Sunday, July 11, 2021

GEETHANJALI


 கீதாஞ்சலி  -  நங்கநல்லூர்   J  K   SIVAN தாகூர்.


84.    பிரிவும்   பாடலும்  


84. It is the pang of separation that spreads throughout the world
and gives birth to shapes innumerable in the infinite sky.
It is this sorrow of separation that gazes in silence all nights from star to star
and becomes lyric among rustling leaves in rainy darkness of July.
It is this overspreading pain that deepens into loves and desires,
into sufferings and joy in human homes;
and this it is that ever melts and flows in songs through my poet's heart.

தாகூர்  ஒரு அற்புத கவிஞன்.  இயற்கையை  அணு அணுவாக  ரசித்து  விழுங்கி  அற்புத சொல்லோவியமாக கவிதை வடிவில் தந்த  கலைஞன்.  நேரடியாக  சொல்லாமல் இயற்கையோடு இறைவனைப் பிணைத்து அவன் அளிக்கும்  காட்சிகள் என்றும்  நிலையாக மனதில் இடம் பெறுபவை. இல்லாவிட்டால் நோபல் பரிசு கொடுப்பார்களா?
தாகூர் மட்டும் எனக்கு போதவில்லை,  தயிர்  சாதத்துக்கு  ஆவக்காய்  தேடுபவன் நான்.  கிருஷ்ணனை பிடித்து உள்ளே  இறக்கி விட்டபிறகு   தான் தாகூரை என்னால் ரசிக்க முடிகிறது. கிருஷ்ணன் இல்லாமல் எனக்கு  கீதாஞ்சலி  திருப்தி அளிக்கவில்லையே என்ன செய்வேன்?

கிருஷ்ணா,  நீ யே  சொல் என்  நிலைமையை பார்த்து. எங்கும்  எதிலும் எவரிடத்திலும்  ஏதோ  ஒரு  பிரிவு தருவது   சோகமா  ஏக்கமா?.  பிரிவு உருவெடுத்து எல்லையில்லா   வானமெங்கும்  பல் வேறு ரூபங்களில் என்னை நோக்குகிறதே.   இரவில் தூக்கம் இழந்தவன் நான்.  கண்கொட்டாமல் வானில் நக்ஷத்திரங்களை  அமைதியாக  பார்க்கிறேன். கண் சிமிட்டி ஆயிரம் கேள்விகள்  பேசாமலேயே  என்னை கேட்கிறதே.   இந்த ஜூலை மாத  மழை மேகங்களின் ஊடே  காற்று சலசலப்போடு  மரங்களை  அசைத்து  இலைகள் என்னோடு என்னவோ பேசுகிறதே.   ஏமாற்றங்கள்  எதனால்,  நிறைவேறாத ஆசைகளால்,  எண்ணங்களால், எதையோ எப்போதோ இழந்த பிரிவு தந்ததால் அல்லவோ?  இது எனக்கு மட்டுமா, எண்ணற்ற இல்லங்களிலுமா? துன்பமும் இன்பமும் மாறி மாறி தான் வருமோ?சுகமோ  துக்கமோ  எதுவுமே  என்  மூலம் எப்படி வெளியே  பரவுகிறது என்று உனக்கு தெரியுமா கண்ணா? 

நான் கவிஞன் என்பதால் என் முடிவில்லா  பாடல்களிலா?  இதயம் வெடித்து சிதறலா? ஒருவேளை என் ஏக்கம்  உன் பிரிவிலா, உன்னைக் காணாததாலா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...