Saturday, July 17, 2021

geethanjali


 

கீதாஞ்சலி - நங்கநல்லூர் J K SIVAN ---தாகூர்.

89. ஏன் இந்த வெட்டி வேலை

89. No more noisy, loud words from me, such is my master's will. Henceforth I deal in whispers.The speech of my heart will be carried on in murmurings of a song.
Men hasten to the King's market. All the buyers and sellers are there.
But I have my untimely leave in the middle of the day, in the thick of work.
Let then the flowers come out in my garden, though it is not their time;
and let the midday bees strike up their lazy hum.
Full many an hour have I spent in the strife of the good and the evil,
but now it is the pleasure of my playmate of the empty days to draw my heart on to him;
and I do not know why is this sudden call to what useless inconsequence!

இனிமேல் என்னிடமிருந்து சத்தம் வராது. பலத்த சிரிப்பு வெடிகள் கிடையாது. எல்லாம் ஆவியாக மேலே பறந்து காணாமல் போய்விட்டது. இது என் சித்தமா முடிவா?. எல்லாம் என் கிருஷ்ணன் ஆட்டி வைப்பவை. இனி என் வார்த்தைகள் சுருக்கமானவை. காதில் சரியாக கூட கேட்க முடியாத மெல்லிய ரஹஸ்யங்கள்.. என் வார்த்தைகள் இசையாக வெளிவரும்.
ராஜா ஒரு பெரிய பண்டக சாலையை திறந்து வைத்துள்ளான். எல்லோரும் ஓடிச்சென்று அதில் தேவையானவற்றை தேடி எடுத்துக் கொள்கி றார்கள். விற்பவர்கள் சிலர் வாங்குப வர்கள் பலர். காலையிலிருந்தே கூட்டம்.
பரக்க பரக்க செய்து கொண்டிருக்கும் வேலைகளை அப்படியே பாதியில் போட்டு விட்டு நானும் ஓடுகிறேன். நான் சென்றது பட்டப்பகலில். நான் எப்போதுமே வாழ்வில் லேட் பேர்வழி. என் தோட்டத்திலும் என்னைப் போலவே சில மலர்கள். காலையில் பூக்க வேண்டியவை. இப்போது தான் தூங்கி எழுந்து கண்ணை திறக்கின்றன.
காத்திருக்கும் தேன் வண்டுகள் பகலானால் என்ன? தேன் எப்போது குடித்தால் என்ன? என்று பகலிலும் அதை மொய்க்கின்றன.
அங்கேயும் இங்கேயுமாக சுற்றி சுற்றி ஒருமணி நேரத்துக்கு மேல் பார்க்கிறேன். ஆஹா, தேவையற்றவை இவ்வளவா இருக்கி றது? இதை எல்லாம் என் மனதில் விருப்பமாக ஏற்றுக் கொள்ள அந்த புல்லாங்குழலோன், என் பழைய நண்பன், விடுவானா?
அவனையல்லவோ என் மனதில் நிரப்பிக் கொள்பவன். இதயம் நிறைப்பவன்.
எதற்கு இந்த ப்ரயோஜனமில்லாத வெட்டி வேலையில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்?என்னை அங்கே இழுத்து நிற்க வைத்து என்னை வேடிக்கை பார்த்தவனும் அவன் தான். வேறு யார் ?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...