Friday, July 9, 2021

GEETHANJALI

 


கீதாஞ்சலி -  நங்கநல்லூர்  J  K  SIVAN --
தாகூர் 


83.   இந்தா முத்து மாலை.

 
83.  Mother, I shall weave a chain of pearls for thy neck with my tears of sorrow.
The stars have wrought their anklets of light to deck thy feet,
 but mine will hang upon thy breast.
Wealth and fame come from thee and
 it is for thee to give or to withhold them. 
But this my sorrow is absolutely mine own, 
and when I bring it to thee as my offering thou rewardest me with thy grace.


என் கிருஷ்ணம்மா,  உனக்கு  ஒரு  ஸ்படிக முத்து மாலை அணிவிக்கப்  போகிறேன்.  முத்துக்கு எங்கே போவாய்?   என்று கேட்கவே வேண்டாம். என்  கண்களில் வற்றாத ஆறாக பொங்கியெழும் துயரக் கண்ணீர் துளிகள் எப்போதும் நிறைய  இருக்கவே இருக்கிறது.   கன்னத்தில்  இருந்து முத்து முத்தாக சொட்டுகிறதே. அதை பிடித்து நூலில் கோர்த்து உனக்கு ஒரு ஸ்படிகம் போன்ற முத்து மாலை எத்தனை வடம்   வேண்டுமானாலும்  ரெடி பண்ணிவிடுவேன்.

உனக்கென்னம்மா?  விண்ணிலுள்ள  தாரகைகள்  மணிமணியாக வைர ஜொலிப்போடு  உன் காலில் தண்டை, கொலுசுகளில்  வைரமணிகளாக  அழகூட்டும். ஆனால்  என்  முத்து மாலை உன் மார்பில் பதிந்து நிற்கும்.

உலகில்  செல்வம் வரும் போகும்,  வறுமையும் வளமையும்  ஒரு காசின் ரெண்டு பக்கங்கள் போல.   அளிப்பதும் நீ,   அவதிப்பட வைப்பதும் நீ,    உன் விருப்பம்.  இந்த  துயரம்  என்னை வாட்டுகிறதே  அது எனக்கே  சொந்தமானது. பிரத்யேகமாக நான் அனுபவிப்பதற்கென்றே   உன்னால்  எனக்கு  உருவானது.

ஆகவே  தான்  என்  துயரக்கண்ணீரை சேமித்து மாலையாக்கி  உன்னிடம் கொண்டு வந்து உனக்கு கழுத்து நிறைய அணிவிப்பேன்.  என் துயரம் அப்போதாவது நீக்கமாட்டாயா.  நிச்சயம் உன் கருணை  கிடைக்கும்.அது தான் என்  முத்துமாலையின்  விலை..  விற்கும் விலையில்லை. உன்னிடமிருந்து பெறும்  கருணை எனும் பரிசு.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...