Wednesday, July 21, 2021

GEETHANJALI

 கீதாஞ்சலி  -  நங்கநல்லூர்  J K  SIVAN  ---

தாகூர் .


93.   விடை கொடுங்கள்...


93  I have got my leave. Bid me farewell, my brothers! 
I bow to you all and take my departure.
Here I give back the keys of my door---and I give up all claims to my house. 
I only ask for last kind words from you.
We were neighbours for long, but I received more than I could give.
Now the day has dawned and the lamp that lit my dark corner is out. 
A summons has come and I am ready for my journey.

என் சகோதர சகோதரிகளே, 
எனக்கு  விடுமுறை  கிடைத்து விட்டது.  வழக்கமான  விடுமுறை என்றால்  எங்கோ ஓய்வுக்கு உல்லாசமாக சென்று திரும்புவோமே  அந்த விடுமுறை அல்ல.  இந்த உலகத்தை   ''விட்டு''ச்  செல்வதற்கு என்னுடைய  ''முறை'' வரும்  இல்லையா?  அந்த  விடு-முறை.
என்னை வாழ்த்தி வழி அனுப்புங்கள். உங்கள் எல்லோரையும் மனமார  வணங்கிவிட்டு இதோ கிளம்புகிறேன்.
இதோ இந்த சின்ன சிகப்பு கலர்  பிளாஸ்டிக்  பையில் என் வீட்டின் கதவுகளின் சாவிகள் இருக்கிறது. இனி  இது என் வீடு அல்ல. எனக்கு பணம் வேண்டாம். நான் கேட்பது ஒன்றே ஒன்று.
கடைசியாக  எனக்கு உங்கள் அன்பான, கருணையான சில சொற்கள்.
நாம் இத்தனை காலம், தெரிந்தவர்களாக, அறிந்தவர்களாக, அருகே வசிப்பவர்களாக, ஒன்றாக இருந்தவர்களாக இருந்தோமல்லவா? இந்த நீண்ட  உறவில் நான்  உங்களிடமிருந்து பெற்றது தான் அதிகம். வெட்கமாக இருக்கிறது. நான் ஏதாவது கொடுத்தேனோ?

பொழுது விடிந்துவிட்டது.  முணுக் முணுக் என்று என் வீட்டில் அறையில் எரிந்து கொண்டிருந்த தீபம் அணைந்துவிட்டது.

எனக்கு ஆணை வந்துவிட்டது. நான் சென்றாக வேண்டுமே.  என்   வெறும் கை  பயணத்துக்கு நான்  தயாராகிவிட்டேன். கிருஷ்ணா நானுன்னை அடைவேனா?




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...