Saturday, March 27, 2021

GEETHANJALI

 

கீதாஞ்சலி    -    J K  SIVAN 

தாகூர்.        

                    

  40.கருணை மழை பொழிவாய்  கண்ணா



40. The rain has held back for days and days, my God, in my arid heart.
 The horizon is fiercely naked---not the thinnest cover of a soft cloud, not the vaguest hint of a distant cool shower.    
 Send thy angry storm, dark with death, if it is thy wish, and with lashes of lightning startle the sky from end to end.
But call back, my lord, call back this pervading silent heat, still and keen and cruel, burning the heart with dire despair
Let the cloud of grace bend low from above like the tearful look of the mother on the day of the father's wrath.

''கிருஷ்ணா, ஏன் இப்படி செய்துவிட்டாய்? என்ன ஆயிற்று உனக்கு ? ரொம்ப நாளாக மழையை இங்கே அனுப்பாமல் ஏன் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறாய்? என் மன வானம்  இங்கே பாலைவனமாக ஆகிக் கொண்டிருக்கிறதே  ஒரு சொட்டு நீர்  காணோமே.  உனக்கு தெரியாதா?

மழை வந்தபோதெல்லாம்  நான்  சொல்வது  ஞாபகம் வருகிறது   ''சே  இது என்ன மழையா தூத்தலா?.. சை .. விடாது நச நச என்று'.   நாளெல்லாம் அழுகுணியா ...''   ஆனால்  இப்போது  '' மழையே நீ வேண்டும். ஏன் ரொம்ப நாளாகவே உன்னை காணோம்? என் தெய்வமே,  கிருஷ்ணா, நீயே   மழையாக வா. என் இதயம் பாளம் பாளமாக விரிசல் விட்ட மழைகாணாத வறண்ட நிலமாகி விட்டதே. வானத்தை உற்று நோக்குகிறேன். எங்குமே கருமை கண்ணில் படவில்லை. தொடுவானம் வரை பார்த்துவிட்டேன். மலட்டு வானம். ஆடை  இல்லாத நிர்வாண வானம்.  எங்கேயாவது துக்கிணியூண்டு  ஒரு குட்டி மேகம்.. ஹுஹும்..  மறுபடியும்  கொஞ்சம்  மண் வாசனையை கிளப்பி விட கொஞ்சம் தூத்தல் பெய்யாதா?  ...ஹுஹும்.
என்றைக்கு தான்,  ஒரு சொட்டு ஜலம் பூமியில் விழுமோ?

உன்னிடம் தான்  கோபமான கண் சிவந்த கோபக்கார  சூறைக்காற்று,  மரணப் புயல்கள் உண்டே, அவற்றை விரட்டி அனுப்பி மேகங்களை எங்கிருந்தோ கொண்டு  வந்து, மின்னல் சாட்டைகளால் வானத்தை ஒரு இடம் விடாமல் அடித்து  துரத்தி கொண்டுவந்து  பயமுறுத்தி மழை மேகம் சீக்கிரம்  பெய்ய வைக்கிறாயா?

ஹோ  என்று   சீறும் புயல்  இருண்ட கரு நிறத்தோடு மரண ஓலத்தோடு, உயிர்களை பலி வாங்க வரட்டுமே. அப்படி உன் விருப்பம் இருக்குமா? மின்னல் சாட்டையால் பளீர் பளீர் என்று வலிக்க வலிக்க தாக்குவாயா? ஆகாசத்துக்கும் பூமிக்குமாக நீண்ட சாட்டை அடியா? எதையோ செய். ஆனால் இந்த அமைதியான நீரற்ற நிலத்தில் வீசும் காற்றிலும் தெரியும்  நெருப்பு மாதிரியான உஷ்ணத்தை நீக்கு. உன்னிடமே இந்த வறட்சியை திரும்பப்  பெற்றுக்கொள். எங்களுக்கு வேண்டாம். அசையாமல் எல்லாம் வாடும் இந்த அவஸ்தை போதும். இது கொடிய செயல். இதயத்தை ஏமாற்றத்தால் எரிந்து துயரால் வாடி துடிக்க செய்யாதே.  ஒரு வித வெறுமையான பிடிப்பில்லாத நிலை. ஏமாற்றம், ஏக்கம் மட்டுமே அல்லவோ மனதில் நிறைந்திருக்கிறது.

கிருஷ்ணா,  உன் கருணை மேகம் மேலே யிருந்து பரந்து எங்கும் நிறைந்து என் தலை மேல் இடிக்கும் அளவுக்கு தாழ்ந்து வரட்டும்.  ஒரு காட்சி  என் கண் முன்  தோன்றுகிறது.  

என் அப்பா காச் மூச் என்று கோபத்தில் கத்தும் போது அம்மா பாவம்  பேசாமல்  கண்களில் ஜலம் தளும்ப தலையைக்  குனிந்து   தூணில் சாய்ந்து கொண்டு  வாய் பேசாமல் இருப்பாளே அந்த பார்வை  தான் இப்போது  என் பார்வை ..... உன்னை நோக்கி.

 உன் தயை, கருணை, அன்பு,  தாழ்ந்து இறங்கி வந்து,   என்  தலையைத்  தொடும் அளவு நெருங்கட்டும். நான் குனிந்து வணங்குகிறேன். நீயின்றி வேறு யாரப்பா  எனக்கு உதவ முடியும்?, மழை ரூபமாக, கருணை உருவமாக நீ வரவேண்டும். வா  வா  கண்ணா வா...

 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...