஆட்கள் உட்கார்ந்து கொண்டு, காசுகளை டங்கத்தால் தட்டிச் சோதிப்பார்கள். அந்த ஓசை டங் டக் ,ஜல் ஜல் என்று வெளியிலே ஓயாமல் கேட்டுக் கொண்டி ருக்கும். அதனால் நாணயம் செய்யும் அந்த இடத்துக்கே "டங்க சாலா" என்று பெயர் வந்தது.ஸம்ஸ்கிருதப் பெயர், வடக்கத்தி சொல். நம்ம தமிழில் அதை தங்கசாலை ஆக்கி விட்டோம்.
"பொருட் செல்வத்தை வாரி வாரி அள்ளி கொடுத்தவர்கள் வள்ளல்கள்..அருள் செல்வத் தைத் தந்தவர் திரு அருட்பா பாடின ராமலிங்க ஸ்வாமிகள். அருட்செல்வம் கொடுத்த ராமலிங்க ''வள்ள"லுக்கு மரியாதை "ஆர்'' சேர்த்து ''வள்ளலார்" என்கிறோம்.
தங்கசாலைப் பெயரும் அநித்யமாகப் போய் நித்தியமான அருளைக் குறிக்கிற வள்ளலார் பெயர் அதற்கு வந்திருக் கிறது"
இதுதான் மஹா பெரியவா சிந்தனைக்கும் மற்றவர்கள் சிந்தனைக்கும் உள்ள வித்யாசம். என்ன ஞானம், எல்லையற்ற சமுத்திரம் அல்லவா மஹா பெரியவா..

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...