Thursday, March 4, 2021

GEETHANJALI

 கீதாஞ்சலி       --      J K  SIVAN 

தாகூர்                            


 31  கூண்டுக்கிளி


31 Prisoner, tell me, who was it that bound you?'
`It was my master,' said the prisoner. `I thought I could outdo everybody in the world in wealth and power, 
and I amassed in my own treasure-house the money due to my king.
When sleep overcame me I lay upon the bed that was for my lord, and on waking up
I found I was a prisoner in my own treasure-house.'
`Prisoner, tell me, who was it that wrought this unbreakable chain?'
`It was I,' said the prisoner, `who forged this chain very carefully.
 I thought my invincible power would hold the world captive leaving me in a freedom undisturbed.
Thus night and day I worked at the chain with huge fires and cruel hard strokes.
When at last the work was done and the links were complete and unbreakable,
I found that it held me in its grip.'

ரவீந்திரநாத் தாகூரை  ரசிக்க,  புரிந்து கொள்ள  கடினமாக  தோன்றலாம்.  அவர்  எழுத்தை  பத்திரிகைகளில்  வரும்
 கிசுகிசு  போல  எல்லோராலும் விரும்பி  படிக்க முடியாது.  ஏனெனில்  அவர் ஒரு வேதாந்தி.  ஆழமான,வளமான கற்பனையோடு  சிந்திப்பவர்.   அவர் சொல்லும் கருத்துகளை மூடி மறைத்தாலும் உன்னிப்பாக கவனித்தால் அவர் சொல்ல வரும் உயர்ந்த பக்தியும் சரணாகதியும்   வெளிப்படும்.

நான்  சங்கிலியால் பிணைக்கப்பட்ட  ஒரு கைதி.  
''அடேய் கைதியே, உன்னை  யாரடா  இப்படி  இரும்பு சங்கிலியால் கட்டி போட்டது?''
''வேறு யார்? என் எஜமானன் தான் ''
''ஏன் ?''
''என்னத்தைச்  சொல்வேன், எப்படிச்  சொல்வேன்?  எல்லாம் என் எண்ணத்தால் விளைந்த வினை. கர்வத்தால், ஆணவத்தால்  என்  மண்டை என்னை விட  பெரிதாக  வீங்கி இருந்தது.  நான் தான் உலகிலேயே  பெரியவன், என்னை விட  அதிகாரம் உள்ளவன்,  செல்வந்தன் வேறு எவனுமில்லை என்ற மமதை. என் ராஜாவுக்கு சொந்தமான சேரவேண்டிய  பணத்தை எல்லா வாரி சுருட்டி என்  கஜானாவில் வைத்துக் கொண்டேன்.
தூக்கம்  வந்து தொலைத்தது. எதிரே  ஒரு  பெரிய  சப்ரமஞ்ச கட்டில்.    அதைக் கண்டால் விடுவேனா? ஜம்மென்று அதில் விழுந்து படுத்து  தூங்கியே போய்விட்டேன்.
அப்புறம் என்ன?
கண்விழித்தபோது....நான் படுத்திருந்தது என் எஜமானன் ராஜாவின் கட்டில் மேல் என்று புரிந்தது. அதுமட்டுமா?  இத்தனைநாள் வரை  நான் திருடி  சேர்த்து சேமித்துவைத்திருந்த  ராஜாவின்  பணம் நிறைந்த பொக்கிஷ அறையில் நான் ஒரு இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்ட கைதி.
''ஏண்டா,  கைதியே,   இப்படிப்பட்ட  கெட்டியான, கடினமான  இரும்பு சங்கிலியை செய்தது யார்?

''கிருஷ்ணா, அதை ஏன் கேட்கிறாய்?   இந்த சங்கிலியை  செய்ததே நான் தான். இரவும் பகலுமாக  நெருப்பிலிட்டு  சம்மட்டி யால் அடித்து இரும்பை உருக்கி  வளைத்து செய்த படுபாவி.''
''ஏன் செய்தாய் இதை?"'
''ஹ்ம்ம்..  இந்த உலகத்தில் உள்ள  எல்லாவற்றையும் என் ஆளுமைக்கு கீழ் கொண்டுவரவேண்டும்.   எல்லாமே என் சக்திக்கு உட்பட்டு இ

ருக்கவேண்டும். என் அடிமையாக வேண்டும் என்று எண்ணம். பேராசை, நான்  மட்டுமே  தண்னிச்சை, சுதந்திரமாக  வாழ வேண்டும் என்ற சுயநலம்.  இப்படி எவராலும் உடைக்கமுடியாத  அவிழ்க்க முடியாத பெரிய  கெட்டியான, கனமான சங்கிலியை செய்தேன். கண கண கண வென்று  நெருப்பில் வாட்டி எத்தனை சம்மட்டி  அடி  என்னிடம் வாங்கி இருக்கிறது.ஒவ்வொரு வளையத்தையும் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு கோர்த்தேன் தெரியுமா?..
கடைசியில் என்னையே  பதம் பார்த்துவிட்டது இந்த சங்கிலி.  இப்போது  என்னை சுற்றி   அதுவே  வலை கெட்டியாக பின்னப் பட்டது போல் கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறது.  

கிருஷ்ணா, நான் எப்படி விடுதலை பெறுவேன்?  என் இதயம் வெடித்து விடும் போல் இருக்கிறது. ஒவ்வொருமுறையும் இதிலிருந்து  தப்ப நான் முயற்சிக்கும்போது,  என் பலஹீனம் தான் மிஞ்சுகிறது. தோல்வியை  விடாமல் தழுவுகிறேன்.   ஏன் எனக்கு இப்படி ஒரு நிலை?  என் தவறை உணர்கிறேன். என்னை  இப்படி ஆக்கியது  என் பாச, ஆசை. பேராசை,  நான் உண்டாக்கிய  பாசவலை, மோக சங்கிலி,  கானல் நீரைத்  தேடி ஓடிய என்னை இந்த  பந்தத்திலிருந்து விடுவிக்க உன்  ஒருவனால்  தான் முடியும்....                        

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...