Saturday, March 20, 2021

GITANJALI

 


கீதாஞ்சலி - --  நங்கநல்லூர்   J  K  SIVAN  -----
தாகூர்  


  37.  பழையன கழிதலும் புதியன புகுதலும்  


37.  I thought that my voyage had come to its end
at the last limit of my power,---    
that the path before me was closed,
that provisions were exhausted and the
Time come to take shelter in a silent obscurity.      

But I find that thy will knows no end in me.
And when old words die out on the tongue    
new melodies break forth from the heart; and      
where the old tracks are lost,
new country is revealed with its wonders..


''கிருஷ்ணா,  நான்  யோசித்த போது  எனக்கு  என்ன புலப்பட்டது தெரியுமா ?  ஓஹோ, என் பிரயாணம், யாத்திரை, ஒரு முடிவுக்கு வந்து விட்டதோ? கடைசி துளி சக்தி இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டு இருப்பதால் சீக்கிரம்  என் பிரயாணத்துக்கு ஒரு முடிவு  வரப்போகிறதோ?  ஆஹா,  என் பாதையிலும்  இனி நான்  மேலே  தொடர முடியாமல்  வழி அடைத்து விட்டாயிற்றோ ?   நான்  வழிச்சாப்பாட்டுக்கு  சுமந்து வந்த  எல்லா  உணவுபொருள்களும்  சரக்கு  தீர்ந்து விட்டதே.

ஆகவே எனக்கு இருக்கும்  ஒரே  வேலை  இங்கேயே என் மூட்டையை இறக்கி விட்டு  பயணத்தை  நிறுத்தி  ''டிக்கானா '' போட வேண்டியது தான்.   என்னைச் சுற்றி  எங்கு பார்த்தாலும் நிசப்தம், அமைதி .  நான்  மூச்சு விடும் சப்தம் தான்  பலமாக கேட்கிறது என்றால்  பார்த்துக்  கொள்ளுங்கள்.  ஒரு  ஈ  காக்கை இல்லாத
 தனிமை. 

 கிருஷ்ணா, உனக்குத்  தான் எல்லாமே தெரியுமே, என் மனதில் நீ  எப்போதும் தொடர்கிறாய். என் சக்தியே  எப்போதும்  நீ தானே.  எனவே  எனக்கு எப்படி வரும் முடிவு? உன் சங்கல்பம் நான் தொடரவேண்டும் என்று இருந்தால் எனக்கும் என்  பிரயாணத்துக்கும்  முடிவு ஏதடா?

பழசெல்லாம் ஒவ்வொன்றாக மறந்து, பெயர், இடம்,  சொல், தேதி, நினைவு, எல்லாம்  மனதிலிருந்து கழன்று போய் விட்டது.    மனசு இப்போது காலி.   மனதில்  ஏதோ  ஒரு எண்ணம்  இருந்தால்  தானே அதை வெளிப்படுத்த  நாக்கு பேசும்.   அதற்கு பதிலாக  அற்புதமாக  ஒரு  புது  இனிய சங்கீதம் என் இதயத்திலிருந்து புறப்படுகிறது.  அந்த இனிமை உற்சாக மளித்து ஊக்கம் தருகிறது.

''கிருஷ்ணா,  பழைய பாதை முடிந்து போனால் போகட்டுமே? என்ன கவலை எனக்கு?  என் எதிரே  நீ  காட்டும் இன்னொரு புத்தம் புதிய பாதை   நீளமாக  எதிரே  தெரிகிறதே,   அதன் வழியே பயணித்து  நான் காணப்  போகும் அற்புதங்கள் அதிசயங்கள் உன்னருளால் எத்தனை எத்தனையோ!!,  நினைக்கவே  சந்தோஷமாக இருக்கிறதே.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...