Wednesday, July 14, 2021

geetanjali

 கீதாஞ்சலி   -   நங்கநல்லூர்  J K  SIVAN --

தாகூர் 


86  கடைசி காணிக்கை..


86. Death, thy servant, is at my door.
He has crossed the unknown sea and brought thy call to my home.
The night is dark and my heart is fearful, yet I will take up the lamp,
open my gates and bow to him my welcome. It is thy messenger who stands at my door.
I will worship him placing at his feet the treasure of my heart.
He will go back with his errand done, leaving a dark shadow on my morning;
and in my desolate home only my forlorn self will remain as my last offering to thee.

கிருஷ்ணா,  ஸ்ருஷ்டி,   ஸ்திதி,  சம்ஹாரம் இந்த மூன்றும் இல்லாத உயிர்கள் உலகிலேது?   
இதில் சம்ஹாரம் பயத்தோடு பார்க்கப்படுகிறது.  யாருக்கும் இறக்க விருப்பமில்லை. தோன்றினதெல்லாம்  வாழ்ந்து மறையத்தான் வேண்டும்.  மறைய  நீ அனுப்பும் தூதுவன் தான்   யமதர்மன்.   மரணம்.  அது இதோ என் வீட்டு வாசலில் வந்து நிற்கிறது..  உள்ளே வரவா?  இல்லை என்னை வெளியே வா அழைத்துப் போகிறேன் என்கிறது.   

 எங்கெல்லாமோ  கடல்களை தாண்டி, நடந்து பறந்து, ஊர்ந்து மிதந்து என் அட்ரஸ் சரியாக தேடி இதோ வந்து விட்டான்  உன் தூதுவன்.  உலகில் எல்லா இடமும், எல்லா ஜீவன்களும் அவனுக்குத் தெரிந்தவை தான். சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்துவிடுபவன்.  

இதோ எழுந்து கதவைத் திறக்கிறேன்.   வணங்குகிறேன் அவனை.  அவன் சாதாரணன்  இல்லை. உன் தூதன். என் வாசலில் வந்து  நிற்பவன்.  

நான் அவனை வணங்கி  என் இதயத்தில் போற்றி  உறைந்திருக்கும் என்  செல்வத்தை, அவனிடம் ஒப்புவிக்கிறேன்.  அதைப் பெற்றுக்  கொண்டு  வந்த வேலை முடிந்து உன் தூதன்  திரும்பி போகட்டும் . இதோ இந்த காலைப்பொழுதில்  ஒரு கருப்பு நிழல் மட்டும்  தான்  பாக்கி இருக்கிறது. அவனோடு  அதுவும்  மறைந்துவிடும்.   இந்த காலி  வீட்டில் இதோ  கடையாக எஞ்சியிருந்த  ஒரு  எவருமற்ற , தனியான ஒரு  ஜீவனும் தன்னை  உனக்கு பூரண  மனத்தோடு  காணிக்கையாக   கொடுத்தாகிவிட்டது.
அவன் வந்த வேலையை முடித்துக் கொண்டு திரும்பட்டும்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...